Friday, March 12, 2010

சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!

அன்பார்ந்த தோழர்களே!

சென்ற வாரம் ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்த போது, நித்தியானந்தம் குறித்தும் பேச்சு வந்த்து. அவரும் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதால், தவிர்க்கமுடியாமல் சாருநிவேதிதா பற்றியும் பேசவேண்டியதாகிப்போனது. “சாருவையெல்லாம் நாம முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கத் தேவையில்லை தோழர்; அவன் அதையே ஒரு சுயவிளம்பரமா மாத்திக்கிட்டு, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ற ஆளு தான், அவன்” என்று வெறுப்பில் சொன்னார். உண்மைதான்.

செருப்புகளோடு எங்கேயாவது பெண்கள் இவனைத் துரத்தினால்கூட, “மேடம்ஸ், எல்லோரும் ஆளுக்கு ரெண்டு செருப்புகள் கொண்டு என்னை ஆசைதீர அடியுங்கள், ஆனால் ஸ்பென்சருக்குள் வைத்து அடிப்பதைவிட அப்படிக் கொஞ்சம் வெளியே மவுண்ட் ரோட்டில் வைத்து அடித்தீர்களானால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், அப்படியே அடிக்கும்போது உமனைசர்-சாரு, ஸ்கவுண்ட்ரல்-சாரு, பொறுக்கி ராஸ்கல்-சாருநிவேதிதா என்கிற வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தீர்களானால், பார்வையாளர்களுக்கு நான் கொஞ்சம் அறிமுகம் ஆகிவிடுவேன். அதைவைத்து நான் எப்படியாவது கொஞ்சம் பேர் சம்பாதித்துக் கொள்வேன்!

பேரும் பப்ளிசிட்டியும்தான் டப்பு பண்ண ஒரே வழி! நான் ஒரு பொறுக்கி மேடம்! தயவுசெய்து என்னை எல்லோருக்கும் தெரியறதுபோல அடிங்க மேடம்ஸ்! நான் தனியாள் இல்லை என்னை நம்பி மனுஷ்யபத்தரன்னு ஒரு ஹேண்டிகேப்டு ஜீவன் இருக்கு; கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்ஸ் ....”
என்கிற அளவிலானதுதான் அவன் தன்மீதான விமர்சன்ங்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அவனை ஊதாரி என்று அடையாளப்படுத்தினால், முந்திக்கொண்டு வந்து என்னைப்பற்றிய மற்ற எல்லா அயோக்கியத்தனங்களையும் தயவு செய்து சேத்துக்கோங்கண்ணா என்பான். அவனுடைய சொரணை மட்டம் என்பது இதுதான்.

(மேற்கண்ட ஸ்பென்ஸர் பெண்களின் செருப்படி நமது கற்பனைதான். இது உண்மையாவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் (அதாவது பொது இடங்களில் பெண்கள் கையால் செருப்படி வாங்குகின்ற வாய்ப்புகளை...) சாரு உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்...) அவனை விமர்சிப்பதில் ஒரு பயனும் கிடையாது; இருப்பினும் அவனுக்கும் ’கொள்கை’கூஜா தூக்க சிலபேர் இருக்கிறார்களே; அவர்கள் மத்தியில் அம்பலப்படுத்த அவன் மீதான விமர்சனம் தேவைப்படுகிறது. இலக்கியவாதி என்கிற போர்வையில் உழன்று கொண்டிருக்கும் இதுபோன்ற பொறுக்கிகளை நம்மைத்தவிர யாரும் அடையாளம் காட்டமாட்டார்கள்.

இந்த சாருநிவேதிதாவைப் பற்றி படிக்கும்போதே நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. உயிர்மை என்கிற கழிப்பறையில் அவன் இறக்கிவைக்கும் கழிவுகளைப் படிக்கும் போது நமக்கு ஆத்திரம்தான் மிஞ்சுகிறது. எதற்கெடுத்தாலும் “நான் அந்த பாரில் விஸ்கி அடித்துக்கொண்டிருந்தபோது......” என்றும் “கடற்கரையோரம் நண்பர்களுடன் சரக்குக்கு பெப்சி கலக்கிக்கொண்டிருந்தபோது.....” என்றும் “நான் ஒரு உமனைசர்...” (அதாவது பொம்பளை பொறுக்கி) என்றும் “பொண்ணுங்கன்னாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச்சிடும்ல்ல... எப்புடி...” என்பதாகவும் தான் வெட்கமின்றி எழுதிவருகிறான். குறிப்பாக அவனது சுயபுராணம் குறித்து எழுத எங்காவது வாய்ப்பு கிடைத்துவிட்டால், கிட்டத்தட்ட அவனது கட்டுரை முழுக்கவுமே இப்படிப்பட்ட கழிசடைக் கதைகள் நிறைந்திருக்கும். அவன் எதை எழுதினாலும் மாபெரும் இலக்கியம் என்று சொல்வதற்கு சில கூஜாக்கள் இருப்பதுதான் இவையெல்லாவற்றிற்கும் காரணம்.

நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் இன்னும் நித்தியானந்தனைக் காட்சிப்படுத்திக் கடைவிரித்து வருகிற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ”இதுவரை யாரும் பார்க்காத ‘அதிர்ச்சியூட்டும்’ புகைப்படங்கள்!” என்று சொல்லி கிளுகிளுப்புச் செய்திகளுடன் நக்கீரன் செய்திவெளியிட்டு வருகிறது. ஜெயேந்திரனாயிருந்தாலும் நித்தியானந்தனாயிருந்தாலும், இதில் கிடைக்கும் ஆபாச படங்களையும் வக்கிர செய்திகளையும் மேலும் பலமடங்கு மெருகேற்றி செய்திவெளியிட்டு காசுபார்ப்பதுதான் நக்கீரனின் ஒரே நோக்கம். அதற்குமேல் அவனுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.

ஆனா, மாட்டிக்கிட்ட சாமியாரு நம்மவாளா இல்ல அசலாரா என்று பதைபதைப்புடன் ஆராய்ந்து, நம்மவாளாக இருந்தால் மூடி மறைத்துவிடுவது அல்லது வேற்று சாதிக்கார சாமியாராக இருந்தால் சும்மா புகுந்து விளாசுவது என்கிற கொள்கைமுடிவோடு பார்ப்பன பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுகின்ற அயோக்கியத்தனங்கள் நாம் அறிந்ததுதான். மாட்டிக்கிட்ட சாமி எந்த சாதிக்காரனாயிருந்தாலும், மக்கள் முன் அம்பலப்படுவது இந்துமதமும் ஆன்மீகமும்தான் என்பது வேறுவிசயம். இந்துமத ஆன்மீகம் அம்மனமானால், பார்ப்பன சமூகம்தான் கோவனமின்றி வீதியில் அலைய நேரிடும். நித்தியானந்தன் ஒரு முதலியார் சமூகத்துக்காரன் அதனால்தான் பார்ப்பன பத்திரிக்கைகள் உவப்புடன் செய்தி வெளியிடுகின்றன, என்பது உண்மைதான். ஆனால், நித்தியானந்தன் என்கிற ஒரு ஆபாசப் பொறுக்கி சாமியாரின் சமூக அடையாளம் என்பது அவன் சாதி சார்ந்ததாக இல்லாமல், இந்துமதம் சார்ந்ததாகத்தான் வெளிப்பட்டு சந்தி சிரிக்கிறது. ஆனால், நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் ஏதோ காததூரம் இருப்பதாகத் திரித்து, மடைமாற்றி செய்தி வெளியிடுவதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு மட்டும் செயல்படுகின்றன பார்ப்பன ஊடகங்கள். நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்பதாகச் சித்தரிப்பதற்குத்தான் இந்துமக்கள் கட்சி, இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துப்பயங்கரவாத அமைப்புகள் போராட்ட நாடகங்கள் நடத்தினார்கள் என்பதும் உலகறிந்ததுதான்.


இன்றைய நித்தியானந்தனைப் போல நேற்றைய ஜெயேந்திரன் சிக்கிக்கிடந்தபோது, அதுகுறித்து நேர்மையாகச் செய்திவெளியிடாத, அதேநேரத்தில் ஜெயேந்திரன் நிரபராதி என்றும் திரித்து செய்தி வெளியிட்ட பார்ப்பன பத்திரிக்கைகள் இன்னும்கூட சந்தையில் நீடித்திருப்பது தமிழர்களின் உணர்வுமட்டத்தினால் நிகழ்ந்த விபத்து. இப்படியிருக்க இந்த வார ஜூ.வி.யில் ‘முற்போக்கு எண்ணம் கொண்ட பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியை ஜூவியிடம் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட சாரு நிவேதிதாவின் நேர்கானல் வந்திருக்கிறது.


”ஆதிசங்கர்ர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு வெளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்.” என்று சாருநிவேதிதா சொன்ன பதிலை ஒட்டிய அடுத்த கேள்வியிலேயே, அவனை ஒரு பெரியாரிஸ்டான நீங்கள் எப்படி நம்பினீர்கள்? என்று ஜூ.வி. கேட்கிறான். சாருவின் மனைவிக்கு இருந்த கால்வலியை நித்யானந்தர் கையால் தொட்டவுடன் வியாதி மாயமாகிவிட்ட்து; அதனால் அப்படியே சுவாமிஜியை நம்பிவிட்டாராம். “செக்ஸுக்கும் ஆண்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரம்ம் தொடங்கினா யாரும் வெட்டவாபோறாங்க?” என்கிற பொன்மொழிகளெல்லாம் ஜூ.வி.க்கு சாரு அருளியவை. தான் ஒரு உமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லியிருப்பதாகவும் அப்பேட்டியில் தொடர்ந்து பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா.

இப்போது விஷயம் என்னவென்றால், சாரு என்றால் யாரு என்று தெரியும். குடிகாரன், ஊதாரி, பொம்பளை பொறுக்கி என்று தன்னைப்பற்றி அவர் பலமுறை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு சூடு, சொரனை, வெட்கம், மானம் போன்ற, மனிதர்களுக்கெல்லாம் பொதுவாக இருக்கும் அடிப்படையான உணர்ச்சிகள் எதுவும் இல்லாத, வெறும் பாலியல் உணர்ச்சி ஒன்றை மட்டும் கொண்டிருக்கும் ஒரு நவநாகரீக விலங்கு தான் சாரு என்பது அவர் தன்னைப்பற்றி ‘பெருமைபொங்க’ வெளிப்படுத்திக்கொண்ட செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு ஒழுக்கம் கெட்ட ஒரு கேவலமான கழிசடையை, தன்னை ஆதிசங்கரனின் பக்தன் என்றும் சொல்லிக்கொள்பவனை, முற்போக்காளன் என்றும் பெரியாரிஸ்டு என்றும் உருவகப்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கும் ஜூ.வி.யின் பூணூல் கொழுப்பை எதைக்கொண்டு அடிப்பது?

ஊதாரி, பொம்பளைப் பொறுக்கி போன்ற அடைமொழிகளைச் சூடிக்கொண்ட சாரு நிவேதிதா தன்னை ஒரு ஆதிசங்கரனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருப்பதுதான் சரியானபொருத்தம். ஆதிசங்கரனது ‘தத்துவ’ங்களுக்குள் விழுந்து கரைகண்டு நுரைதள்ளிய ‘சுவாமி’,‘பெரியவா’, ஜெயேந்திரனின் கதைதான் உலகறிந்த இரகசியமாயிற்றே!

கொலை
கொள்ளை
கற்பழிப்பு
கஞ்சா மற்றும் எல்லா போதை வஸ்துக்கள்
மற்றும்
ஜெயேந்திரன் / விஜயேந்திரன் = ”ஆதிசங்கரனிசம்!”

ஊதாரித்தனம்
நிரந்தர போதை
காற்றிலாடும் கலர் துணியைக்கூடத் துரத்தும்
பொம்பளைப் பொறுக்கித்தனம்
மற்றும்
’அண்ணன்’ சாருநிவேதிதா = “ஆதிசங்கரனிசம்!”

ஆம்....
இதுதான் ஆதிசங்கரனிசம்!
இதுதான் ஆன்மீகம்!
இதுதான் இந்துமதம்!
இதுமட்டும்தான் இந்துமதம்!


இப்படியிருக்க, ஆதிசங்கரனுக்கும் நித்தியானந்தனுக்கும் தான் அடிமையாயிருக்கிற உண்மையை புளகாங்கிதப்பெருமையோடு பதிவு செய்திருக்கும் சாருவை; அந்த நேர்காணலில் எந்த இடத்திலும் பெரியாருக்கு ஆதரவாகவோ அல்லது தன்னை ஒரு பெரியாரிஸ்டு என்றோ சொல்லிக்கொள்ளாத சாருவை; பொம்பளைப் பொறுக்கி, குடிகார ஊதாரி என்று தன்னைத்தானே விளித்துக்கொள்கிற சாருவை யாருடன் அல்லது எந்த சித்தாந்தத்துடன் தொடர்புபடுத்தியிருக்க வேண்டும்? பார்ப்பன இந்துமத பொறுக்கிக் கலாச்சாரத்தோடு அச்சு அசலாகப் பொருந்திப் போகிற அந்தக் கழிசடையை, பெரியாரியத்தோடு இழுத்து வந்து கோர்ப்பது, ’சிண்டு’முடிவதில் பல்லாயிரமாண்டு அனுபவம் வாய்ந்த பரம்பரையில் வந்த ஜுவி, தமது தலைமுறைகளின் அனுபவத்தினூடாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்டிருக்கும் சிண்டுதான் இது.

பார்ப்பன ஜுவி, சாருவை பெரியாரிஸ்ட் என்று மேன்மைபடுத்த முயற்சிப்பதன் மூலம் பகுத்தறிவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் இழிவுபடுத்திவிடலாம் என்பது பாப்பார ஊடகங்களின் நுட்பமான தொடர்ச்சியான அனுகுமுறையாகும். ஜெயேந்திரனின் வழிவந்த நித்தியானந்தனை, ஜெயேந்திரனோடு பொருத்திப் பார்க்காமல் பெரியாருடன் ஒப்புமைப்படுத்தி இணையங்களில் எழுதிவருகிறார்கள், டோண்டூ ராகவன் உள்ளிட்ட பாப்பார பயங்கரவாதிகள். இந்த பார்ப்பனக் குசும்பு, நம்மைக்காட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் பெரியாரையும் சிறுமைப்படுத்த முயல்வதையும் நாம் உணர்ந்து மிகக்கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்.

இதனை வாசிக்கின்ற தோழர்கள் தத்தமது தளங்களது இதுகுறித்து ஒரு பதிவையாவது பதிய வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பறிக்கிற மறுகாலணியாக்கத் திட்டங்களை வானுயரப் புகழ்ந்து எழுதுவதும், அம்மக்களுக்கு ஏற்படும் துன்ப-துயரங்களை சிறிதும் இரக்கமின்றி மொத்தமாக இருட்டடிப்பு செய்வதில் முன்நிற்கும் இந்தியாவின் அனைத்து பார்ப்பன ஊடகங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதே பாப்பார ஊடகங்கள்தான் ஈழ மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டது என்பதை நாம் மறக்கமுடியுமா?


இப்படிப்பட்ட சமூகக் கேடுகளை அனைத்துத் துறைகளிலிருந்தும் நடத்திக்கொண்டு பல்வேறு வேடங்களோடு அலைந்து கொண்டிருக்கும் சமூகவிரோதிகளை, இந்துமதவெறிக் காலிகளை களத்தில் வீழ்த்தியழிக்கச் சபதமேற்போம்!


தோழமையுடன்,
ஏகலைவன்

2 comments:

said...

பெரியாரிஸ்ட்டை இதைவிட எவனும் கேவலப்படுத்த முடியாது.

http://vanakkamnanbaa.blogspot.com/

Anonymous said...

//////ச.தமிழ்ச்செல்வன் said...
March 12, 2010 9:27 AM
தோழர் ஏகலைவனுக்கு.. ///

ஐயா,
முதலில் எனது பின்னூட்டத்தில் ஒன்றையாவது வெளியிட்டமைக்கு நன்றி! அதற்கு ஒரு நாலு வரியில் வெளக்கம்கூட சொல்லியிருக்கிறீர்கள்; அதற்கும் கூடுதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி தொடர்ந்து...

/////ஆரம்பத்தில் எல்லாப் பின்னூட்டங்களையும் நான் ‘ஜனநாயகமாக’ வெளியிட்டுக்கொண்டுதான் இருந்தேன்.ரொம்ப அநாகரீகமான முறையில் கருத்திலும் மொழியிலும் வன்மம் மிகுந்த பின்னூட்டங்களை மட்டுமே நான் வெளியிடுவதில்லை./////

ஐயா, ஒருத்தன் தவறான வார்த்தையில் அல்லது அநாகரீகமான முறையில் வன்மமாகப் பேசியிராதபோது, அவன் அப்படிப் பேசினான் என்று புனைந்தால் அவனுக்கு எப்படியிருக்கும்? ஓஹோ இவரை இப்படித்தான் பேச வேண்டுமா என்று சிந்தித்து அதன் பிறகு வன்மமாக, அநாகரீகமாக பேச இறங்கிவிடுவான். நான் அவ்வாறு இறங்கவில்லை, ஒருபோதும் இறங்கமாட்டேன் ஐயா.

உங்களுக்கு நான் அனுப்பிய பின்னூட்டங்களிலேயே சற்று வன்மத்துடன் கோபத்துடன் அனுப்பிய பின்னூட்டம், இதோ இப்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த பின்னூட்டம்தான். இதில் அரசியல் எதுவும் இல்லை, சிபிஎம் கட்சியின் மோசடிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவே, ஐயா கருணாமூர்த்தி (நீங்கதான் வேற யாரு...) முந்திக்கிட்டு வெளியிட்டுட்டு, வன்மம் அது இதுன்னு வெளக்கம் கொடுக்கிறீங்க.

நீங்கள் இருட்டடிப்பு செய்த எனது மற்ற பின்னூட்டங்களை இங்கே வெளியிடுங்கள் உமது தளத்தின் வாசகர்கள் முடிவு செய்து சொல்லட்டும்.


/////உங்களைப்போன்ற தத்துவரீதியாக ஆழமான பார்வையும் அரசியல்ரீதியாக பெரும் முதிர்ச்சியும் பக்குவமும் கண்ணியமும் ஜனநாயக உணர்வும் ஆற்றலும் மிக்க சத்தியமிக்க மனிதர்களுக்கு கருத்துக்களை வெளியிட ஆயிரம் வாசல் இருக்கிறது.////

அண்ணே! இப்பத்தாண்ணே புரியுது! நீங்க எப்படி பொதுச்செலாளரா ஆனீங்கன்னு. இந்த மந்திரத்தத்தான் செலக்‌ஷன் கமிட்டியிடம் சொன்னீங்களா?! இந்தத் திறமை யாருக்குக்ம் வராதுண்ணே!!

அண்ணே! தமிழ்ச்செல்வன்னே!! இந்த நாற்காலி உங்களை எப்படி மாற்றியிருக்கிறது என்று இப்ப நினைச்சாலும் ஆச்சர்யமாத்தாண்ணே இருக்கு!!!


////என்னை விடுங்க சாமி.தொங்க விடுறதுக்கு நல்ல ஆளைப் பார்த்து வந்தீங்க.////

ஒரு ‘முற்போக்கு’ கம்பெனியின் பொதுச்செயலாளரான நீங்கள், விவாதிக்கக் கூப்பிட்டாக்கா “என்னை விடுங்க சாமீஈஈஈ.....” என்று விலகி ஓடுவது நேர்மையான ஒன்று அல்ல, ஐயா.