Saturday, March 6, 2010

உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.

சி.பி.எம். என்கிற போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த செய்திகள் பலவற்றை நாம் கடந்த சில நாட்களாக அறிந்தும் பேசியும் வருகிறோம். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்கிற ஐயப்பாடு அவருக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் மற்றும் உ.ரா.வ.வின் சகோதரி மூலமாகவும் சில வார ஏடுகளில் முன்வைக்கப்பட்ட்து. அவரது மரணத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் சி.பி.எம். கட்சியோ அல்லது அவரது மனைவியோ, அவரது மரணம் குறித்து விசாரணை எதுவும் இதுவரை கோரவில்லை. குறைந்தபட்சம் அவரத் மரணத்திற்கு தாங்கள் காரணமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகவேனும் அவர்கள் நியாயமான விசாரணை கோரியிருக்கலாம், அத்தகைய நேர்மையெல்லாம் பிழைப்புக்காக கட்சி நட்த்தும் அந்த்த் தலைமையிடம் இருக்க வாய்ப்பில்லை போலும்!

மாறாக அவரது மரணம் தற்கொலைதான் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியே வருகிறார்கள். ”வேண்டுமானால் அது தற்கொலைதான் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யட்டுமா...” என்று கேட்காத குறைதான். அட போலீசு இதுகுறித்து விசாரிப்பதில் நம்ம காம்ரேடுகளுக்கு என்னய்யா நட்டம் என்று சாதாரண ஆள் கூட கேட்பானா மாட்டானா?! அட, அவரது மரணம் தற்கொலையா கொலையா என்பது தெரிந்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவோம் என்று அன்றைக்கே (இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவரது தோழர்கள்...) கோரியிருந்தால், எண்ணி ஒருமணி நேரத்தில் கொலையாளி அனைவருக்கும் முன்பாக வந்திருப்பான். என்ன செய்வது, ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையதுதானா என்பதுகுறித்து உறுதி செய்துகொள்வதற்காக டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும் என்று ‘வெவரமாக’ கேட்கமுடிந்த சி.பி.எம். கட்சியினருக்கு, அவருடைய மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்ட்து ஏனோ?! இது ஏதோ தற்செயலாக நடந்த்து அல்ல என்பதும் அவரது மரணம் இன்னும் பல்வேறு வண்டவாளங்களை வெளிக்கொண்டுவரவிருக்கிறது என்பதும் இன்று சி.பி.எம். கட்சியினராலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பல பெண்களுடன் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்திருக்கும் பொறுக்கிகளாயிருந்தாலும் (ஆதாரம் உ.ரா.வ.வின் கடிதம்), கேட்கக் கூசுகின்ற அனைத்து வகை மோசடியையும் செய்பவனாயிருந்தாலும் நடவடிக்கை எடுத்திராத அக்கட்சி, இந்த வரதராசனுக்கு எதிராக கடமையாற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னணி குறித்து கேள்வியெழுவது இயல்புதானே? மாநிலச் செயலாளருக்கான போட்டிதான் அந்த கடமையின் பின்னணியாக இருந்திருக்கிறது. மாநிலச் செயலாளர் பதவியைக் குறிவைத்துவிட்ட உ.ரா.வ.வை அமைப்பு ரீதியாக ஓரம்கட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியதால்தான், அவருக்கு எதிராக ‘ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு போட்டியற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு இங்கு புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், போலும்!

வழக்கமாக, காங்கிரசு கட்சியின் கோஷ்டிகள் வெறும் வேஷ்டிகளைக் கிழித்துக் கொள்வதுடன் தங்களது பதவிச் சண்டையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல ஈரக்குலையறுக்கும் செயலை கோஷ்டி மோதலுக்கு பெயர்போன காங்கிரசார்கூட கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இது ஜெயேந்திரன் பாணியிலான செயல்பாடு. இதுதான் பார்ப்பனிய பாணியிலான ‘ஒழுங்கு நடவடிக்கை’யாகும். உ.ரா.வ.வின் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அக்கட்சி அமைத்த கமிட்டி முறையாக நடந்து கொள்ளாத்துதான் தன் மீதான ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர் தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதாக இல்லை.

இச்சம்பவத்தின் பின்னணியில் நேற்றையதினம் (04.03.2010 – வியாழக்கிழமை) அவருடைய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது மரணம் கொலையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவரது கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளமும் அதன் மூலம் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த்தாக தகவல். இந்த அறிக்கையினை மையப்படுத்தி மக்கள் தொலைக்காட்சியின் செய்தியில், உ.ரா.வரதராசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மரணத்திற்கு முன் உ.ரா.வ. சி.பி.எம். கட்சியின் கோஷ்டி சண்டையில் பழிவாங்கப்பட்ட வித்த்தையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான் சி.பி.எம். கட்சியின் குண்டர்கள் சிலர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் தலைமையில், இன்று (05.03.2010) காலை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அதன் ஊழியர்களின் மீதும், மேற்குவங்கத்தை (சிங்கூர், ந்ந்திகிராம், லால்கார்) நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் மக்கள் தொலைக்காட்சியும் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில், “நாங்கள்தான் கொண்றோம் இப்ப என்னான்ற?!...” என்பதுபோன்ற செய்தியை சூசகமாக இந்த கொடூரத் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள், நம்ம காம்ரேடுகள்!

இவ்விடயத்தைக் கேள்விபட்டபிறகு நேர்மையான தோழர்கள் எவரேனும் இன்னும் சி.பி.எம். கட்சியில் நீடித்திருப்பார்களேயானால், அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்கு இருக்கிறது.

சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைமை யோக்கியமானதாகவோ குற்றமற்றதாகவோ இருந்திருந்தால், உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான பிறகாவது, அது எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? மரணத்திற்கு முன் கடைசியாக உ.ரா.வ. தனது கட்சித் தலைமைக்கு எழுதிய கடித்த்தில், அவர் குற்றம் சாட்டியுள்ள உ.வாசுகி, பி.சம்பத், ஜான்சிராணி போன்ற அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் (அதாவது உ.ரா.வ.வைப் பொறுத்தவரை, அவரது துரோகிகள்...) புடைசூழ, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், ”உ.ரா.வ. தற்கொலை செய்து கொண்ட்தற்கான ஆதாரமாக அவர் எழுதிய கடிதங்கள் இருக்கும் போது, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை...” என்று இன்று மாலை (05.03.2010) உறுதியாக அறிவிக்கிறார்.

நீச்சல் தெரிந்த தங்களுடைய தோழர், ஒரு சிறு ஏரி நீரில் எவ்வாறு விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வியோ, ஏரி நீரில் மீட்கப்பட்ட பிணம் உள்ளாடையுடன் எடுக்கப்பட்டிருப்பது குறித்த (தற்கொலை செய்துகொள்பவர் இவ்வளவு தூரம் வெறும் உள்ளாடைகளுடன் வந்தா தற்கொலை செய்துகொண்டிருப்பார்...) கேள்வியோ, அந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவருக்குக் கூட ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அவரது சக தோழர்களான சி.பி.எம். தலைமைக்கு மட்டும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான இந்த தருணம் உள்பட...) இதுவரை தோன்றாத்தன் காரணம்தான் என்ன? இதுகுறித்து அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் யாராவது இருந்தால் யோசித்து விடைதேட வேண்டும்.

மாறாக தனது கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவரின் மரணம் குறித்து சில கேள்விகளை எழுப்பிய ஒரு ஊடகத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்துவதென்பது நேர்மையான செயலா? பொதுவாக இந்த ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்ட்தை நான் இப்பதிவினூடாக கண்டிக்க முயலவில்லை. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் எந்த விசயங்களையும் வெளியிடாமல் மோசடியாக இருட்ட்டிப்பு செய்வதோடு, அரச பயங்கரவாத்த்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்துறை பொறுக்கிகள் தாக்கப்படுவது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், இந்த தாக்குதல்கள், ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பதவிச் சண்டையினால் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் பதவி வெறியானது கொலைவெறியாக ‘மேல்நிலையாக்கம்’ அடைந்திருப்பதுவும், பின்னணியாக அமைந்திருப்பதுதான் இதில் மையப்படுத்தி விவாதிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய விசயமாக நான் கருதுகிறேன். அதேவேளையில், ஊடக ஜனநாயகத்தையும், ’பத்திரிக்கா தர்மத்தை’யும் பாதுகாக்கப் பிறந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிமார்க்சிஸ்டுகள், தங்களை பாதிக்கும் விசயம் எவ்வளவு நேர்மையான, உண்மையான விசயமாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முத்தாய்ப்பாக இருப்பதுதான் நமக்கருகாமையில் நடந்திருக்கும் இக்கொலைவெறி தாக்குதல்.

ஈழப் போராட்ட்த்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனத் திமிருடன் கட்டுரை எழுதிய மாலினி மாமியையும் அதனை வெளியிட்ட இந்து பத்திரிக்கையையும் கண்டித்து கோவையிலும் ஈரோட்டிலும் அப்பத்திரிக்கையினை எரித்து, போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை வன்மையாகக் கண்டிப்பதாக இரண்டு நாட்கள் தமது தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் எழுதிய சி.பி.எம். கட்சி; இதனால் பத்திரிக்கை சுதந்திரமே பாதிக்கப்பட்டுவிட்ட்தாக்க் கூப்பாடு போட்ட இந்த போலிக்கும்பல்; தமது சொந்த தோழரின் மரணம் குறித்து எழுப்ப்ப்படும் நியாயமான கேள்விகளுக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்கள் என்றால், இவர்களது கபடவேட்த்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று.

ஏன், சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க மாமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முட்டையாலடிக்கப்பட்டபோது ஏனைய ஓட்டுப் பொறுக்கிகள் எல்லோரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாக மாநிலக் குழுவைக் கூட்டி, நமது வழக்கறிஞர்களுக்கு எதிராக, “தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்ட்து...” என்று சிறிதும் கூசாமல் அறிக்கை விட்ட இந்த சி.பி.எம். தலைமை, உ.ரா.வ. குறித்து உண்மைச் செய்தியை வெளியிட்ட ஊடகத்தை பாய்ந்து பிடுங்குகிறது என்றால், இதன் பின்னணியில் உள்ள விசயங்கள் வேறு என்னவாக இருக்கமுடியும். ஆம், அது கொலைதான் என்பதுவும் அந்த கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்பதையும் இந்த தாக்குதலின் மூலாமாகவும் நிரூபித்திருக்கிறார்கள், போலிகள்.

ரெண்டு மூனு எம்.பி. சீட்டுக்காக ஜெயல்லிதாவிடமும் கருணாநிதியிடமும் மன்றாடிக்கொண்டிருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழகத்திலேயே இவர்களது நடவடிக்கைகள் இப்படியிருக்கிறதென்றால், முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் இவர்களது நடவடிக்கை எப்படியிருந்திருக்கும், கொஞ்சம் யூகித்துத்தான் பாருங்களேன்!, டாட்டாவுக்கு ஆதரவாக சிங்கூரிலும், சலீம் என்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக ந்ந்திகிராமத்திலும் இன்னும் லால்கார் உள்ளிட்ட மே.வங்கத்தின் பல பகுதிகளிலும் சாதாரண, எளிய, உழைக்கும் மக்களின் மீது கொடூரமான ஆயுதங்களுடன் கொலைவெறித்தாக்குதல் நடத்திவரும் இந்த போலி மார்க்சிஸ்டுகள்; இவர்களது செயலை அம்பலப்படுத்தி கண்டித்த மேதா பட்கர் போன்றவர்களின் மீது, கொலைவெறித்தாக்குதல் நடத்தினார்கள். மேதா பட்கர் சென்ற வாகனம் மே.வங்கத்து சிபிஎம் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி நண்பர்களிடம் கேட்டபோது தமது கட்சி எந்த நிலையிலும் தவறு செய்திருக்காது, என்று ஆழமாக நம்புவதாகத்தான் தெரிவித்தார்களேயொழிய, நியாயமான பரிசீலனைக்கு அவர்கள் வரவில்லை. உ.ரா.வ. விசயத்திலும், பெரும்பாலான சி.பி.எம். அணிகளுடைய மவுனம் கூட அவர்களது அடிமை மனோபாவத்தையும் அப்பாவித்தனத்தையும்தான் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

காஞ்சிக்கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராம் அய்யரைக் கொலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டபோது, ஜெயேந்திரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பலர் வெட்கித் தலைகுணிந்தனர். ஆனால், பெரும்பாலான பார்ப்பனர்கள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாகத்தான் தம்மைக் காட்டிக் கொண்டார்களே தவிர, அதே பார்ப்பன சமூமத்தைச் சார்ந்த, கொல்லப்பட்ட சங்கர்ராமனுக்கு ஆதரவாக இல்லை. இதற்கான நோக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து கவலைப்படாத அக்கட்சியினர் பலர், கொலையானாலும் தற்கொலையானாலும் அதனுடன் நேரடியான தொடர்புடைய அக்கட்சியின் தலைமை குற்றமற்றது என்று அட்டியின்றி ஏற்றுக் கொள்கின்றனர் என்றால் இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.

உ.ரா.வரதராசன், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை கிட்டதட்ட எல்லா வாரப்பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கின்றன. அதில், “ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டு. ஆனால், பல பெண்களுடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்ட மாநிலத் தலைவர்களுக்கும், மத்தியக் குழு உறுப்பினர்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, என்னை மட்டும் தண்டித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அக்கட்சியின் தலைமை வெட்கித் தலைகுணிந்த்தாகவோ பதில் சொன்னதாகவோ தகவலில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அக்கட்சியின் அணிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மாநில அளவிலான தலைவர்களில் சிலர் பெண்பித்தர்களாகவும் பொறுக்கிகளாகவும் நடந்து கொண்டிருப்பது மீண்டுமொருமுறை அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரின் மூலமாகவே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதைத்தான். கட்சியின் தலைமை இப்படி அழுகி நாறிக்கொண்டிருக்கும் போது கீழ்மட்ட அணிகளில் நேர்மையானவர்களின் நிலைமை பரிதாபகரமானது. இத்தகைய அயோக்கியர்களால் நிர்வகிக்கப்படும், சீரழிந்த தலைமைதான் கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையையும், நெறிப்படுத்தும் இயக்கத்தையும் நட்த்த்தவிருப்பதாக்க் கதையளக்கிறார், த.மு.எ.க.ச. தமிழ்ச்செலவன். யார், யாரை நெறிப்படுத்துவது?!

கேவலம் மாநிலச் செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கோஷ்டி சண்டையின் பின்புலத்தில் உ.ரா.வரதராசன் ’நெறிப்படுத்த’ப்பட்ட்தைப் போல, (அதே நேரத்தில் அப்பதவிக்கு போட்டியிடாத ஏனைய தலைவர்களின் அயோக்கியத்தன்ங்களைப் பொறுத்துக்கொண்ட்தையும் போல...) ஆங்காங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், இன்னும் வட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளுக்குமான கோஷ்டிகள் இல்லாமலா இருப்பார்கள்? அத்தகைய கோஷ்டிகளைக் கொண்டுதான் தமது கட்சி நெறிப்படுத்தப்ப்ட விருப்பதாக ச.தமிழ்ச்செல்வன் வெட்கமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ’ஒழுங்கு நடவடிக்கை’யின் மூலம்தான் ஏராளமான நேர்மையான அணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் கட்சியின் மானம் இப்படி காற்றில் பறப்பது குறித்த கையறுநிலையில், தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பதவி நாற்காலியை மையப்படுத்தி வெளிப்படையாக மோதிக்கொள்ளும் இந்த எச்சில் இலை நாய்களின் ஓலத்தைவிட, பெரும்பாலான உழைக்கும் மக்களின் அன்றாட அவலக்குரல்தான் நம்மை பிடித்தாட்டுகிறது. அவர்களை இந்த மோசடியான சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டம்தான் நமக்கு முன் நிற்கும் முக்கியக் கடமையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போலி ஜனநாயக சமூகத்தை முற்றாகத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை ஒரு புரட்சியின்மூலம் நிறுவுகின்ற நமது நெடிய போராட்ட்த்தில், நம்மை முன்னேற விடாமலும், எதிரிகளின் இலக்குகளை நெருங்க விடாமலும் இடையூறாக இருந்துவரும் எதிர்ப்புரட்சி-சீர்குலைவுக் கும்பலான போலிகளை அம்பலப்படுத்தி வீழ்த்த வேண்டியதும் அவசியமல்லவா? நிச்சயமாக வீழ்த்துவோம்!

பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத பிழைப்புவாத-பினந்தின்னிக் கூட்டத்துடன் இருக்கும் அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாகத் துண்டித்துவிட்டு, உண்மையான விடியலுக்காக, நியாயமான போராட்ட்த்தை நோக்கி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துப் போராட வாருங்கள் என்று, எஞ்சியிருக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை அழைக்கிறேன்!

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.

3 comments:

said...

தோழர்களே இதுகுறித்தான மேலும் பல தகவல்களுக்கு கீழ்கண்ட இணைப்புகளைப் பாருங்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் எமது குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பரிசீலித்து பதில்களைத்தாருங்கள்.

தோழமையுடன்,
ஏககைவன்.

1. உ.ரா.வரதராசனின் மரணமும் சிபிஎம்-மின் அரசியல் ஒழுக்கக்கேடும்!
http://www.vinavu.com/2010/03/05/wrv/

2. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! - பாகம் ஒன்று.
http://yekalaivan.blogspot.com/2010/02/blog-post.html

3. உ.ரா.வரதராசனின் மரணம் : சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும் பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்! - பாகம் இரண்டு.
http://yekalaivan.blogspot.com/2010/03/blog-post.html

said...

ஏகலைவன்,

இரண்டு கட்டுரைகளும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எடுத்து செல்லும் புரட்சிகர போராட்டங்களுடனும், இப்படிப்பட்ட அம்பலப்படுத்துகளூடனும் தான் சிபிஎம்-ன் நேர்மையான அணிகளை வென்றெடுக்கமுடியும்.

said...

தோழர் குருத்து அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உடனடியாக உங்கள் பின்னூட்டத்தை பதிப்பிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.
-----------------------------------

தொலைபேசி வழியாக என்னைத் தொடர்புகொண்ட மற்றொரு நெருங்கிய தோழர் ஒருவர், சி.பி.எம் குண்டர்களால் மே.வங்கத்தில் தாக்கப்பட்டது மேதாபட்கர்தானென்பதும், அருந்ததி ராய் அல்ல என்பதையும் சொல்லி அதனை உடனடியாகச் சரிசெய்யச் சொல்லி அறிவுறுத்தினார். அந்த தோழருக்கு இந்த பின்னூட்டத்தினூடாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் சுட்டிக்காட்டிய தவறு சரி செய்யப்பட்டுவிட்டதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அருந்ததிராயும்கூட தாக்கப்பட்டதாக ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தினூடாக நான் அறியவந்ததாக நியாபகம். அதனால்தான் இத்தவறு நிகழ்ந்துவிட்டது என்பதையும் தோழர்களுக்குத் தெரிவித்து சுயவிமர்சனம் ஏற்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.