Monday, December 29, 2008

”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியைவிட சரத்குமாரின் ‘சமத்துவ...’கட்சியும் எவ்வளவோ மேல்” - ‘தோலர்’ கனகசாமி

அன்பார்ந்த தோழர்களே!

ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொக்கரிக்கும், சர்வ வல்லமையும் பொருந்திய சர்வதேச பயங்கரவாத முதலாளித்துவம், மோசடியையும் சூதாட்டத்தையும் ‘வளர்ச்சி’ என்று சொல்லி உலகை வளைத்த முதலாளித்துவம், அதன் அகில உலகத் தலைமையகமான அமெரிக்க தெருக்களில் இன்று ஊதி அனைத்து வீசப்பட்ட துண்டு பீடியைப் போன்று நைந்து கிடக்கிறது. இதனைக் கொண்டாடும் பொருட்டும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மேன்மேலும் எதிர்த்து வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் ”முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!” என்கிற முழக்கத்தோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, வருகிற ஜனவரி’25/2009 அன்று சென்னை-அம்பத்தூரில் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தவிருக்கிறது.

இதற்கான வேலைகளில் வீச்சாக ஈடுபட்டிருக்கும் எமது தோழர்களை வழிமறித்து தாக்குவதும், துண்டுப்பிரசுரங்களைப் பிடுங்கிக் கொளுத்துவதையும் “நக்சலைட்டுகள்....” பீதியூட்டியும் கேவலமாகக் கூப்பாடு போட்டு ஆட்காட்டி வேலை செய்து கொண்டிருக்கிறது போலிகம்யூனிச சி.பி.எம்.மும் அதன் பத்திரிக்கையுமான தீக்கதிரும்.

இந்த யோக்கியவான்களின் அரசியலை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் புகுந்து கொண்டு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ‘புரட்சி’ செய்யவிருக்கும் கேவலத்தை அவர்களது கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் கேட்டாலே பாய்ந்து பிடுங்குவது போன்ற ‘ஜனநாயக’த்தைக் கடைபிடித்துவரும் அக்கும்பல் எமது தோழர்களை கொலைவெறியோடு தாக்குவதும், “ஆயுதப்பயிற்சி செய்கிறார்கள்....” என்று பிதற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது, ஒன்றும் ஆச்சர்யமானதல்ல.இந்தியாவின் போலிஜனநாயகத்தையே உச்சிமுகர்ந்து பாராட்டிப் போற்றி வழிபடும் ‘காமரேடுகள்’ அவர்களது கட்சிக்குள் மட்டும் என்ன உண்மையான ஜனநாயகத்தையா வைத்திருக்க முடியும்?

அவர்களின் கேவலமான பிழைப்புவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நபர் யாராக இருந்தாலும் ‘நக்சலைட்’ பட்டம் வழங்கி கவுரவிக்கும் காமரேடுகள், நம்மை விடக் கூர்மையாக, நம்மைவிட நேரடியாக அப்பிழைப்புவாத முகாமைப் பார்த்து “கம்யூனிஸ்ட் கட்சியல்ல அது(சி.பி.எம்.) கந்துவட்டிக் கூடாரம் மட்டுமே” என்று அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய, திருநெல்வேலி மாநகரக் கட்சியின் செயலாளராக இருந்த கனகசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரையும் ’நக்சலைட்’ என்று தமது வழக்கமான முத்திரையைக் குத்தமுடியாது? ஏனென்றால் அவர் சிபிஎம் என்கிற கழிசடையின் மீது மேற்கண்டபடி விமர்சனம் வைத்துவிட்டு சரத்குமார் என்கிற கூவத்தோடு சங்கமித்திருக்கிறார்.



திருநெல்வேலி கனகசாமி முதல் சென்னை கே.கே.நகர் கட்டைப்பஞ்சாயத்து புகழ் காமராசு வரை சரத்குமாரிடமும் விஜய்காந்திடமும் சென்றடைவதற்கான காரணத்தை நாம் ஆராயவேண்டிய அவசியமில்லை, போலிகம்யூனிசக் கட்சியின் அடிப்படை எதார்த்தமே அதில்தான் இருக்கிறது. ஆனால், கனகசாமி அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஒருவரின் மீது வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் 1.1.2009 இதழில் வெளியாகியுள்ளதை நாம் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது. சிபிஎம் என்கிற ‘புனிதமான’ சாக்கடையின் குமட்டலெடுக்கும் கேவலங்களை இதனைப் படிக்கின்ற தோழர்கள் சகித்துக் கொண்டு தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



திருநெல்வேலி கனகசாமி வைக்கின்ற குற்றச்சாடு பலவாக இருந்தாலும் அதில் மையமான, சாரமான, கவனிக்க வேண்டிய குற்றச்சாட்டு மூன்று. அக்கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் பலர் வெளிப்படையாகவே கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற ரத்தம்குடிக்கும் தொழிலைச் செய்துவருவதையும் அதன் பொருட்டு நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு மையமாக அக்கட்சியின் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுவதையும் முதலாவதாகக் கொள்வோம். இரண்டாவதாக, அக்கட்சியில் சாதிப் பாகுபாடு, தேவர் ஆதிக்க சாதிவெறியும் வெளிப்படையாக இருப்பதாகவும் சொல்கிறார். மூன்றாவது குற்றச் சாட்டுதான் மேற்கண்ட இரண்டையும் விட அதிகம் குமட்டலெடுக்கும் வகையில் இருக்கிறது. அது, மாநில அளவிலான தலைவர்கள் அதே கட்சியினைச் சேர்ந்த மாதர் சங்கத்தைச் சார்ந்த பெண்களுடன் கட்சி அலுவலகத்தையே லாட்ஜாக மாற்றிக் கொண்டு பாலியல் உறவுகொள்வதாகவும் சொல்லியிருப்பது.

இதனை அவரது வார்த்தையிலேயே கேட்போம். “பொதுவாக சமூக விரோதிகள், பெருநிலக் கிழார்கள், குடிகாரர்கள், கந்துவட்டிக் காரர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது விதி. ‘நாளை எண்ணி வட்டி சேர்க்கும் நாய்களுக்கு இங்கு இடமில்லை’ என்று நாங்கள் பாட்டுப்பாடியே கட்சி வளர்த்தோம். ஆனால், நெல்லையிலோ நிலைமை தலைகீழ். கட்சியின் உயர்பதவியான மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான் தலைமையில் ஒரு கந்துவட்டிக் குழுவே இருக்கிறது. இவர்களுக்கென உள்ள ஓர் ஏஜெண்ட் இவர்களது பணத்தை பத்து சதவிகிதத்திற்கு வட்டிக்கு விட்டு ஐந்து சதவிகிதத்தை இவர்களுக்குக் கொடுக்கிறார். குழந்தைவேலு என்கிற தீக்கதிர் ஏஜெண்ட், பல லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தைக் காப்பாற்றவே கட்சிக்கு வந்தவர். இதெல்லாம் பற்றி மாவட்டச் செயலாளர் பழநியிடம் சொன்னால் ‘அது மாற்றுப் பொருளாதார ஏற்பாடுதானே?’ என்று அவர் அலட்சியமாகச் சொல்லி வந்தார்....”

”இந்த கனகசாமி, சிபிஎம் கட்சியை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்துவதற்காகவே இப்படி இட்டுக்கட்டி சொல்லியிருக்கிறார்”, என்று கூட இப்பதிவினைப் படித்தபிறகு வெட்கம் சிறிதுமின்றி அவர்களது தீக்கதிர் எழுத வாய்ப்பிருக்கிறது. ஆனால், கருணாநிதியிடமிருந்து வெளியேறி ஜெயாமாமியின் முந்தானைக்குள் தமது அரசியலை முடிந்து வைப்பதற்காக இவர்கள் பேசியும், எழுதியும் வரும் காரணங்களில் இருக்கின்ற வெளிப்படையான போலித்தனம் எதுவும் திருநெல்வேலி கனகசாமியின் வார்த்தைகளில் இல்லை. இதனை நான் சொல்ல வில்லை, கனகசாமி யார்மீது குற்றச்சாட்டு வைத்தாரோ அந்த கருமலையானின் பதிலைப் படித்தாலே அந்த குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மை தெரிகிறது.

“கனகசாமி ஒரு அப்பாவி. சூதுவாது தெரியாதவர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், கட்சியிலுள்ள பெண்களைப்பற்றி அவர் தவறான சில கருத்துக்களைச் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது. சில தோழர்கள் சில பெண்களைக் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். வரம்பு மீறக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அவர்கள் வீடுகளில் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறோம். அதைத்தான் கனகசாமி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.



கந்து வட்டியைப் பொறுத்தவரை அது மாவட்ட மாநாடுகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைதான். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தக்கம். பணத்தை வட்டிக்கு விடுவதை எப்படி மறைக்க முடியும்? பூனைக்குட்டி வெளியே வந்துவிடாதா? கட்சியில் சாதியிசம் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள நாடார் மற்றும் தலித்துகளின் பட்டியலை உங்களுக்கு நான் தரத் தயார். தோழர் கனகசாமி ஏன் இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை” என்று கருமலையான் சோகமே உருவாகச் சொல்லி முடித்திருக்கிறார். இந்த மானங்கெட்ட பதில்கள் மேற்கண்ட கனகசாமியின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இல்லாமல் அதனை மேன்மேலும் வலுப்படுத்துவதாகத்தானே இருக்கிறது?

பிழைப்புவாதத்திலிருந்து பாசிசத்திற்கு சீரழிந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியில் இன்னும் கொள்கை என்று ஏதாவது மிச்சமிருக்கமுடியுமா? சக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைவிடக் கேவலமாக மக்கள் மத்தியில் அவமானப்பட்டு வரும் அக்கட்சியினை ”உட்கட்சி போராட்டம் நடத்தி மீட்டெடுத்து விடுவேன்” என்று உறுதியாக நம்பும் தோழர்கள், தாம் இவ்வாறு நம்புவதற்கான நேர்மையான காரணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அக்கட்சியில் உங்களை ஒட்டிக் கொண்டிருக்க வைத்திருக்கும் அவலம் என்னவாக இருக்கலாம், அது வேறொன்றுமில்லை தமது கட்சியின் நேர்மையான அணிகளை அரசியல் படுத்தாமல் ‘பாதுகாப்பாக’ வைத்திருப்பதில்தான் சிபிஎம் கட்சியின் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமாக இருக்கிறது.


தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

படங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் 01.01.2009 இதழிலிருந்து பதியப்பட்டது.

Saturday, December 27, 2008

சி.பி.எம். அம்பிகளின் தீக்கதிரும், பத்திரிக்கா தர்மமும்......

சி.பி.எம். கட்சியின் கேவலமான அரசியல் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய தோழர் ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “மீண் கெட்டு அழுகும்போது அதன் தலைப்பகுதியிலிருந்துதான் அழுகத் தொடங்கும் அதேபோல இந்த போலிகம்யூனிஸ்டுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் அழுகுனி அரசியலும் அதன் ’தலை’மையிலிருந்தே அழுகத் தொடங்கியிருக்கிறது தோழர்....” என்று அற்புதமாகச் சொன்னார். இத்தனையாண்டுகாலம் அக்கட்சியின் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று நம்பி ஏமார்ந்த விரக்தியில் அவர் ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய கருத்து இது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்ப்பன-இந்துவெறி செய்திகளை விதைக்கும் இந்து நாளேட்டில் அப்பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதி என்பவர் ஈழ அரசியல் போராட்டம் குறித்து சில அவதூறு கருத்துக்களை எழுதியிருந்தார். ஈழ மக்களின் துயருக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை தனது பார்ப்பனக் கண்ணோட்டத்தால் கேவலாமகச் சாடியிருந்தார். இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையில் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு நகரில் அதே அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அப்பத்திரிக்கைக்கு தீவைத்து கொள்ளுத்தும் போராட்டத்தையும் நடத்தினார்கள்.

உடனே பார்ப்பன அம்பிகள் கையில் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழக ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்கள் அமைப்பும் பெ.தி.க. தோழர்களின் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்தன. கோவையில் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து அத்தோழர்கள் ‘பத்திரிக்கா தர்மத்து’க்குத் தடையாக இருப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அவ்வளவுதான். ஆனால், ஈழ அரசியலில் புரட்டுக்களை எழுதி ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போலிகள் என்றும் சாடி எழுதியிருந்த அப்பத்திர்க்கையினைக் கண்டிக்கத்திராணியற்றுக் கிடந்த போலிகம்யூனிச கழிப்பறையான தீக்கதிர், பெ.தி.க. தோழர்களைக் கண்டித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தலையங்கமே எழுதியது.

அதே இந்து நாளேட்டில் பார்ப்பன-இந்து பயங்கரவாத கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட போது அது குறித்து எந்த கருத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டாத இந்த போலிகம்யூனிச அம்பிகள் கூடாரம், ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை நோக்கி வசைபாடுவதற்கு அந்த பார்ப்பன-இந்துவெறிப் பத்திரிக்கையோடு தோளோடு தோள்நின்றது கடுமையாகக் கண்டிக்கத்த்க்கது. அதே இந்து நாளேட்டின் என்.ராம் அக்கட்சியின் பொலிட்பீரோவைவை விட அதிக அதிகாரம் படைத்தவர்; என்கிற நிலையில் தீக்கதிர் இரண்டு நாளோடு தனது அவதூறுகளை நிறுத்திக் கொண்டதே ஆச்சர்யமான விசயம்தான்.

ஈழ அரசியல் குறித்து இந்து பத்திரிக்கையின் நிலைப்பாடு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அதனை எதிரிகளோடு ஒன்று சேர்த்து ஒதுக்கித்தள்ளிவிடலாம். ஆனால், அந்த பார்ப்பன-இந்துதேசியக் கொழுப்பெடுத்த அவதூறுகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு இங்கு விஷத்தை விதைக்கத் துணைநிற்கும் துரோகிகளான போலிகளை என்ன செய்வது? போலிகளை இப்படி அரசியல் ரீதியாக ஏதாவது நாம் விமர்சித்து எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால், “மறைமுகத் தலைமை.....” என்று பிதற்றுவது, ஆயுதங்களுடன் வந்து சாமியாடுவது என்று தங்களது இயலாமையைக் கடைவிரிக்கின்றனர்.

இப்போது எமது அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வருகிற 25 ஜனவரி-2009 அன்று நடத்தவிருக்கும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்’டிற்காக பிரச்சாரம் செய்து நிதி வசூலித்துக் கொண்டிருந்த தோழர்கள் மீது பேடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்திவிட்டு, எமது தோழர்களின் அரசியல் ரீதியிலான எதிர்வினையைத் தாக்குபிடிக்க முடியாமல் பார்ப்பன-இந்துவெறிப் பாசிசப் பத்திர்க்கைகளான தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்..... போன்ற பயங்கரவாதப் பத்திரிக்கைகளைவிடக் கேவலமாக முழுக்க முழுக்க அவதூறூகளாலான செய்தியை நேற்றைய தீக்கதிரில் வெளியிட்டுள்ளது.



தீக்கதிரில் இப்படி எழுதி கூப்பாடு போடுவதற்கான நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கியது நமது வினவு வலைதளம்தான் என்பது தீக்கதிரில் வெளியாகியுள்ள அந்த நாலு கால செய்தியே வெளிப்படுத்துகிறது. “பல்லாவரம் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம்....” என்று தினமலரிடம் கடன் பெற்ற வார்த்தைகளைக் கொண்டு தனது புனைவைத் தொடங்கியிருக்கிறது அப்பத்திரிக்கை. அதன் தொடர்ச்சியாக ”தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தார்கள் எனவே நாங்கள் தட்டிக்கேட்டோம். இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறது.

அங்கு சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட எமது தோழர்கள் அருகாமையில் உள்ள திருநீர்மலை, பல்லாவரம் மலை, திரிசூலம் மலை..., இன்னும் ஏரி குளங்களிலெல்லாம் ஆயுதப்பயிற்சி எடுப்பதாகவும் அதனை தீக்கதிரின் ஆசிரியர்குழு ‘லைட்’ அடித்து பார்த்ததாகவும் விவரமாக, இட்டுக்கட்டி கழிந்திருக்கிறது. இதனைப் பார்த்து வெட்கப்பட்டு, சில வருடங்களாக அக்கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டதை நினைத்து தலைகுணிந்தவாறு நான் மேற்குறிப்பிட்ட தோழர் என்னிடத்தில் அப்பத்திரிக்கையினைக் கொடுத்தார்.

கருணாநிதி, ஜெயலலிதாவின் மூத்திரத்தைக் குடித்து திளைப்பதற்காக அந்த சந்தர்ப்பவாத பன்றிகள், அக்கட்சியின் நேர்மையான அணிகள் பெரிதும் மதிக்கும் அப்பத்திரிக்கையையே இவ்வளவு கேவல்மாகப் பயன்படுத்துகிற செய்தியை நாம் இன்னும் வீச்சாக அக்கட்சியின் உறுப்பினர்களிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தும் புரட்சிகர அரசியலை அக்கட்சியின் நேர்மையான அணிகளிடம் நேரடியாக விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சேர்ப்போம் அப்போலிகம்யூனிஸ்டுகளின் பிழைப்புவாத அரசியலின் அடித்தளத்தைத் தகர்ப்போம்.

நட்புடன்,
ஏகலைவன்.

Friday, October 17, 2008

'மான்கராத்தே' கட்சியாக மேல்நிலையாக்கமடைந்தது 'மார்க்சிஸ்ட்'கட்சி: தற்போதைய உபயதாரர் - திருவாளர் டி.கே.ரெங்கராசன்!

குறிப்பு: மேலே படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பவர் சிபிஎம் கட்சியின் எம்.பி.யும் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் டி.கே.ரெங்கராசன் தான்.

தமது அரசியல் நிலைப்பாடுகள் மீது பதியப்படும் நியாயமான விவாதங்களைத் தவிர்ப்பதும், விமர்சனங்களைக் கண்டு பம்முவதும், எதிர்வரும் கேள்விகளை இருட்டடிப்பு செய்து 'தப்பித்து'க் கொள்வதுவும் ஏதோ நம்ம சந்திப்பு போன்றவர்களின் வழக்கமாகத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால், அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஒருவர்கூட இதுவரை தமது கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மீதான எந்த விமர்சனத்துக்கும் நேர்மையாக பதிலளித்தது கிடையாது என்று அறியவருகிறோம்.

பார்ப்பன சேவகியாகவே வாழ்ந்து கழித்த கே.பி.சுந்தராம்பாளுக்கும், பார்ப்பனீயத்தின் வேரினில் தனது முற்போக்குக் கலைகளின் மூலம் அமிலம் பாய்ச்சியழித்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுக்கும் ஒரே நேரத்தில் நூற்றாண்டு விழா எடுக்கப் போவதாக அறிவித்து, அதற்காக பல்வேறு கூட்டங்களை நடத்திவருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (சிபிஎம் கட்சியினைச் சார்ந்த அமைப்பு).

"இது சரியா?" என்பது நண்பர் கலைவேந்தன் என்பவருடைய கேள்வி. அதற்கான நேர்மையான பதிலைப் பதிவு செய்வதில் அக்கட்சியின் தலைவர் எப்படி பொறுப்பற்று நடந்து கொள்கிறார் என்பதனைச் சுட்டிக்காட்டி,
தோழர் மதிமாறன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருந்த கீழ்கண்ட பதிவினை இங்கே மீள்பதிவிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
-------------------------------------------------------------------------------------------------

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்"


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் நமக்கு ஒரு கேள்வி அனுப்பியிருந்தார்.அதற்கான பதிலை நாம் எம்.ஆர். ராதாவும் - கே.பி. சுந்தராம்பாளும் - தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம்.( http://mathimaran.wordpress.com/)

அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.

திரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.

அன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,

எவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள்செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக்காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும்திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். அது எந்த அளவுக்குஉண்மை என்பது எனக்குத் தெரியாது.


எப்படியிருப்பினும் நடிகவேள் சுயமரியாதைகருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும். அதேபோல்,கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.

ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். மதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.

வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்.
டி.கே. ரெங்கராஜன்




நண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்! நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.உங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.

************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************

ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.

பாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.

நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.

என்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.தங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,
- கலைவேந்தன்.

இந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.

Friday, October 3, 2008

போலிகளை விமர்சிப்பவர்கள் அறிவுஜீவியாவதற்கு ஆசைப்படுபவர்கள் - சிபிஎம் புரட்டு கும்பலின் புதிய கண்டுபிடிப்பு(!)


“சி.பி.எம். போன்ற ‘வளர்ந்த’ கட்சியை விமர்சிப்பதால் தனக்கு ‘அறிவுஜீவி’ அந்தஸ்து கிடைக்கும் என்கிற ஆசையில்தான் எல்லோரும் எங்கள் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் அ.மார்க்ஸ்க்கு அந்தத் தேவையில்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே அந்த ‘அறிவுஜீவி’ என்கிற ‘அந்தஸ்த்தை’ப் பெற்றுவிட்டவர்.” இது சிபிஎம் என்கிற போலிகம்யூனிச கட்சியின் தீக்கதிர் நாளேட்டின் ‘பொறுப்’பாசிரியரான சு.பொ.அகத்தியலிங்கத்தின் பொறுப்பற்ற பதில்.

அ.மார்க்ஸ் எழுதிய வரலாறு-மக்கள்-மாவோயிஸ்டுகள்-நேபாளம் என்கிற நூலின் வெளியீட்டுவிழா நேறு (02/10/2008) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல், இராணுவ செயல்கள் குறித்தான பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இந்திய புரட்சிகர அமைப்புகளையும், நேபாள தோழர்கள் மன்னனுக்கு எதிராக களத்தில் நின்றபோது, அந்த மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த துரோக/போலிகம்யூனிச கும்பலான சிபிஐ/சிபிஎம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்திருந்தார்கள். அந்த மேடையில் தமது கட்சிக்கு எதிராக பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல திராணியற்ற சிபிஎம் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அகத்தியலிங்கத்தின் பதில்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிவப்புக் கொடியையும், கட்சியின் பெயரில் மட்டும் கம்யூனிசத்தையும் வைத்துக்கொண்டு புரட்சி செய்யமாட்டோம் என்று சொல்லித்திரிவதோடு புரட்சிக்கு எதிராக வேலை செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டும்” என்ற, அகில இந்திய நேபாளி மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்ட தோழர் சந்திர பகதூர் முதல், நேபாள மாவொயிஸ்டுகளை பாசிச இந்துவெறியன் அத்துவானியின் வார்த்தைகளில் விமர்சித்த சிபிஐ கட்சியின் தலைமைத் தரகன் ஏ.பி.பரதனை அம்பலப்படுத்திப் பேசிய தமிழ் தேசிய முன்னணியின் தோழர் தியாகு வரை போலிக் கும்பலுக்கு எதிராக தமது கருத்துக்களை நயமாகவும், உறுதியாகவும் பதிந்து சென்றவர்கள் பலர். அதேபோல ‘பின்நவீனத்துவம்’ என்ற ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு சரடுவிட்டுத் திரியும் அ.மார்க்ஸ் மீதும் அந்த புத்தகத்தில் அவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளையும் கடுமையாக தோழர்கள் விமர்சித்துப் பேசினர்.

ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பின்னால் அமர்ந்திருந்த அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களைப் பொறுப்போடு குறிப்பிடுத்துக்கொண்டாலும் இறுதியில் ஏற்புரையின் போது மழுப்பலாகவும் மொன்னைத்தனமாகவுமே பதிலளித்து அமர்ந்தார். போலிக்கும்பலின் பிரதிநிதியான அகத்தியலிங்கத்தின் நிலையோ அ.மார்க்ஸைவிடப் பரிதாபகரமாயிற்று. தமது அரசியலின் மீதான மிகச் சாதாரண விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ளக் கையாலாகாத நிலையிலையை அவரது பேச்சு அம்பலப்படுத்தியது. பாவம் அகத்தியலிங்கம் என்ன செய்வார். நம்பூதிரிபாடு முதல் யெச்சூரிவரை ஒருத்தனும் பதிலளிக்காத கேள்விகளுக்கு அகத்தியலிங்கத்தால் மட்டும் எப்படி பதில் சொல்லிவிடமுடியும்? உமாநாத், பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிசதுரோகிகளின் ‘வாழ்க்கை’யை கதையாக எழுதித்தரும் வேலையை மட்டும் பார்த்துவந்த அகத்தியலிங்கத்துக்கு, அதனாலேயே சில பல பொறுப்புகளையும் ‘கவுரவங்களை’யும் பெற்றுக் கொண்டு பிழைப்புநடத்திவரும் அவருக்கு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் துனிவும் தேவையும் எப்படி வரும்?

ஊழல் கொள்ளைக்காரி, பார்ப்பன பயங்கரவாத கும்பலின் பங்காளியுமான ஜெயலலிதாவின் காலடியிலேயே பாட்டாளி வர்க்க சின்னமான அறிவாள் சுத்தியலை வைத்து ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் கும்பலிடம் ஏதாவது சித்தாந்தமோ, கொள்கையோ மிச்சமிருக்க முடியுமா? இதுபோன்ற பிழைப்புவாத கும்பலிடமிருந்து விமர்சனங்களுக்கான பதில்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், புரட்சியை எட்டிய சமீபத்திய வெற்றியாளர்களான நேபாள மக்களின் பிரதிநிதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் சந்திரபகதூர் மேலே வலியுறுத்தி சொன்னதைப் போல, இந்த போலி / கபட வேடதாரிகளைத் திரைகிழித்து அவர்களது கட்சியின் கீழ்மட்ட அணிகளுக்கு அம்பலப்படுத்தாமல், கம்யூனிசத்தின் பெயரால் ஏகாதிபத்திய சேவையாற்றும் இந்தக் கயவர் கூட்டத்தை இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தாமல்; சமுகமாற்றத்துக்கான களத்தில் நாம் வேறெதைச் சாதிக்க முடியும்?

நேபாள மாவோயிசக் கட்சி கடந்த 1996 முதல் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த வேளைகளில், நேபாள மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்திய அரசின் அடியொட்டியே கிடந்த இந்த சிபிஎம் போலிக் கும்பலும் அதன் தலைவனும் இப்போது நேபாள மாவோயிஸ்டுகளுக்காக தாங்கள் தோள்கொடுத்ததாகச் சொல்லுவது பித்தலாட்டமன்றி வேறென்ன?

நேபாள மாவோயிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கஜுரேல் அவர்கள் சென்னையில் கைத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘கஜுரேல் உயிர் பாதுகாப்புக் குழு’ என்கிற ஒரு அமைப்பாக இங்குள்ள பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து களத்தில் நின்ற போது சி.பி.எம். கொண்டிருந்த நிலைப்பாடு என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மூன்றுமாதத்தில் அவருக்கு பிணையானை பெற்று விடுவிக்கப் போகும் நேரத்தில் போலிகளின் மேற்குவங்க அரசின் சார்பில் ‘ஜல்பைகுறி’ நீதிமன்றத்திலிருந்து ஒரு பிடியாணையைக் கொண்டுவந்து தோழர் கஜுரேல் அவர்களின் பிணையை முடக்கி தொடர்ந்து மூன்றாண்டுகள் அவரைச் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்து துரோகமிழைத்த கும்பல்தான் இந்த போலிகள். இந்நிலையில் நேபாள புரட்சியையும் மாவோயிசப் பாதையையும் பெருமை பொங்கக் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தமன்றி வேறென்ன?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முதல் வால்மார்ட், ரிலையன்ஸ் வரை அமெரிக்க அடிமையாகிவிட்ட இந்திய அரசின் அத்தனை நாசகார பொருளாதாரக் கொள்கையையும் தமது கட்சி ஆட்சி செய்யும் மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் அட்டியின்றி ஏற்றுச் செயல்படும் இக்கூட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல் பாதையை நினைத்து புளகாங்கிதமடைவது எதற்காக? புரட்சியின் ஈர்ப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தமது கட்சியின் ஒரு சில கடைகோடி ஊழியர்கள் மாவோயிசப் பாதையை நோக்கித் திரும்பிவிடாமல் தடுத்து தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். ‘புரட்சி வரவே வராது’ என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு புரட்டு வேலைகளைச் செய்துவரும் தமது சிபிஎம் கட்சியின் தலைமையை, புரட்சியை நடத்திட ஏங்கும் அணிகள் கேள்வி எதுவும் கேட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பவாத நடைமுறையைக் கையாள்கிறார்கள்.

இந்திய மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் புத்தி சொல்வதற்குப் பதிலாக, நேபாள மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் துரோகமிழைத்ததற்கான யோக்கியமான மன்னிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டுமா இல்லையா? இதுவரை செய்யவில்லை. ஜெயலலிதாவோடு இணைவதற்கு இவர்கள் சொல்லும் காரணத்தைப் போன்றதுதான் நேபாள மாவோயிஸ்டுகளை இவர்கள் ஏற்பதற்காகச் சொல்லும் காரணமும்.

இப்படிப்பட்ட விவாதிக்கவேண்டிய, நேர்மையான விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் அசடு வழிந்த சிபிஎம் கட்சி, தனக்குத் துணையாக அந்த அரங்கில் ஒருவர் கூட இல்லாதநிலையில் அ.மார்க்ஸ் என்கிற பிழைப்புவாதியை ‘அறிவுஜீவி’ என்று அடையாளப்படுத்தி தனக்கு அணிசேர்த்துக் கொண்டது. நேபாள மாவோயிஸ்டுகளோடு தோளோடு தோள்நிற்பதாக சொல்லிக்கொண்டிருந்த அகத்தியலிங்கத்தை பார்வையாளர் மட்டத்திலிருந்து எமது தோழர் ஒருவர் இடைமறித்து “தோழர் கஜுரேலைக் கைது செய்து துரோகமிழைத்ததற்கு பதில் சொல்லுங்கள்” என்று கேட்டபோது ‘அறிவுஜீவி’ அ.மார்க்ஸ் எமது தோழரை இடைமறித்து பேசவிடாமல் செய்து அகத்தியலிங்கத்துக்கு தனது நன்றியைக் காட்டினார். ஆனால், கடைசிவரை தமது கட்சியின் பித்தலாட்ட அரசியலின் மீது பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் மேடையிலிருந்து ‘தப்பித்த’ அகத்தியலிங்கத்தின் கால்களின் பாய்ச்சல்களுக்கு இடையில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது தோழர்களின் கேள்விகளும் போலிகளின் தோல்வியும்.

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.

Wednesday, August 13, 2008

நாறுகிறது நாடாளுமன்றம்! இனி நாடவேண்டியது நக்சல்பாரிப் பாதையே!! - அரங்கக் கூட்டம். 14/08/2008



அனைவரும் வருக!

Thursday, August 7, 2008

தொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு: கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்!

அன்பார்ந்த தொழிலாள தோழ்ர்களே!

முதுகெலும்பு உடைய பல ஆண்டுகள் வேலை செய்தும் போதிய சம்பளமோ, வேலை நிரந்தரமோ இல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாள்ர்கள் இருக்கின்றனர். எந்த உரிமையைக் கேட்டாலும் முதலாளிகள் வேலையை விட்டே துரத்தி விடுகின்றனர். தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்சம் பாதுகாப்பே சேமநலநிதி எனப்படும் பிராவிடண்ட் பண்ட் சேமிப்புதான். நம்முடைய எதிர்கால பாதுகாப்பு கருதி நமது சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு அலுவலகத்தில் சேமிக்கப்படும் இந்த PF பணத்தை வேலையில் இருந்து ஓய்வு பெறும் போதோ அல்லது வேலையை இழக்கும் போதோ எடுத்துக்கொள்கிறேம். நம்முடைய சம்பளத்தில் பிடிக்கும் தொகைக்கு சமமாக முதலாளிகளும் பங்குத் தொகை போடவேண்டி இருப்பதால் லாபக் கணக்கு பார்க்கும் முதலாளிகள் பலர் PF பிடித்தம் செய்வதே இல்லை. மேலும் PF பிடித்தம் செய்தால் நாம் வேலை செய்ததற்கு ஆதாரமாகிவிடும் என்பதால் சில முதலாளிகள் PF பிடிக்காமல் ஏய்த்து வருகின்றனர். கொஞ்சமாவது பிடிக்கப்ப்டும் PF பணத்திலிருந்து நம்முடைய வயதான காலத்தில் பென்சன் வாங்குகின்ற வசதியும் உள்ளது. இந்த PF பணத்துக்கும், பென்சனுக்கும் வேட்டு வைத்துவிட்டது, மன்மோகன்சிங் அரசு.

இந்தியாவில் PF சட்டம் நடைமுறைக்கு வந்த 1952-ம் ஆண்டு முதல் தொழிலாள்ர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EFPO) மொத்தமாக சேகரிக்கிறது. இப்படி சேகரிக்கப்படும் பணத்தை அரசு வங்கியான ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கிறது. ஸ்டேட் வங்கியானது மொத்த பனத்தையும் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளர்களின் சேமிப்புக்குரிய வட்டியை வழ்ங்குவதுடன், பென்சன் வழங்குவது போன்றவற்றையும் மேற்கொள்கிறது. இந்த பணியை செய்வதற்காக EFPO அமைப்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு நிதி தருகிறது. ஸ்டேட் வங்கி அரசு வங்கி என்பதால் அங்கு ஒப்படைக்கப்படும் தொழிலாளர்களது பணத்துக்கு பாதுகாப்பு உத்திரவாதமானது. மேலும் ஸ்டேட் வங்கி பல்வேறு அரசுத் துறைகளிலும், மக்கள் நலத்திட்டங்களிலும் முதலீடு செய்வதால் தொழிலாளர்களது பணம் ஓரளவுக்கு மக்கள் சேவையில் ஈடுபட்டது என கூறலாம்.

1994-ல் நரசிம்மராவ் - மன்மோகன் - சிதம்பரம் கும்பல் ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தனியார்மயம் - தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலணியாதிக்க சேவையில் விசுவாசமாக ஈடுபட்டது. உலக வங்கியின் கைக்கூலியும், முதலாளிகளின் சேவகனுமான மன்மோகன் தற்போது பிரதமராக உள்ள சூழலில், இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளை முன்பைவிட வேகமாக செயல்படுத்தி வருகிறது. எல்லா பொதுத்துறைகளையும் தனியாரிடம் விற்பது அல்லது அவற்றுக்கு போட்டியாக பன்னாட்டு / உள்நாட்டு தனியார் நிறுவனங்களை கொம்புசீவி இறக்கி விட்டு பொதுத்துறையை ஒழிப்பது என்கிற துரோகத்தனத்தில் மன்மோகன் – சிதம்பரம் ஜோடி கனகச்சிதமாக ஈடுபட்டுவருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வலது – இடது போலிக் கம்யூனிஸ்டுகளின் தயவில் ஆட்சியை நடத்தியபோது பொதுத்துறைகளின் பங்குகளை விற்பது, தனியாரை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபடாத மாதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தது காங்கிரசு கும்பல். ஜூலை 22-ல் நடந்த நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் கொடுத்தும், பதவி ஆசை காட்டியும் ஆட்சியைத் தொடர்வதை உத்திரவாதப்படுத்திய பிறகு அப்பட்டமான முறையில் தனியார்மய தாராளமய – உலகமயக் கொள்கையை அமலாக்கத் துவங்கிவிட்டது.

எம்பிக்களை விலைக்கு வாங்க துணை செய்த தரகு முதாளிகளுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்கிற விசுவாசத்தில் PF பணத்தில் கைவைத்துள்ளது. 56 ஆண்டுகளாக ஸ்டேட் வங்கியின் பராமரிப்பில் இருந்த இரண்டரை லட்சம் கோடி PF பணத்தை பராமரிக்கும் வேலையை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடன்சியல், HSBC போன்ற தனியார் கம்பெனிகளுக்கு பங்கு பிரித்து தந்துள்ளது. இப்படி தந்ததன் மூலம் முன்பு ஸ்டேட் வங்கிக்கு பராமரிப்பு கட்டணமாக தந்ததில் இரண்டு கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்ன அயோக்கியத்தனமாக மத்திய அரசு கூறியுள்ளது. இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தை சூதாட்டத்தில் இறக்கப்போகும் ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 தனியார் நிறுவனங்களும் நாள் ஒன்றுக்கு பல கோடியை லாபமாக சுருட்டப் போகிறார்கள். ஸ்டேட் வங்கி பெயரளவிற்காவது நாட்டு நலத்திட்டங்களில் முதலீடு செய்த தொழிலாளர்களின் பணத்தை தரகு முதலாளிகளும், பன்னாட்டு நியாதிக்க கும்பல்களும் சூதாட்டத்தில் ஈடுபடுத்துவதும், அதற்கு மத்திய அரசு வழிவகை செய்வதும் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்! யார் பணத்தை யார் சூதாடுவது? மன்மோகன் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பங்குச்சந்தை தரகன் அர்சத் மேத்தாவின் சூதாட்ட்ட திருவிளையாடலில் பல லட்சம் கோடி சூறையாடப்பட்டதைப் போல நம் சேமிப்பும் சூறையாடப்படும்.
தொலைத் தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் பல்லாயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது வரலாறு. விமானம் வாங்கியதில் பலகோடி வரி ஏய்ப்பு, அம்பானி சகோதரர்கள் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் மோசடியையே முதலீடாகப் போடும் திறன் கொண்டவர்கள். வங்கி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் ஐ.சி.ஐ.சி.ஐ., மோசடிக்குப் பெயர் பெற்றது. நுகர்வோர் நீதிமன்றங்கள் பலவற்றில் இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டு தண்டனை பெற்ற ‘புகழ்’ வாய்ந்தது. இவர்களிடம் தான் நம்முடைய சேமிப்பு ஒப்படைக்கப்படுகிறது. பங்குச் சந்தை சூதாட்டத்திலும், கோல்மால் வேலைகளிலும் நம்முடைய பணம் ஏப்பம் விடப்படப்போவதை நாம் அனுமதிக்க முடியுமா? காங்கிரசு – பிஜேபி உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் இந்த துரோகத்தனத்தில் ஒரே அணியாகத்தான் உள்ளன. வாழ்வுரிமையை இழந்து வரும் உழைப்பாளி மக்கள் மட்டும் எதிரணியாக உள்ளோம். ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தி வரும் மறுகாலணியாதிக்க துரோகத்தை முறியடிக்க நக்சல்பாரி புரட்சியாளர்களின் பாதையில்; புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றே நம்முன் உள்ள ஒரே வழி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி
சென்னை - காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 9444834519, 9444442374

குறிப்பு: இதனையொட்டி நேற்றைய தினம் ஆர்பாட்டமும் நடைபெற்றது.

Sunday, July 20, 2008

"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!


"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!

சிபிஎம் / சிபிஐ என்ற இரு போலி கம்யூனிசக் கட்சிகளின் சார்பில் சென்னை அமைந்தகரையில் சென்ற 16/07/08 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நானும் சில தோழர்களும் சென்றிருந்தோம். மேடைக்கு பின்புறம் இருந்த ஒரு டீகடையில் நின்றிருந்த சில மூத்த தோழர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

கடந்த நாற்பது வருடங்களாக சிபிஎம் கட்சியில் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சென்னையை அடுத்த பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) பகுதியிலிருந்து மேற்கண்ட கூட்டத்திற்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் அப்பாவித்தனமாக பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அதில் "வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை ஆதரிக்க வேண்டிய நிலை வந்தால் தயங்காமல் ஆதரிப்போம்" என்று உங்கள் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறாரே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

"இல்லை. அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்கவே மாட்டார்" என்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தனர். "அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறதே, தோழர் நீங்கள் பார்க்கவில்லையா?" என்று நமது தோழர்களும் திருப்பிக் கேட்டனர். உடனே அவர்கள், "இதுபோன்று 'தீக்கதிர்' பத்திரிக்கையில் வந்திருக்கிறதா?" என்றதோடு "எந்த செய்தியாக இருந்தாலும் தீக்கதிரில் வந்தால்தான் நாங்கள் நம்புவோம்" என்றும் அப்பாவித்தனமாகப் பதிலளித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மலைபோல் நம்பியிருக்கும் அந்த 'தீக்கதிர்' நாளேட்டின் யோக்கியதையைக் காட்டும் வகையில், அதன் முக்கியப் பொருப்பாளரான குமரேசன் என்பவர் மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணலின் போது மேற்கண்ட யெச்சூரி சம்பந்தப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
கேள்வி மேற்கண்ட சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கை பற்றியதுதான். "தில்லி அரசியலில் நிலவும் நெருக்கடிகளின் காரணமாக, சும்மா போகிற போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களைச் சொல்லுவார்கள், அதையெல்லாம் பெரிதுபடுத்த் வேண்டியதில்லை. சீத்தாராம் யெச்சூரியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல" என்று தெளிவாகச் சொன்னார்.

'சும்மா போகிற போக்கில்' கருத்து தெரிவிப்பதற்கு சீத்தாராம் யெச்சூரி ஒன்றும் கட்சியோட கடைமட்ட ஊழியன் இல்லை. அவர்தான் அப்போலி கம்யுனிச கட்சியின் மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். சிபிஎம் கட்சியின் அரசியல் 'தரகு'ப் பாரம்பர்யத்தை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருப்பவரும் அவரே. இப்படியிருக்கையில் யெச்சூரியின் கருத்தை கட்சியின் கருத்தாகக் கருதவேண்டியதில்லை என்று குமரேசன் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளுக்கே உரிய பித்தலாட்டப் போக்கு.

அப்பாவி ஊழியர்கள் மலைபோல நம்பிக் கொண்டிருக்கும், அக்கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையான தீக்கதிர், சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கைகளை மாற்றித் திரித்துக் கூறுவது புதியவிசயமல்ல. ஏற்கெனவே, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன் கைது செய்யப் பட்டபோது, அக்கைது நடவடிக்கையைக் கண்டித்து ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார் இதே யெச்சூரி பகவான். அது தினமணி, இந்து உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. ஆனால், இவர்களுடைய தீக்கதிர் நாளேடு சிறிதும் கூசாமல் யெச்சூரி அவ்வாறு சொல்லவேயில்லை என்று அப்போதும் எழுதியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் கொடுமை என்னவென்றால் மேற்கண்ட தினமணி, இந்து நாளேடுகள் சிபிஎம் கட்சியின் ஆதரவுப் பத்திரிக்கைகள். அப்பத்திரிக்கையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அக்கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நந்திகிரமம் உள்ளிட்ட போராட்டங்களில் அம்பலப்பட்டபோது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முறையாக பதிலளிக்கத் திராணியற்ற போலிகள், அவற்றை "ஊடகங்களின் சதி" என்று கூசாமல் சொல்லிக் கொண்டனர். வெற்று அவதூறுகளும் போலிப்புலம்பல்களும் மட்டும் கொண்டிருக்கும் இவர்களது ஏடுகளுக்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Thursday, July 17, 2008

காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!


'காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்' என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு கட்சியை, வெளையர்கள் உறுப்பினராக இருந்த அக்கட்சியை ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்’ மிக்க கட்சி என்று போலிகள் சொல்வது ஏன்? அதுவும் காங்கிரசை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்திலேயே இப்படிப்பட்ட காங்கிரசு ஆதரவுக் கருத்துக்களைப் பேசுவதற்குக் காரணம் என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அவர்களுக்கு ஒரு போலியான தலைமையை காங்கிரசு கட்சி எனும் பெயரில் தனது கைக்கூலிகளைக் கொண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் காலணிய அரசு. காங்கிரசும் போராடுகின்ற மக்களுக்குத் தலைமைதாங்குவதாகச் சொல்லிக் கொண்டு அப்போராட்டங்களைச் செயலிழக்கச் செய்தது. இது அக்கட்சிக்காரனுக்கே தெரிந்த விசயம். அப்படியிருக்கையில் இவர்கள் இவ்வாறு திரித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது?

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழன் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்குத் துணைநின்ற துரோகி காந்தியும் அவர் தலைமையிலான காங்கிரசையும், ஏகாதிபத்திய எதிர்ப்பளர்களாகச் சித்தரிக்க வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு வரக் காரணம் என்ன?

ஒருவேளை ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியோடு அந்தரங்க உறவு கொண்டிந்தாரே அதைத்தான் போலிகம்யுனிசதலைவர் டி.ராஜா ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று சொல்லியிருப்பாரோ?!

ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் என்பதில் ‘மகாத்மா’காந்திக்கும் சோனியாகாந்திக்கும் உள்ள வேற்றுமைதான் என்ன?

காங்கிரசையும் காந்தியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வருணித்து இவர்கள் ஏன் இவ்வாறு போலிச்சித்திரம் தீட்டவேண்டும்? காரணம் இருக்கின்றது.

அப்படிப் பேசினால்தானே விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரசின் காலடியில் இவர்கள் புரட்சி செய்ததன் நியாயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியான தோற்றத்தை உருவாக்க முடியும். துரோகி காந்தியை இன்றுவரை இவர்கள் ஆதரிப்பதற்கான காரணமும் புனிதப்படும். அதற்காகத்தான் காங்கிரசு கட்சியை இவர்கள் இவ்வாறு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக உதார் விட்டுக் கொண்டு இதுநாள் வரை காங்கிரசை மிரட்டி வந்த இவர்கள், காங்கிரசு கட்சி மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அள்ளி வழங்கியது ஏன்? மாற்று ஏற்பாடுகளுடன் ஆட்சி தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் அனு ஒப்பந்தம் நிறைவேறும் வகையிலுமான ஒரு சூழலைத் திட்ட மிட்டே உருவாக்கிவிட்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று முழங்குவது போன்ற போலிகம்யூனிஸ்டுகளின் கீழ்த்தரமான அரசியலை என்னவென்பது?!

‘மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள்’. அதுபோலத்தான் அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியைக் கலைத்தபோதிலும் “வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால் நிச்சயம் ஆதரிப்போம்” என்கிறார் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி.

இதுபற்றிய சில ருசிகர தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

தோழமையுள்ள,
ஏகலைவன்.

Saturday, June 28, 2008

சி.பி.எம். கட்சியின் 'தாரக மந்திரம்'...........





சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே "என்ன செய்வது தோழர்" என்றும் நொந்து கொண்டார்.

"இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது......

"முட்டாள் தனமா வந்துட்டோம்!
புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவோம்!!" என்பதுதான்.

இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் 'பெரிய புத்திசாலிகள்'தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் 'பொலிட்பீரோ' என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!

Sunday, June 22, 2008

"123 ஒப்பந்தம் நிறைவேறாமல் இருப்பது நாங்கள் ஓட்டுப் பொறுக்கியதன் சாதனையல்லவா?" - சிபிஎம் குரூப்ஸ் ஆப்பு கம்பெனீஸ் பிரைவேட் லிமிட்டெட் கேள்வி!!!!!

சிபிஎம் என்கிற போலி கம்யூனிச கட்சியின் இணைய பிரதிநிதியாக இருந்த கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளைத் தொடர்ந்து, இப்போதுதான் அக்கட்சியின் வேறு சிலரும் வெகுவாக வலையுலகில் காணக் கிடைக்கிறார்கள். அப்படி ஆர்குட் வாயிலாக நம்கண்ணில் பட்டது ஒரு வலைதளம். அத்தளத்திற்குச் சொந்தமானவர் 'தோலர்' கவின்மலர் அவர்கள்.

புதிய தோழராச்சே இவராவது சந்திப்புக்கு மாற்றாக விவாதகளத்தில் இருப்பாரா பார்க்கலாம் என்று முயலும் விதமாகப் பதிவிட்ட எனது பின்னூட்டங்கள் பலவற்றை, சந்திப்பை விஞ்சும் வகையில் இருட்டடிப்பு செய்து தானும் அதே போலி முகாமின் பிரதிநிதிதான் என்பதை வெளிப்படையாக நிரூபித்திருக்கிறார். (அவர் இருட்டடிப்பு செய்த ஒருசில பின்னூட்டங்களை எனது தளத்தில் முந்தைய பதிவுகளில் பதிவிட்டுள்ளேன்) எனவே, எத்தனையெத்தனை வலைதளங்கள் போலிகளின் சார்பாக நடத்தப்பட்டாலும், அவையனைத்தும் விவாதங்களை இருட்டடிப்பு செய்தல் என்கிற பழைய மொந்தையிலேயே வழங்கப் படும் புதிய கள்தான் என்பது திண்ணமாகிறது.

அவருடனான எனது விவாதத்தில் கீழ்கண்ட பதிலை அவர் தெரிவித்ததோடு "இதற்கு தெளிவான பதில் வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையினை ஏற்று, தோழர் கோபா அவர்களின் தளத்திலிருந்து கீழ்கண்ட பதிவினை மீள்பதிவிடுகிறேன்.

இதனைத் தொடர்ந்து அவரோ அவர் சார்பாக வேறு எவர் வேண்டுமானாலும் எம்முடன் விவாதிக்க வந்தால் அனைத்து பின்னூட்டங்களையும் பதிப்பித்து விவாதம் தொடர்ந்து நடத்தப்படும் என்கிற உத்திரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

////ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. ////


123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !


பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்...

"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.


"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.


"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை...

"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்...இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.


அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.


"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.


இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.


இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.


தோழர் சந்திப்பு அவர்களே!

அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?

இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!


10 Comments:
சந்திப்பு said...கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.
LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................
3:57 PM


சின்ன கட்டபொம்மன் said...
..சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
################################
தோழர் சந்திப்பு அவர்களே!
..
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!###################################


..4:29 PM கோபா said...
சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?

4:59 PM
..கோபா said...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?

5:05 PM சந்திப்பு said...
..கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.

5:33 PM
..கோபா said...
சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.
..
நேற்று நிலவரம் தெரியுமா !!
..
காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.
..
அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?
..
பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.
..
உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.

9:14 AM
பாவெல் said...தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?
சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !
..
ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?

Saturday, June 21, 2008

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....



"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அனைத்துமே உலக அளவில் சந்தி சிரித்த விசயம்தான் ஏற்கெனவே.

மேற்குவங்கத்தில் இவர்களது அரசும் கட்சியும், தரகு முதலாளியான டாடாவுக்கும், இந்தோநேசியாவில் சுமார் பதினைந்து இலட்சம் கம்யூனிஸ்டு தோழர்களை நரவேட்டையாடிய சுகர்தோ வுடைய 'சலீம் குழும'த்துக்கும் அடியாளாக மாறி சேவை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இப்படிப்பட்ட ஒரு குண்டர் அமைப்பு முதலாளிகளுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மீது ஏவிய அக்கிரமங்களை இந்த ஒரு பதிவுக்குள் பட்டியலிட்டுவிட முடியாது. குறிப்பாக நந்திகிராம போராட்டங்களின் போது இக்கட்சியைச் சார்ந்த குண்டர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். இக்குண்டர்படை செய்த அட்டூழியங்களில் காணாமல்போன குழைந்தைகள் முதியவர்கள் நூற்றுக் கணக்கான பேர்.

இப்படி சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக, குழந்தைகள், பெண்கள் என்று அனைவரின் மீதும் தனது வக்கிரங்களைக் கட்டவிழ்த்துள்ள அக்கட்சி கையில் உயர்த்திப் பிடித்திருப்பது ஆயுதங்களைத்தான், வேறெதையுமில்லை.

சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தை மறுதளிக்கும் இப்போலிக் கூட்டம்; முதலாளிகளிடம் பெறும் சில தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூலிப்படையாக மாறி ஆயுதங்களோடு கொக்கரிக்கிறது. இவ்வாறு இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களிலெல்லாம் ஆயுதங்களோடு பொறுக்கித்தனம் செய்து வரும் இக்கும்பல், நமது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

மகஇக, மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதுவும் ஆயுதங்களோடு களத்தில் இல்லை. நாங்களும் மக்கள் மத்தியில்தான் இயங்கிவருகிறோம் என்பதை பல்லாயிரம் முறை தெளிவாக நாம் சொல்லியாகிவிட்டது. ஆனால், இன்று வரை நமது தோழமை அமைப்புகளை 'ஆயுதமேந்திய நக்சல் பயங்கரவாதிகள்' என்று அவதூறு செய்வதை அவர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இணையத்திலும் இதற்கெதிரான விவாதங்களை நமது தோழர்கள் விரிவாக நடத்தியிருக்கின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்வதனால் அது உண்மையாக மாறிவிடாதா என்று முயன்று கொண்டிருக்கின்றார்கள் போலிகள்.

இப்போது தமிழகத்திலும் இவர்கள் ஆயுதமேந்திச் சுற்றத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இங்கே உயர்த்திப் பிடித்திருக்கும் ஆயுதம் யாருக்கு எதிராக என்றால்; நமக்கு எதிராகத்தான். விழுப்புரம் அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட அரசியல் மோதலில் எமது தோழர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்ற சிபிஎம் ரவுடிக் கும்பல், சென்றவாரம் ஒரு பொதுக்கூட்டத்திலேயே எமது தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு "வெட்டி வீசுவோம்" என்று கொக்கரித்திருக்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.

எமது தோழர்களோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக சிபிஎம் கட்சியின் இதுபோன்ற வெற்று சவடால்கள் விடுவது ஒன்றும் புதிதல்ல. எனவே, எமது தோழர்களும் சற்று கவனக் குறைவாக தத்தமது பணிகளில் இருந்துவிட்டனர். இதனையறிந்து கொண்ட இந்த போலிகம்யூனிச பாசிசக் கும்பல், முறையாகத் திட்டமிட்டு, நேற்று இரவு எமது தோழர்களின் மீது கொலைவெறி ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னனி (வி.வி.மு) ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட பேடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??


(குறிப்பு: இக்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் குண்டர்களில் சிலர் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். முழுமையான தகவல் கிடைக்கப் பெற்றதும் இப்பதிவின் தொடர்ச்சியினை வெளியிடுவோம்.)



Thursday, June 19, 2008

நம்ம 'நீதி'நிறுவனமும் 'ஜனநாயக'மும்????????

அடித்துத் துவைத்து, பிய்ந்து போன வெளக்குமாறு போல ஆகிவிட்ட நம்ம போலி ஜனநாயகத்தை, சற்றே துலக்கி, அதற்கு 'ஜனநாயகம்' என்ற பட்டுக் குஞ்சலங்களை அணிவித்து மக்களை ஏமாற்றி வளையவருகிறது, காங்கிரஸ் முதல் நம்ம 'காமரேடு'கம்பெனிவரை.

அப்பேர்ப்பட்ட 'ஜனநாயக'த்த போற்றிப் பாதுகாக்கிற நிறுவனங்களில் தலையாய நிறுவனம்தான் நம்ம நீதித்துறை. இது யாருக்கான ஜனநாயகம் என்பதும், இந்த உச்சநீதிமன்றத்தின் தலைமையில் உள்ள நீதிநிறுவனம் யாருடைய பிரதிநிதி என்பதையும் நாம் புதிதாக எதுவும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

இப்படி ஆளும் வர்க்க சுரண்டல் வாதிகளுக்கு அடியாள் வேலைகளை மட்டும் செவ்வனே செய்துவரும் இந்நிறுவனத்தால் கவனிக்கப் படாமல் நிலுவையில் கிடக்கும் வழக்குகள் மட்டும் சுமார் மூன்று கோடிகளுக்கும் மேலான வழக்குகளாம்! சரி இதனை என்ன செய்வது, எவ்வளவு விரைவாக இவ்வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அறிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாத்ராவ் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறதாம். அவ்வறிக்கையில், புதிதாக அமைக்கப் படவேண்டிய நீதிமன்றங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனவாம். அதேபோல நீதிபதிகளைத் தேர்தெடுத்து நிரப்பும் பொறுப்பை அரசு செய்வதைவிட இப்போது இருக்கிற உயர்/உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே கொடுக்க வேண்டும். அரசின் தலையீடு அதில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கிறதாம்.

அதாவது திருடனின் கையிலேயே சாவியையும் கொடுத்துவைக்கச் சொல்லி அரசையும் அதன் மூலமாக மக்களையும் நிர்பந்திக்கிறது ஜெகந்நாதராவ் கமிட்டி.

வெறும் நாற்பதாயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, யாருக்கு வாரண்ட் கையெழுத்திடுகிறோம் என்ற சுயநினைவே இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே வாரண்ட் கொடுத்தார், அஹமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர். இச்செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்து சந்தி சிரித்திருக்கிறது. ஏற்கெனவே 'நீதி'யரசர்கள், 'நிதி'யரசர்களின் கைப்பாவையாக அம்பலப்பட்டு விசாரனைகள் ஏதுமின்றி கவுரவமாக சுற்றி வருகிறார்கள்.

போதாக் குறைக்கு இப்போது நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் வேறு இவர்களுக்கு வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் நமது மதிப்பிற்குரிய ஓட்டுப் பொறுக்கிகள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற மாதம் மத்திய அரசின் நீதித்துறை அமைச்சகம் ஒரு பெருமை மிக்க!! தகவல் ஒன்றை வெளியிட்டது. அது என்ன வென்றால், 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (Right to Information Act) மூலமாக சென்ற ஆண்டு சுமார் ஐம்பதாயிரம் வழக்குகளுக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் அப்பெருமை மிக்க அறிவிப்பு.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைப் போன்ற யாரோ ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நீதிபதிகள் சிலரின் சொத்துக்கள் பற்றி தகவல் கோரினாராம். த.அ.உ.சட்டம் குறித்து புளகாங்கிதமடைந்திருந்த நீதி அமைச்சகத்துக்கு இது சோதனையையும் வேதனையையும் அளித்தது போலும். உடனே, "நீதிபதிகள் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள், எனவே, யாரொருவர் 'இந்திய அரசியல் சாசன சட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பில்' இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் மேற்கண்ட சட்டத்தின் மூலமாகப் பெறமுடியாது" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாம்.

எப்படியிருக்குது நம்ம 'நீதிநிறுவன'மும் 'ஜனநாயக'மும்????????


தோழமையுடன்,
ஏகலைவன்.

Sunday, June 15, 2008

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்
























'கெடக்கெறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மடியில வச்சிக்க'ன்னு ஒரு பேச்சு உண்டு நம்மூர்களில.

இப்ப பெட்ரோலியப் பொருட்கள் முதல் உணவுதானியங்கள் வரை விலையேற்றம். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல கோடி மக்களை, அந்த ஒருவேளைச் சோற்றையும் மறுத்து நெறிக்கிறது இந்த உலகமயமும் அதன் பழைய ப்ராடக்ட்டான விலைவாசி உயர்வும். சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை இப்படி சீரழிந்து நிற்கிறது.

ஆனால், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள் முதலான அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் "நாங்க வந்தாத் திருந்திடும்"ன்னு தெருவுக்குத் தெரு கொடியப் புடிச்சிக்கிட்டு கூவிக்கிட்டு நிற்கிறார்கள்.

விலை வாசி உயர்வு பற்றி மற்ற கட்சிக்காரன் பேசுவதெல்லாம் கெடக்கட்டும். நம்ம காமரேடு கம்பெனி இருக்குதே, அதான் நம்ம சிபிஎம் இருக்குதே அவியளக் கேட்டா என்ன சொல்றாங்க தெரியுமா? "இடது சாரிகளின் அறிவுரைகளை மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ம்க்ம், இவனுகளப் பத்தி எழுதினா பதில் சொல்ல ஒருத்தனும் வரப் போவதில்ல. இவனுக நம்மளப்பத்தி எழுதினா, நம்மள பதில் சொல்ல அனுமதிக்கறதில்ல. இப்படிப்பட்ட 'ஜனநாயக'த்த தனக்குள் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுதிக் கிழித்தது போதும் என்றுதான் இருந்தேன். ஆனா திரும்புற பக்கமெல்லாம் இவனுக ஓலம் தான் பெரும் ஓலமா இருக்குது. தொலைக்காட்சியைத் தொறந்தா டி.ராஜாவும் யெச்சூரி அய்யாவும் கொந்தளிக்கிறாங்க.

விலைவாசி உயர்வப் பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு கவனிச்சாத்தான் தெரியுது மேற்சொன்ன காம்ரேடுகளின் வசனத்த அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க இந்த மாபெரும்!!! கம்யூனிச!!!த் தலைவர்கள்.

இது என்னாடா இது ஐபிஎல் சூதாட்டத்த விட கேவலமா இருக்குதேன்னு தோனுச்சி. அந்தக் கோவத்துலேயே இணையத்துல வந்து அமர்ந்தேன். தோழர் ஸ்பார்ட்டகஸ் அவர்கள் சில அறிவிப்புகளை போஸ்டருடன் வெளியிட்டிருந்தார். அதுதான் மேற்கண்ட இரண்டு போஸ்டர்களும்.

இதனைக் குறித்துக் கொண்டு நண்பர்கள் அனைவரும் அவரவர் பகுதிக்கு அருகில் நடக்கவிருக்கும் தெருமுனைக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

ஏகலைவன்.




Saturday, June 14, 2008

இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

"இந்து மதத்திற்கெதிராக ஒரேயொருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும்; நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதாகவே அர்த்தமாகிறது" என்றான் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பயங்கரவாதி எல. கணேசன்.

இன்று (14/06/2008) மதியம் தமிழன் தொலைக்காட்சியில் தான் மேற்கண்ட நேர்கானல் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட இவ்வரிகள் வேறொருவர் சொன்ன புகழ்மிக்க வாசகத்தினை அப்படியே ஒத்திருப்பது இதனைப் படிக்கின்ற அனைவருக்குமே தெரிந்துவிடும். இருப்பினும் நான் சொல்கிறேன்....

"நீ எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் அர்த்தம்" என்கிற இந்த வாசகம் நமது அமெரிக்க பாசிச பயங்கரவாதி ஜார்ஜ்.W. புஷ்ஷினுடையது.

தனது ஆசானாக ஹிட்லரையும் தனது சின்னமாக ஹிட்லரின் 'ஸ்வஸ்திக்' சின்னத்தையும் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, ஒரு மக்கள் விரோத பயங்கரவாத அமைப்பு என்பதற்கு இதுவே முழுமையான உதாரணமாக இருக்கிறது. எல. கணேசனின் மேற்கண்ட பேச்சிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், கடந்தகால ஹிட்லரைவிட மிகமிகப் பயங்கரமான நிகழ்கால சர்வதேச, விரோதி ஜார்ஜ் புஷ் ஐ தமது குருவாக அவர்கள் வரித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த நேர்காணலினூடாக மேலும் பல்வேறு சமூக விரோத பேச்சுக்களையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் கருத்துக்களையும் அள்ளிவிடத் தவறவில்லை அந்தப் பார்ப்பன பயங்கரவாதி.

"ஆர்.எஸ்.எஸ். என்றால் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தட்டிக் கேட்க ஆர்.எஸ்.எஸ்.ஐத்தவிர வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும்போது தொடக்கத்தில் சற்று வன்முறையினையும் கையிலெடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரு நிரந்தரமான அமைதியினை அது அப்பகுதிக்குத் தருகிறது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு" என்று சிலாகித்தார்.

அவருக்கு எதிரில் ஒரு எருமைச் சாணியைப் போன்று ஒருத்தன் உட்கார்ந்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இந்நேர்கானலை நடத்திக் கொண்டிருந்தான். எதிர்கேள்விக்கான பல்வேறு விசயங்களை எல. கணேசனே அடியெடுத்துக் கொடுத்தபோதும், எந்த சொரனையுமற்று 'நம்ம கோமாளி சந்திப்பு' போன்று உட்கார்ந்திருந்தது அந்த எருமைச்சாணி.

உங்க ஆர்.எஸ்.எஸ். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக என்னத்தைக் கிழித்தது என்று கேட்டிருக்கலாம்.

அல்லது

ஆர்.எஸ்.எஸ். அந்த பகுதிக்கு நிரந்தரமான அமைதியினை வழங்குவதாக அவன் குறிப்பிட்டதற்கு, "நிரந்தர அமைதியென்றால் குஜராத்தைப் போன்றதொரு அமைதியா" என்றுகூட கேட்டிருக்கலாம்.

இப்படி அவனைக் கேள்விமேல் கேள்வியெழுப்பி வேட்டியைக் கிழித்து அனுப்பியிருக்கலாம். அவன் நம் கையில் சிக்கியிருந்தால். ம்... என்ன செய்வது.

Monday, June 9, 2008

"மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கித்தனம் என்பது சிபிஎம் கும்பல் பேசும் கம்யூனிசம்தான்"

மன்னிக்கவும் மேற்கண்ட தலைப்பு சற்று கடுமையாகத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல; சம்பந்தப்பட்ட துரோக சிபிஎம் கும்பல்தான் பொறுப்பு.


நந்திகிராமில் மம்தா, பாஜக கும்பலுடன் SUCI என்ற அமைப்பு சேர்ந்து செயல்படுவதை, ஏதோ அனைத்து நக்சல் குழுக்களும் இவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவதாக மிகைப்படுத்திக் காட்டுகிறது சிபிஎம் போலிக் கும்பல். இதன் மூலம் களத்தில் மக்களோடு நின்றுகொண்டிருக்கும் பல புரட்சிகர அணிகளை இருட்டடிப்பு செய்கிறது இக்கும்பல்.

ஆயுதமேந்தி களத்தில் நிற்கும் அனைத்து நக்சல் குழுக்களோடும், அவர்களுடைய செயல் தந்திர ரீதியில் நமக்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது ஒருபுறமிருக்கட்டும். இப்பதிவு சிபிஎம் துரோக கும்பலுக்கு எதிராக எழுதவேண்டியிருப்பதால், அவர்களுடனான நமது முரன்பாடுகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு எழுதவேண்டியுள்ளது. இதையும் வழக்கம் போலவே மிகைப்படுத்தி அவதூறு பரப்ப நம்ம காம்ரேடு கோமாளிக் கும்பல் முயல வாய்ப்பிருப்பதனால் இதனை தொடக்கத்திலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

சாதாரணமாக நக்சல் குழுக்களைப் பற்றி சிபிஎம் துரோகிகள் பேசத் துவங்கும் போதே, "இவர்கள் சுக்கு நூறாக சிதறுண்டு விட்டார்கள் ஆஹாஹாஹா!!!" என்று எகத்தாளமாகத்தான் பேச்சைத் துவக்குவார்கள். ஆனால் SUCI போன்ற பிழைப்புவாத என்.ஜி.ஓ.க்களை விமர்சிக்கும் போது மட்டும் அனைத்து நக்சல் குழுக்களையும் ஓரணியாக இணைத்துப் பேசுவார்கள்.

அதேபோன்று நம்மைப் பற்றிய அவர்களது தலையாய விமர்சனமே, நாம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறோம் என்பதுதான். ஆனால், நந்திகிராம விசயத்தில் SUCIயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நம்மிடம் கேட்பார்கள். "இதுல மட்டும் நாங்க எப்படிடா மே.வ வரை வளர்ந்தோம்"ன்னு நமது மதிப்பிற்குரிய துரோகிக் கும்பலை பலமுறை நாம் கேட்டாகிவிட்டது. இன்னும் பதிலில்லை.

இதுகுறித்து நமது தோழர்கள் இணையத்தில் பல விவாதங்களை நடத்தியுள்ளனர். எண்ணற்ற பல கட்டுரைகளையும் எழுதிக் குவித்துள்ளனர். இவை எதிலும் தலைகாட்டாத, சிபிஎம்மின் இணைய முகமான கோமாளி சந்திப்பு, தோழர் அரசுபால்ராஜ் அவர்களின் கீழ்கண்ட கேள்விகளுக்குக் கூட இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை.

/////arasubalraj said...
சில கேள்விகள்:

1. வரலாற்றாசிரியர் சுமித் சர்க்காரும், இதர சி.பி.எம் ஆதரவு அறிவுஜீவிகளும் நந்திகிராம் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மேற்கு வங்க அரசு விருதுகளை திருப்பி அளித்திருக்கிறார்களே(The Hindu - 17-03-07)? ஒரு வேளை அவர்களும் நக்சலைட்டுகளோ?

**மேற்குவங்கத்தில் ஏதாவது ஒரு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்துவிதமான உத்திரவாதத்தையும் மேற்குவங்கம் அளிக்கிறது.**

2. இந்த உத்திரவாத லட்சணத்தை எதிர்த்துதான் மேதா பட்கர் சிங்கூரில் போராட்டம் நடத்திய பொழுது உள்ளே நுழைய அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டார்.தங்களுடைய பதிவுத்தளத்தில் நக்சல்களுக்கும்,மேதா பட்கருக்கும் ஒப்பீடு செய்திருந்தீர்களே, அதே மேதா பட்கர் இப்பொழுது "Don't call them as Special Economic Zones, but as Special Exploitation Zones"என்று சொல்லி போராடுகிறாரே, அவரும் நக்சலைட்டாக மாறி விட்டாரோ? சர்தார் சரோவர் அணை அரசியல் எடுபடாததால், மேற்கு வங்கத்தில் காலூன்ற முயல்கிறாரோ?

**நந்திகிராமத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்தவிடாமல் முடங்கச் செய்ததும், அங்குள்ள சாலைகள், பாலங்களை தகர்த்தும், போலீசோ, அரசு அதிகாரிகளோ அந்த கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து செயல்பட விடாமல் முடக்கியது எந்த வகையான ஜனநாயகம்**

3. சட்டம்? யாருடைய சட்டம்? அது என்ன வர்க்க நியாயங்களுக்கு அப்பாற்ப்பட்ட சட்டம், ஜனநாயகம்? பாராளுமன்றத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், புரட்சிகர அலையின் ஏற்ற் இறக்கத்தையொட்டியும், முதலாளித்துவ நாட்டில் பாராளுமன்ற பங்கேற்பை லெனின் வலியுறுத்தினார்.ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பங்கேற்கிறது. பாராளுமன்றம் கேலிக் கூத்தாவது பற்றி சோம்நாத் சாட்டர்ஜி கண்ணீர் வடிக்கிறார். பன்னாடுக் கம்பெனிகளுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு குலைந்தால் புத்ததேவ் பொறுமையிழக்கிறார்.இதில நல்லாட்சி தம்பட்டம் வேறு, 'முதலாளித்துவ ஜனநாயகம் எத்துணை உயர்ந்ததாக இருந்தாலும், அதிலும் மக்கள் கூலியடிமையில்தான் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை' என ஏங்கெல்ஸ் கூறுகிறாரே, அதன் பொருள் என்ன? அது சரி, சித்தாந்தத்திற்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? சமகால விசயத்திற்கு வருவோம்.நீங்கள் சர்வதேச அளவில் உச்சிமோந்து வியந்தோதுகிறீர்களே,சாவேஸ், அவரும் 'இதே கைகள் கட்டப்பட்ட, தொழில் வளர்ச்சியின் அவசியம் உணர்ந்த' காலகட்டத்தில்தான் தமது நாட்டு எண்ணெய் வயல்களை தேசியமயமாக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளை விரட்டியடிக்கிறார். ஒருவேளை அவரும் சர்வதேச நக்சலைட்டாகி விட்டாரோ?

**இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முதலாளித்துவ ஆட்சியமைப்பிற்குள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பெரும் சாதனையான ஒன்று. இது கம்யூனிச வரலாற்றில் மிக புதுமையானது. இந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சர்வதேச அளவில் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கனவுகளையல்லவா இந்த நக்சல்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.**

4. அட அய்யா, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கு வங்க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களா? வேடிக்கைதான். உலக வங்கி அதிகாரிகளும், சலீம் குழுமமும், பன்னாட்டு கம்பெனி அதிகாரிகளும் அன்றாடம் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்களே, அது என்ன? ஒரே தமாசா இருக்குப்பா!

தயை கூர்ந்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன் சந்திப்பு அய்யா!

Sat Mar 17, 01:41:00 PM IST ///////

இதுபோல் இன்னும் பல்வேறு கேள்விகள் முறையாக பதிப்பிக்கப்படாமல் தோலர் சந்திப்பு அவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதான் இவர்களது விவாத இலட்சனம். இப்போது வெளியாகியிருக்கும் நந்திகிராம கொடுமைகளுக்கான மக்கள் தீர்ப்பாயத்தின்(People's Tribunal) விசாரனை அறிக்கை சிபிஎம் அரசின் மீது காறி உமிழ்கிறது. அறிக்கையின் ஒவ்வொரு வரியும், குஜராத் குறித்த தெகல்காவின் கட்டுரைகளை நமக்கு நினைவு படுத்துகின்றன. நந்திகிராமில் நடந்துள்ள சம்பவங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்கள், அவற்றை சிறிதும் இரக்கமின்றி நிகழ்த்திய சிபிஎம் கும்பலை ஒவ்வொருவனின் பெயராக
பகிரங்கமாக பாதிக்கப்பட்ட மக்கள், தீர்ப்பாயத்தின் முன் தெளிவாக எடுத்து வைத்திருக்கின்றனர். அவ்வறிக்கை விடியல் பதிப்பகத்தால் தமிழ் மொழியாக்கம் பெற்று வெளியாகியிருக்கிறது. (கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது.)

இவ்வளவு இழிவான செயல்களையும் சிறிதும் வெட்கமின்றி, குஜராத்தின் 'எழுச்சியுற்ற இந்துக்களை'ப்போல மே.வங்கத்தின் எழுச்சியுற்ற காம்ரேடுகள் நிகழ்த்திவிட்டு, எப்படி இவர்களால் துணிச்சலாக வெளியே நக்சல்குழுக்களை அவற்றோடு இணைத்து அவதூறு செய்ய முடிகிறது என்று தெரியவில்லை.

இந்நிலையில் நமது அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தோழர் அருள் எழிலனின் கட்டுரையைக் கண்டு வெம்பி, வெடித்த நம்ம காம்ரேடுகள், அதற்கு எதிர்விணை என்கிற பெயரில், அவர்களுடைய தீக்கதிர் நாளேட்டில், 'புரட்சியாளர்களா, சீர்குலைவாளர்களா' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை அன்வர் உசேன் என்பவர் மூலமாக எழுதி வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரையினுள், மகஇகவை எப்படியாவது பயங்கரவாத / தீவிரவாத அமைப்பாக சித்தரிக்கவேண்டும் என்கிற அரிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெளிவாகத் தெரிகிறது.

அக்கட்டுரையின் மீது நமக்குள்ள பல கேள்விகளை தீக்கதிர் அலுவலகத்திற்கோ அல்லது சிபிஎம் கம்பெனிக்கோ சென்று நாம் கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சிபிஎம்மின் 'இணையக் கோமாளி' சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள், அக்கட்டுரையினை தனது வலைதளத்தில் பதிப்பித்தார்.

நம்மைப்பற்றிய விசயமாக இருப்பதனால், இக்கட்டுரையின் மீதான நமது பதில்களையும் விமர்சனங்களையும் பின்னுட்டமாக அனுப்பலாம் என்று நானும் இதுவரை 4 பின்னூட்டங்களை அனுப்பியிருக்கிறேன். அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை பதிப்பிக்காத துரோகி சந்திப்பு, அனானிகளின் பின்னூட்டங்களையெல்லாம் திறந்த மனதோடு பதிப்பித்து பதிலும் சொல்லி சிலாகிக்கிறார். (நம்மிடம் வைக்கப்படுகின்ற கேள்விக்கு எதிரான நமது பதில்களைக்கூட பதிப்பிக்காமல் இருட்டடிப்பு செய்துவரும் இவன், கம்யூனிசத்தையும் அதன் ஆசான்களையும் தொடர்ந்து அவதூறு செய்துவரும் 'தமிழ்மணி' என்கிற பார்ப்பன மணியின் தளத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

எனது பின்னூட்டங்களை ஏன் பதிவிட வில்லை என்று கேள்வியெழுப்பியதற்கு சிறிதும் வெட்கமில்லாமல் கீழ்கண்ட தமது பதிலை அதே பதிவின் கீழ் பதிப்பித்திருக்கிறான்.

////At 4:04 PM, சந்திப்பு said...
ஏகலைவனின் பதிலை வெளியிடவில்லை என்பது உண்மையே வெளியிடும் உத்தேசமும் இல்லை. அவர் இதனை தனிப்பதிவாக அவருடைய தளத்திலேயே வெளியிடலாம்... வாழ்த்துக்கள்!////




SUCI கும்பலை நக்சல்பாரிகள் என்று புரிந்து கொண்டிருக்கும் அல்லது திரித்து கொண்டிருக்கும் இந்த சிபிஎம் துரோகிகள், மேற்கண்ட அக்கட்டுரையில் சல்வாஜூடும் அமைப்பைக் காட்டி புரட்சிகர அமைப்புகளை விமர்சித்திருக்கின்றனர்.

நக்சல் அமைப்புகளுக்கு அறிவுரையோ அல்லது அவ்வமைப்புகளுக்கு எதிராக அவதூறுகளையோ அள்ளிவிட்டுவரும் இத்துரோகக் கும்பல், இதுவரை சல்வாஜூடும், ரன்வீர்சேனா போன்ற கூலிப்படை குண்டர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டது கிடையாது. அப்படியிருக்க புரட்சிகர குழுக்களை மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு இவர்கள் விமர்சிக்கும் நோக்கம் எப்படிப்பட்டது? இத்தகைய தொடர்ச்சியான துரோகத்தனம் எவ்வளவு கேவலமானது என்பதை சிபிஎம் சகதிக்குள் சிக்கித் திணறும் நடுநிலையாளர்களிடம் இப்பதிவின் மூலமாக கேட்கவேண்டியுள்ளது. அதனால் தான் இப்பதிவையே எழுதியிருக்கிறேன்.

இத்துடன் பின்வரும் இணைப்பினைப் பயன்படுத்தி புதிய ஜனநாயகம் ஜூன்'2008 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையினைப் அவசியம் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தோழர் அசுரன் தனது தளத்தில் அக்கட்டுரையினை பதிப்பித்திருக்கிறார்.





தோழமையுடன்,
ஏகலைவன்.

Tuesday, June 3, 2008

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி






ராமன் கோயில் முதல் ராமர் பாலம் வரை தனது எல்லா அஸ்திரங்களும் தேர்தல் களத்தில் புஸ்வானமாகிப் போனதால், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு கூப்பாடு போடுவதன் மூலமாகமட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பாஜக மதவெறிக்கும்பல் ஒரு திட்டமாக வகுத்து, அதனை செயலாற்றி, வெற்றியும் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம் கர்நாடகத் தேர்தல் முடிவுகள்.


இராஜஸ்தானில் தமது கட்சி வெற்றி பெற்றால் குஜ்ஜார்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் இடமளிப்போம் என்று வாக்குறுதியளித்து, அவர்களின் பெருவாரியான வாக்குகளைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது இக்கும்பல். குஜராத்தில் தனது அடிப்படையான இந்துத்துவ வெறியின் மூலம் வெற்றி பெற்றது. இப்போது கர்நாடம்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் தண்ணீர்களின் அரசியலால் விளைந்த விளைவே என்பது அனைவருக்கும் தெரியும். "அது என்ன தண்ணீர்கள்!" என்று யாரும் ஆச்சர்யப்படவேண்டாம். இத்தேர்தல் வெற்றிக்கு உதவியது இருவேறு மாதிரியான தண்ணீர் என்பதால் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

ஒன்று தேர்தல் அறிவிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு பயன்பட்ட ஒகேனேக்கல் 'குடிநீர்', மற்றொன்று தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன் பயன்படுத்தப்பட்ட 'குடி(யைக் கெடுக்கும்) நீர்'. முதல் நீரின் பலன் தேர்தலில் வாக்குகளாகக் குவிந்தது, மற்றொன்று அவ்வாக்குகளை அள்ளித்தந்துவிட்டு பிணங்களாகச் சரிந்தது.


தேர்தல் நடந்த மறுநாள், "எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிந்தது" என்று அறிவித்தார் அம்மாநிலத் தேர்தல் ஆணையர். ஆனாலும் 200 உடல்கள் சவங்களாக ஆக்கப்பட்ட அக்கிரமம் எவ்வாறு நிகழ்ந்தது?! அதை நிகழ்த்தியது ஆயுதங்களோ கலவரங்களோ அல்ல, மேற்சொன்ன குடி(யைக் கெடுக்கும்) நீர் தான்.

ஓட்டுக்காக வாங்கி ஊற்றப்பட்ட சாராயம் மிச்சமின்றித் தீர்ந்து போனதால், விஷச்சாராயத்தை விற்று காசாக்கியது கள்ளச் சாராயக் கும்பல், அதையும் ஓட்டாக்கியது மேற்கண்ட பதவி வெறிபிடித்த கும்பல்.

முடிவு தமிழகக் கர்நாடகத்தைச் சார்ந்த இருநூறு பேர் ஒரே இரவில் பிணமானார்கள். மேலும் பலநூறு பேர் கண் பார்வை இழந்துவிட்டார்கள். இதுதான் இந்த வெற்றியின் இரகசியம்.

ஓட்டுப் பொறுக்க, தமிழ்மக்கள் தங்கள் (ஒகேனேக்கல்) சொந்த மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளவிருந்த குடிநீரைக் கூட பறிக்க நினைக்கும் இக்கும்பல், கர்நாடக வெற்றியைத் தங்களது 'தென்னிந்தியாவுக்கான நுழைவுவாயில்' என்று சொல்லிப் புளகாங்கிதமடைகின்றன. ஒருவேளை இவர்களது தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை. தமிழகமும் இருக்குமானால் இந்த பயங்கரவாதக் கும்பல், தமிழகத்தில் ஓட்டுப் பொறுக்க வேறெந்த சதிவேலையில் ஈடுபடுமோ தெரியவில்லை.



"ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறக் கூடாது என்பது எமது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடு, அதேபோல், இப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையினை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு" என்று குடிபோதையில் உளறிவிட்டுப் போயிருக்கிறார் நம்ம 'வெங்காய'நாயுடு.

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழ் மக்களுக்கு குடிநீரைக் கூட மறுக்கும் இக்கும்பல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய மென்னியைப் பிடிக்கும் இந்த கேடுகெட்ட கூட்டம், நாங்கள் தென்னிந்தியாவில் நுழைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என்றால், இது தென்னிந்தியாவின் ஒரு அங்கமான தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதே கருத்தைத்தான் இங்குள்ள 'எச்ச'ராஜா முதல் 'எல'கணேசன் வரை, இன்னும் 'சோ'மாறி போன்றவர்களும் இங்கே தொடர்ந்து வாந்தியெடுக்க இருக்கின்றார்கள்.


இவர்களின் கூப்பாடெல்லாம் ஒருபுறமிருக்க, புதியதாக ஒரு கொ.ப.சே. கிளம்பியிருக்கிறார். அவர்தான் நம்ம 'தீம்தரிகிட'ஞாநி.


"கருனாநிதிக்கு வயசாகிவிட்டது அவருக்கு ஏன் இந்த வீன் வேலை" என்ற தனது ராமர்பால ஆதரவுக் கருத்தின் மூலமாக, நீண்ட நாட்களாக தமது முற்போக்கு முகமூடிக்குள் மறைத்து வைத்திருந்த பூநூலை சற்று வெளிக்காட்டியவர்தான் இந்த ஞாநி. அதற்கு எதிர்விணையாகப் போகிற வருகிற இடங்களிலெல்லாம் எமது மகஇக தோழர்களிடம் செருப்படியும் பட்டார்.


இப்படித்தான் சென்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தென்பட்ட ஞாநியை வளைத்துக் கொண்ட எமது தோழர்கள் மூன்று பேர் கேட்ட கேள்வியில் மூத்திரம் முட்ட விலகி ஓடினார். "கருனாநிதியைப் பற்றியெல்லாம் எழுத முடிகிற உன்னால், குஜாராத்தில் இந்துவெறிக் கும்பல் நடத்திய அக்கிரமங்களைப் பற்றி ஏன் எழுதமுடியவில்லை" என்று கேள்வி கேட்டனர் எமது அந்த தோழர்கள். கருனாநிதியைப் பற்றிய எமது விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்து வெறியை தனது முற்போக்குத் திரைக்குள் மூடிமறைத்து வைத்துக் கொண்டு திரியும் இவனுக்கு கருனாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எமது எதிர்விணைக்குக் காரணம்.

தான் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு எழுத்து மாறாமல் பிரசுரிக்க குமுதம், ஆனந்தவிகடன் போன்ற கழிசடைப் பத்திரிக்கைகள் இருப்பதால் எதையும் எழுதலாம், யாரும் நம்மை நெருங்கிக் கேள்வி கேட்க முடியாது என்கிற மிதப்பில் இருந்த இந்த பேடிக்கு எமது தோழர்களின் கேள்விகளும் கண்டனங்களும் புதுவிதமான அதிர்ச்சியைத்தான் தோற்றுவித்தன.


இது ஒருபுறம் இருக்கட்டும். சென்ற ஞாயிறு அன்று (01/06/08) இரவு 09:30 மணியளவில் ஜெயா டிவியில் (ஜெயாவின் பிய்ந்துபோன செருப்புகளுக்கு பூமாலை போட்டு ஆராதிக்கும் பூசாரி) ரபி பெர்னாட் உடன் நேர்கானல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தார் நம்ம ஞாநி. சரி என்னதான் பேசுகிறார் பார்ப்போமே என்று கவனிக்கத் தொடங்கினேன்.


"கருநாடகத் தேர்தல் முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?" என்பதுதான் கேள்வி.

"கருநாடக மக்கள், குஜராத் மக்களைப் போல் புத்திக் கூர்மையுள்ளவர்கள் என்பதை இத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் வலுவான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க கருனாநிதி அறிவித்த கலர் டி.வி., ரூபாய்க்கு 2கிலோ அரிசி போன்ற கவர்ச்சிகர சலுகை அறிவிப்புக்கள், சமீபத்தில் நடைபெற்ற குஜராத், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு மாநில மக்களும் இச்சலுகை அறிவிப்புகளைப் புறக்கணித்து பாஜகவுக்கு பெருவாரியான வெற்றியினை வழங்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது."

"மேலும் கர்நாடகாவில் போட்டியிட்ட சினிமா நடிகர்கள் அனைவரும் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கர்நாடக மக்கள் சினிமாக் கவர்ச்சி அரசிலையும் புறக்கனித்துள்ளார்கள் என்பதுவும் கூட கூடுதலான சிறப்புதான்."

"இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விசயம் என்ன வென்றால், கன்னட வெறிபிடித்த வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் மக்கள் புறக்கனித்ததற்குக் காரணம், பாஜகவின் மொழிவெறி எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிதான் இத் தேர்தல் முடிவுகள்". "இந்த வெற்றியின் எதிரொலி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை". என்று புகழாரம் செய்தார்.

உன்மையில் நிகழ்ந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை வாட்டாள் நாகராஜின் வழக்கமான வேலையை எடியூரப்பாதான் செய்தான். வாட்டாள் நாகராஜ் தேர்தலில் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பே, கன்னட வெறியினைத் தூண்டுகிற அரசியலில் எடியூரப்பாவினால் தோற்கடிக்கப்பட்டான்.

காலம் காலமாக மதவெறி அரசியல் நடத்திவரும் பாஜக பயங்கரவாதிகளின் அன்றாட அரசியலே இத்தகைய மலிவான வெறிதூண்டும் நடவடிக்கைகள்தான். வாட்டாள் நாகராஜோ தேர்தலுக்காக வெறியினைப் பரப்புபவன். அதனால்தான் தொழில்முறைப் பயங்கரவாதிகளிடம் அவன் தோல்வியுற்றான்.



ஒகேனேக்கல் பிரச்சினையில் வாட்டாள் நாகராஜை முந்திக் கொண்டு தமிழக எல்லையில் அத்துமீறி நுழைந்தவந்தான் எடியூரப்பா. அந்த அக்கிரமத்தில் சம்பாதித்ததுதான் இப்போதைய முதல்வர் பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஞாநியால் மட்டும் எப்படி வெட்கமின்றி இவ்வாறு பேச முடிகிறது? எல்லாம் பூநூல் பாசம்ந்தான், வேறென்ன!


அப்ப இந்த 'முற்போக்கு' வேசம்?!, அதவிட முடியுமா? அதுதானே இவனுங்களோட பரம்பரைக் கவசம். பாரதி முதல் ஞாநிவரை எல்லாப்பயலும் இப்படித்தான் பிழைக்கிறான்.


'நண்டு கொழுத்தால் வலைக்குள்ள தங்காது' என்பது பழமொழி. குஜராத், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் கொழுப்பேறிய இந்த பார்ப்பன நண்டு இப்பத்தான் முற்போக்கு வலைக் குள்ளயிருந்து வெறியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.


'எல'கணேசனைவிட 'சோ'வைவிட கொடிய நச்சுப் பாம்பு இது. அதனை உடனே நாம் நசுக்கியாக வேண்டும். ஏனென்றால் இது பதுங்கியிருப்பது நமக்கு வெகு அருகாமையில் உள்ள முற்போக்கு முகாமில்.



தோழமையுடன்,

ஏகலைவன்.






Saturday, May 24, 2008

பூக்காயம்

பூக்காயம்

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக் கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்

முல்லரும்பு எனக் கூவி
முடுக்கெல்லாம் சுற்றிவந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் - பூ வலிக்கும்

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்தபோதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்றவேண்டாம்.

-துரை. சண்முகம்.

Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!




நந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. ‘நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு… ரொம்ப காண்டாக்கீது” என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் “நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க” அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு…. (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).

தூ… வெக்கங்கெட்ட நாயிகளா…. பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

- செய்தி ரசம்.