Wednesday, March 24, 2010

மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்! வரலாற்று எதிரிகளை எதிர்கொள்வோம்!!


23/03/2010 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 79வது நினைவு தினம். காந்தி தன்னுடைய போலியான அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.

நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது. ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின் போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது. மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர். தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள். பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும் பேசுவதன் மூலம் வரலாற்றைத்
திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள். கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள். இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.

சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள். பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.

போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை
வலியுறுத்துகிறார் பகத்சிங். ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது. போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு. தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.

1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள். ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார். 'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.

சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்' கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர். காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை. அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள். பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம். இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.

'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?

பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் 'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள். காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.

இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள். இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.

துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள். இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள். இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள் இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.

சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள். ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை" எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.

இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன. எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது. பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

Friday, March 12, 2010

சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!

அன்பார்ந்த தோழர்களே!

சென்ற வாரம் ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்த போது, நித்தியானந்தம் குறித்தும் பேச்சு வந்த்து. அவரும் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதால், தவிர்க்கமுடியாமல் சாருநிவேதிதா பற்றியும் பேசவேண்டியதாகிப்போனது. “சாருவையெல்லாம் நாம முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கத் தேவையில்லை தோழர்; அவன் அதையே ஒரு சுயவிளம்பரமா மாத்திக்கிட்டு, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ற ஆளு தான், அவன்” என்று வெறுப்பில் சொன்னார். உண்மைதான்.

செருப்புகளோடு எங்கேயாவது பெண்கள் இவனைத் துரத்தினால்கூட, “மேடம்ஸ், எல்லோரும் ஆளுக்கு ரெண்டு செருப்புகள் கொண்டு என்னை ஆசைதீர அடியுங்கள், ஆனால் ஸ்பென்சருக்குள் வைத்து அடிப்பதைவிட அப்படிக் கொஞ்சம் வெளியே மவுண்ட் ரோட்டில் வைத்து அடித்தீர்களானால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், அப்படியே அடிக்கும்போது உமனைசர்-சாரு, ஸ்கவுண்ட்ரல்-சாரு, பொறுக்கி ராஸ்கல்-சாருநிவேதிதா என்கிற வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தீர்களானால், பார்வையாளர்களுக்கு நான் கொஞ்சம் அறிமுகம் ஆகிவிடுவேன். அதைவைத்து நான் எப்படியாவது கொஞ்சம் பேர் சம்பாதித்துக் கொள்வேன்!

பேரும் பப்ளிசிட்டியும்தான் டப்பு பண்ண ஒரே வழி! நான் ஒரு பொறுக்கி மேடம்! தயவுசெய்து என்னை எல்லோருக்கும் தெரியறதுபோல அடிங்க மேடம்ஸ்! நான் தனியாள் இல்லை என்னை நம்பி மனுஷ்யபத்தரன்னு ஒரு ஹேண்டிகேப்டு ஜீவன் இருக்கு; கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்ஸ் ....”
என்கிற அளவிலானதுதான் அவன் தன்மீதான விமர்சன்ங்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அவனை ஊதாரி என்று அடையாளப்படுத்தினால், முந்திக்கொண்டு வந்து என்னைப்பற்றிய மற்ற எல்லா அயோக்கியத்தனங்களையும் தயவு செய்து சேத்துக்கோங்கண்ணா என்பான். அவனுடைய சொரணை மட்டம் என்பது இதுதான்.

(மேற்கண்ட ஸ்பென்ஸர் பெண்களின் செருப்படி நமது கற்பனைதான். இது உண்மையாவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் (அதாவது பொது இடங்களில் பெண்கள் கையால் செருப்படி வாங்குகின்ற வாய்ப்புகளை...) சாரு உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்...) அவனை விமர்சிப்பதில் ஒரு பயனும் கிடையாது; இருப்பினும் அவனுக்கும் ’கொள்கை’கூஜா தூக்க சிலபேர் இருக்கிறார்களே; அவர்கள் மத்தியில் அம்பலப்படுத்த அவன் மீதான விமர்சனம் தேவைப்படுகிறது. இலக்கியவாதி என்கிற போர்வையில் உழன்று கொண்டிருக்கும் இதுபோன்ற பொறுக்கிகளை நம்மைத்தவிர யாரும் அடையாளம் காட்டமாட்டார்கள்.

இந்த சாருநிவேதிதாவைப் பற்றி படிக்கும்போதே நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. உயிர்மை என்கிற கழிப்பறையில் அவன் இறக்கிவைக்கும் கழிவுகளைப் படிக்கும் போது நமக்கு ஆத்திரம்தான் மிஞ்சுகிறது. எதற்கெடுத்தாலும் “நான் அந்த பாரில் விஸ்கி அடித்துக்கொண்டிருந்தபோது......” என்றும் “கடற்கரையோரம் நண்பர்களுடன் சரக்குக்கு பெப்சி கலக்கிக்கொண்டிருந்தபோது.....” என்றும் “நான் ஒரு உமனைசர்...” (அதாவது பொம்பளை பொறுக்கி) என்றும் “பொண்ணுங்கன்னாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச்சிடும்ல்ல... எப்புடி...” என்பதாகவும் தான் வெட்கமின்றி எழுதிவருகிறான். குறிப்பாக அவனது சுயபுராணம் குறித்து எழுத எங்காவது வாய்ப்பு கிடைத்துவிட்டால், கிட்டத்தட்ட அவனது கட்டுரை முழுக்கவுமே இப்படிப்பட்ட கழிசடைக் கதைகள் நிறைந்திருக்கும். அவன் எதை எழுதினாலும் மாபெரும் இலக்கியம் என்று சொல்வதற்கு சில கூஜாக்கள் இருப்பதுதான் இவையெல்லாவற்றிற்கும் காரணம்.

நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் இன்னும் நித்தியானந்தனைக் காட்சிப்படுத்திக் கடைவிரித்து வருகிற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ”இதுவரை யாரும் பார்க்காத ‘அதிர்ச்சியூட்டும்’ புகைப்படங்கள்!” என்று சொல்லி கிளுகிளுப்புச் செய்திகளுடன் நக்கீரன் செய்திவெளியிட்டு வருகிறது. ஜெயேந்திரனாயிருந்தாலும் நித்தியானந்தனாயிருந்தாலும், இதில் கிடைக்கும் ஆபாச படங்களையும் வக்கிர செய்திகளையும் மேலும் பலமடங்கு மெருகேற்றி செய்திவெளியிட்டு காசுபார்ப்பதுதான் நக்கீரனின் ஒரே நோக்கம். அதற்குமேல் அவனுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.

ஆனா, மாட்டிக்கிட்ட சாமியாரு நம்மவாளா இல்ல அசலாரா என்று பதைபதைப்புடன் ஆராய்ந்து, நம்மவாளாக இருந்தால் மூடி மறைத்துவிடுவது அல்லது வேற்று சாதிக்கார சாமியாராக இருந்தால் சும்மா புகுந்து விளாசுவது என்கிற கொள்கைமுடிவோடு பார்ப்பன பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுகின்ற அயோக்கியத்தனங்கள் நாம் அறிந்ததுதான். மாட்டிக்கிட்ட சாமி எந்த சாதிக்காரனாயிருந்தாலும், மக்கள் முன் அம்பலப்படுவது இந்துமதமும் ஆன்மீகமும்தான் என்பது வேறுவிசயம். இந்துமத ஆன்மீகம் அம்மனமானால், பார்ப்பன சமூகம்தான் கோவனமின்றி வீதியில் அலைய நேரிடும். நித்தியானந்தன் ஒரு முதலியார் சமூகத்துக்காரன் அதனால்தான் பார்ப்பன பத்திரிக்கைகள் உவப்புடன் செய்தி வெளியிடுகின்றன, என்பது உண்மைதான். ஆனால், நித்தியானந்தன் என்கிற ஒரு ஆபாசப் பொறுக்கி சாமியாரின் சமூக அடையாளம் என்பது அவன் சாதி சார்ந்ததாக இல்லாமல், இந்துமதம் சார்ந்ததாகத்தான் வெளிப்பட்டு சந்தி சிரிக்கிறது. ஆனால், நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் ஏதோ காததூரம் இருப்பதாகத் திரித்து, மடைமாற்றி செய்தி வெளியிடுவதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு மட்டும் செயல்படுகின்றன பார்ப்பன ஊடகங்கள். நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்பதாகச் சித்தரிப்பதற்குத்தான் இந்துமக்கள் கட்சி, இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துப்பயங்கரவாத அமைப்புகள் போராட்ட நாடகங்கள் நடத்தினார்கள் என்பதும் உலகறிந்ததுதான்.


இன்றைய நித்தியானந்தனைப் போல நேற்றைய ஜெயேந்திரன் சிக்கிக்கிடந்தபோது, அதுகுறித்து நேர்மையாகச் செய்திவெளியிடாத, அதேநேரத்தில் ஜெயேந்திரன் நிரபராதி என்றும் திரித்து செய்தி வெளியிட்ட பார்ப்பன பத்திரிக்கைகள் இன்னும்கூட சந்தையில் நீடித்திருப்பது தமிழர்களின் உணர்வுமட்டத்தினால் நிகழ்ந்த விபத்து. இப்படியிருக்க இந்த வார ஜூ.வி.யில் ‘முற்போக்கு எண்ணம் கொண்ட பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியை ஜூவியிடம் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட சாரு நிவேதிதாவின் நேர்கானல் வந்திருக்கிறது.


”ஆதிசங்கர்ர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு வெளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்.” என்று சாருநிவேதிதா சொன்ன பதிலை ஒட்டிய அடுத்த கேள்வியிலேயே, அவனை ஒரு பெரியாரிஸ்டான நீங்கள் எப்படி நம்பினீர்கள்? என்று ஜூ.வி. கேட்கிறான். சாருவின் மனைவிக்கு இருந்த கால்வலியை நித்யானந்தர் கையால் தொட்டவுடன் வியாதி மாயமாகிவிட்ட்து; அதனால் அப்படியே சுவாமிஜியை நம்பிவிட்டாராம். “செக்ஸுக்கும் ஆண்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரம்ம் தொடங்கினா யாரும் வெட்டவாபோறாங்க?” என்கிற பொன்மொழிகளெல்லாம் ஜூ.வி.க்கு சாரு அருளியவை. தான் ஒரு உமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லியிருப்பதாகவும் அப்பேட்டியில் தொடர்ந்து பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா.

இப்போது விஷயம் என்னவென்றால், சாரு என்றால் யாரு என்று தெரியும். குடிகாரன், ஊதாரி, பொம்பளை பொறுக்கி என்று தன்னைப்பற்றி அவர் பலமுறை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு சூடு, சொரனை, வெட்கம், மானம் போன்ற, மனிதர்களுக்கெல்லாம் பொதுவாக இருக்கும் அடிப்படையான உணர்ச்சிகள் எதுவும் இல்லாத, வெறும் பாலியல் உணர்ச்சி ஒன்றை மட்டும் கொண்டிருக்கும் ஒரு நவநாகரீக விலங்கு தான் சாரு என்பது அவர் தன்னைப்பற்றி ‘பெருமைபொங்க’ வெளிப்படுத்திக்கொண்ட செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு ஒழுக்கம் கெட்ட ஒரு கேவலமான கழிசடையை, தன்னை ஆதிசங்கரனின் பக்தன் என்றும் சொல்லிக்கொள்பவனை, முற்போக்காளன் என்றும் பெரியாரிஸ்டு என்றும் உருவகப்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கும் ஜூ.வி.யின் பூணூல் கொழுப்பை எதைக்கொண்டு அடிப்பது?

ஊதாரி, பொம்பளைப் பொறுக்கி போன்ற அடைமொழிகளைச் சூடிக்கொண்ட சாரு நிவேதிதா தன்னை ஒரு ஆதிசங்கரனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருப்பதுதான் சரியானபொருத்தம். ஆதிசங்கரனது ‘தத்துவ’ங்களுக்குள் விழுந்து கரைகண்டு நுரைதள்ளிய ‘சுவாமி’,‘பெரியவா’, ஜெயேந்திரனின் கதைதான் உலகறிந்த இரகசியமாயிற்றே!

கொலை
கொள்ளை
கற்பழிப்பு
கஞ்சா மற்றும் எல்லா போதை வஸ்துக்கள்
மற்றும்
ஜெயேந்திரன் / விஜயேந்திரன் = ”ஆதிசங்கரனிசம்!”

ஊதாரித்தனம்
நிரந்தர போதை
காற்றிலாடும் கலர் துணியைக்கூடத் துரத்தும்
பொம்பளைப் பொறுக்கித்தனம்
மற்றும்
’அண்ணன்’ சாருநிவேதிதா = “ஆதிசங்கரனிசம்!”

ஆம்....
இதுதான் ஆதிசங்கரனிசம்!
இதுதான் ஆன்மீகம்!
இதுதான் இந்துமதம்!
இதுமட்டும்தான் இந்துமதம்!


இப்படியிருக்க, ஆதிசங்கரனுக்கும் நித்தியானந்தனுக்கும் தான் அடிமையாயிருக்கிற உண்மையை புளகாங்கிதப்பெருமையோடு பதிவு செய்திருக்கும் சாருவை; அந்த நேர்காணலில் எந்த இடத்திலும் பெரியாருக்கு ஆதரவாகவோ அல்லது தன்னை ஒரு பெரியாரிஸ்டு என்றோ சொல்லிக்கொள்ளாத சாருவை; பொம்பளைப் பொறுக்கி, குடிகார ஊதாரி என்று தன்னைத்தானே விளித்துக்கொள்கிற சாருவை யாருடன் அல்லது எந்த சித்தாந்தத்துடன் தொடர்புபடுத்தியிருக்க வேண்டும்? பார்ப்பன இந்துமத பொறுக்கிக் கலாச்சாரத்தோடு அச்சு அசலாகப் பொருந்திப் போகிற அந்தக் கழிசடையை, பெரியாரியத்தோடு இழுத்து வந்து கோர்ப்பது, ’சிண்டு’முடிவதில் பல்லாயிரமாண்டு அனுபவம் வாய்ந்த பரம்பரையில் வந்த ஜுவி, தமது தலைமுறைகளின் அனுபவத்தினூடாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்டிருக்கும் சிண்டுதான் இது.

பார்ப்பன ஜுவி, சாருவை பெரியாரிஸ்ட் என்று மேன்மைபடுத்த முயற்சிப்பதன் மூலம் பகுத்தறிவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் இழிவுபடுத்திவிடலாம் என்பது பாப்பார ஊடகங்களின் நுட்பமான தொடர்ச்சியான அனுகுமுறையாகும். ஜெயேந்திரனின் வழிவந்த நித்தியானந்தனை, ஜெயேந்திரனோடு பொருத்திப் பார்க்காமல் பெரியாருடன் ஒப்புமைப்படுத்தி இணையங்களில் எழுதிவருகிறார்கள், டோண்டூ ராகவன் உள்ளிட்ட பாப்பார பயங்கரவாதிகள். இந்த பார்ப்பனக் குசும்பு, நம்மைக்காட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் பெரியாரையும் சிறுமைப்படுத்த முயல்வதையும் நாம் உணர்ந்து மிகக்கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்.

இதனை வாசிக்கின்ற தோழர்கள் தத்தமது தளங்களது இதுகுறித்து ஒரு பதிவையாவது பதிய வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பறிக்கிற மறுகாலணியாக்கத் திட்டங்களை வானுயரப் புகழ்ந்து எழுதுவதும், அம்மக்களுக்கு ஏற்படும் துன்ப-துயரங்களை சிறிதும் இரக்கமின்றி மொத்தமாக இருட்டடிப்பு செய்வதில் முன்நிற்கும் இந்தியாவின் அனைத்து பார்ப்பன ஊடகங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதே பாப்பார ஊடகங்கள்தான் ஈழ மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டது என்பதை நாம் மறக்கமுடியுமா?


இப்படிப்பட்ட சமூகக் கேடுகளை அனைத்துத் துறைகளிலிருந்தும் நடத்திக்கொண்டு பல்வேறு வேடங்களோடு அலைந்து கொண்டிருக்கும் சமூகவிரோதிகளை, இந்துமதவெறிக் காலிகளை களத்தில் வீழ்த்தியழிக்கச் சபதமேற்போம்!


தோழமையுடன்,
ஏகலைவன்

Saturday, March 6, 2010

உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.

சி.பி.எம். என்கிற போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த செய்திகள் பலவற்றை நாம் கடந்த சில நாட்களாக அறிந்தும் பேசியும் வருகிறோம். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்கிற ஐயப்பாடு அவருக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் மற்றும் உ.ரா.வ.வின் சகோதரி மூலமாகவும் சில வார ஏடுகளில் முன்வைக்கப்பட்ட்து. அவரது மரணத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் சி.பி.எம். கட்சியோ அல்லது அவரது மனைவியோ, அவரது மரணம் குறித்து விசாரணை எதுவும் இதுவரை கோரவில்லை. குறைந்தபட்சம் அவரத் மரணத்திற்கு தாங்கள் காரணமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகவேனும் அவர்கள் நியாயமான விசாரணை கோரியிருக்கலாம், அத்தகைய நேர்மையெல்லாம் பிழைப்புக்காக கட்சி நட்த்தும் அந்த்த் தலைமையிடம் இருக்க வாய்ப்பில்லை போலும்!

மாறாக அவரது மரணம் தற்கொலைதான் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியே வருகிறார்கள். ”வேண்டுமானால் அது தற்கொலைதான் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யட்டுமா...” என்று கேட்காத குறைதான். அட போலீசு இதுகுறித்து விசாரிப்பதில் நம்ம காம்ரேடுகளுக்கு என்னய்யா நட்டம் என்று சாதாரண ஆள் கூட கேட்பானா மாட்டானா?! அட, அவரது மரணம் தற்கொலையா கொலையா என்பது தெரிந்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவோம் என்று அன்றைக்கே (இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவரது தோழர்கள்...) கோரியிருந்தால், எண்ணி ஒருமணி நேரத்தில் கொலையாளி அனைவருக்கும் முன்பாக வந்திருப்பான். என்ன செய்வது, ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையதுதானா என்பதுகுறித்து உறுதி செய்துகொள்வதற்காக டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும் என்று ‘வெவரமாக’ கேட்கமுடிந்த சி.பி.எம். கட்சியினருக்கு, அவருடைய மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்ட்து ஏனோ?! இது ஏதோ தற்செயலாக நடந்த்து அல்ல என்பதும் அவரது மரணம் இன்னும் பல்வேறு வண்டவாளங்களை வெளிக்கொண்டுவரவிருக்கிறது என்பதும் இன்று சி.பி.எம். கட்சியினராலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பல பெண்களுடன் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்திருக்கும் பொறுக்கிகளாயிருந்தாலும் (ஆதாரம் உ.ரா.வ.வின் கடிதம்), கேட்கக் கூசுகின்ற அனைத்து வகை மோசடியையும் செய்பவனாயிருந்தாலும் நடவடிக்கை எடுத்திராத அக்கட்சி, இந்த வரதராசனுக்கு எதிராக கடமையாற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னணி குறித்து கேள்வியெழுவது இயல்புதானே? மாநிலச் செயலாளருக்கான போட்டிதான் அந்த கடமையின் பின்னணியாக இருந்திருக்கிறது. மாநிலச் செயலாளர் பதவியைக் குறிவைத்துவிட்ட உ.ரா.வ.வை அமைப்பு ரீதியாக ஓரம்கட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியதால்தான், அவருக்கு எதிராக ‘ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு போட்டியற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு இங்கு புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், போலும்!

வழக்கமாக, காங்கிரசு கட்சியின் கோஷ்டிகள் வெறும் வேஷ்டிகளைக் கிழித்துக் கொள்வதுடன் தங்களது பதவிச் சண்டையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல ஈரக்குலையறுக்கும் செயலை கோஷ்டி மோதலுக்கு பெயர்போன காங்கிரசார்கூட கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இது ஜெயேந்திரன் பாணியிலான செயல்பாடு. இதுதான் பார்ப்பனிய பாணியிலான ‘ஒழுங்கு நடவடிக்கை’யாகும். உ.ரா.வ.வின் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அக்கட்சி அமைத்த கமிட்டி முறையாக நடந்து கொள்ளாத்துதான் தன் மீதான ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர் தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதாக இல்லை.

இச்சம்பவத்தின் பின்னணியில் நேற்றையதினம் (04.03.2010 – வியாழக்கிழமை) அவருடைய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது மரணம் கொலையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவரது கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளமும் அதன் மூலம் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த்தாக தகவல். இந்த அறிக்கையினை மையப்படுத்தி மக்கள் தொலைக்காட்சியின் செய்தியில், உ.ரா.வரதராசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மரணத்திற்கு முன் உ.ரா.வ. சி.பி.எம். கட்சியின் கோஷ்டி சண்டையில் பழிவாங்கப்பட்ட வித்த்தையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான் சி.பி.எம். கட்சியின் குண்டர்கள் சிலர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் தலைமையில், இன்று (05.03.2010) காலை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அதன் ஊழியர்களின் மீதும், மேற்குவங்கத்தை (சிங்கூர், ந்ந்திகிராம், லால்கார்) நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் மக்கள் தொலைக்காட்சியும் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில், “நாங்கள்தான் கொண்றோம் இப்ப என்னான்ற?!...” என்பதுபோன்ற செய்தியை சூசகமாக இந்த கொடூரத் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள், நம்ம காம்ரேடுகள்!

இவ்விடயத்தைக் கேள்விபட்டபிறகு நேர்மையான தோழர்கள் எவரேனும் இன்னும் சி.பி.எம். கட்சியில் நீடித்திருப்பார்களேயானால், அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்கு இருக்கிறது.

சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைமை யோக்கியமானதாகவோ குற்றமற்றதாகவோ இருந்திருந்தால், உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான பிறகாவது, அது எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? மரணத்திற்கு முன் கடைசியாக உ.ரா.வ. தனது கட்சித் தலைமைக்கு எழுதிய கடித்த்தில், அவர் குற்றம் சாட்டியுள்ள உ.வாசுகி, பி.சம்பத், ஜான்சிராணி போன்ற அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் (அதாவது உ.ரா.வ.வைப் பொறுத்தவரை, அவரது துரோகிகள்...) புடைசூழ, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், ”உ.ரா.வ. தற்கொலை செய்து கொண்ட்தற்கான ஆதாரமாக அவர் எழுதிய கடிதங்கள் இருக்கும் போது, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை...” என்று இன்று மாலை (05.03.2010) உறுதியாக அறிவிக்கிறார்.

நீச்சல் தெரிந்த தங்களுடைய தோழர், ஒரு சிறு ஏரி நீரில் எவ்வாறு விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வியோ, ஏரி நீரில் மீட்கப்பட்ட பிணம் உள்ளாடையுடன் எடுக்கப்பட்டிருப்பது குறித்த (தற்கொலை செய்துகொள்பவர் இவ்வளவு தூரம் வெறும் உள்ளாடைகளுடன் வந்தா தற்கொலை செய்துகொண்டிருப்பார்...) கேள்வியோ, அந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவருக்குக் கூட ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அவரது சக தோழர்களான சி.பி.எம். தலைமைக்கு மட்டும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான இந்த தருணம் உள்பட...) இதுவரை தோன்றாத்தன் காரணம்தான் என்ன? இதுகுறித்து அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் யாராவது இருந்தால் யோசித்து விடைதேட வேண்டும்.

மாறாக தனது கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவரின் மரணம் குறித்து சில கேள்விகளை எழுப்பிய ஒரு ஊடகத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்துவதென்பது நேர்மையான செயலா? பொதுவாக இந்த ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்ட்தை நான் இப்பதிவினூடாக கண்டிக்க முயலவில்லை. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் எந்த விசயங்களையும் வெளியிடாமல் மோசடியாக இருட்ட்டிப்பு செய்வதோடு, அரச பயங்கரவாத்த்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்துறை பொறுக்கிகள் தாக்கப்படுவது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், இந்த தாக்குதல்கள், ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பதவிச் சண்டையினால் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் பதவி வெறியானது கொலைவெறியாக ‘மேல்நிலையாக்கம்’ அடைந்திருப்பதுவும், பின்னணியாக அமைந்திருப்பதுதான் இதில் மையப்படுத்தி விவாதிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய விசயமாக நான் கருதுகிறேன். அதேவேளையில், ஊடக ஜனநாயகத்தையும், ’பத்திரிக்கா தர்மத்தை’யும் பாதுகாக்கப் பிறந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிமார்க்சிஸ்டுகள், தங்களை பாதிக்கும் விசயம் எவ்வளவு நேர்மையான, உண்மையான விசயமாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முத்தாய்ப்பாக இருப்பதுதான் நமக்கருகாமையில் நடந்திருக்கும் இக்கொலைவெறி தாக்குதல்.

ஈழப் போராட்ட்த்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனத் திமிருடன் கட்டுரை எழுதிய மாலினி மாமியையும் அதனை வெளியிட்ட இந்து பத்திரிக்கையையும் கண்டித்து கோவையிலும் ஈரோட்டிலும் அப்பத்திரிக்கையினை எரித்து, போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை வன்மையாகக் கண்டிப்பதாக இரண்டு நாட்கள் தமது தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் எழுதிய சி.பி.எம். கட்சி; இதனால் பத்திரிக்கை சுதந்திரமே பாதிக்கப்பட்டுவிட்ட்தாக்க் கூப்பாடு போட்ட இந்த போலிக்கும்பல்; தமது சொந்த தோழரின் மரணம் குறித்து எழுப்ப்ப்படும் நியாயமான கேள்விகளுக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்கள் என்றால், இவர்களது கபடவேட்த்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று.

ஏன், சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க மாமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முட்டையாலடிக்கப்பட்டபோது ஏனைய ஓட்டுப் பொறுக்கிகள் எல்லோரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாக மாநிலக் குழுவைக் கூட்டி, நமது வழக்கறிஞர்களுக்கு எதிராக, “தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்ட்து...” என்று சிறிதும் கூசாமல் அறிக்கை விட்ட இந்த சி.பி.எம். தலைமை, உ.ரா.வ. குறித்து உண்மைச் செய்தியை வெளியிட்ட ஊடகத்தை பாய்ந்து பிடுங்குகிறது என்றால், இதன் பின்னணியில் உள்ள விசயங்கள் வேறு என்னவாக இருக்கமுடியும். ஆம், அது கொலைதான் என்பதுவும் அந்த கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்பதையும் இந்த தாக்குதலின் மூலாமாகவும் நிரூபித்திருக்கிறார்கள், போலிகள்.

ரெண்டு மூனு எம்.பி. சீட்டுக்காக ஜெயல்லிதாவிடமும் கருணாநிதியிடமும் மன்றாடிக்கொண்டிருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழகத்திலேயே இவர்களது நடவடிக்கைகள் இப்படியிருக்கிறதென்றால், முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் இவர்களது நடவடிக்கை எப்படியிருந்திருக்கும், கொஞ்சம் யூகித்துத்தான் பாருங்களேன்!, டாட்டாவுக்கு ஆதரவாக சிங்கூரிலும், சலீம் என்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக ந்ந்திகிராமத்திலும் இன்னும் லால்கார் உள்ளிட்ட மே.வங்கத்தின் பல பகுதிகளிலும் சாதாரண, எளிய, உழைக்கும் மக்களின் மீது கொடூரமான ஆயுதங்களுடன் கொலைவெறித்தாக்குதல் நடத்திவரும் இந்த போலி மார்க்சிஸ்டுகள்; இவர்களது செயலை அம்பலப்படுத்தி கண்டித்த மேதா பட்கர் போன்றவர்களின் மீது, கொலைவெறித்தாக்குதல் நடத்தினார்கள். மேதா பட்கர் சென்ற வாகனம் மே.வங்கத்து சிபிஎம் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி நண்பர்களிடம் கேட்டபோது தமது கட்சி எந்த நிலையிலும் தவறு செய்திருக்காது, என்று ஆழமாக நம்புவதாகத்தான் தெரிவித்தார்களேயொழிய, நியாயமான பரிசீலனைக்கு அவர்கள் வரவில்லை. உ.ரா.வ. விசயத்திலும், பெரும்பாலான சி.பி.எம். அணிகளுடைய மவுனம் கூட அவர்களது அடிமை மனோபாவத்தையும் அப்பாவித்தனத்தையும்தான் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

காஞ்சிக்கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராம் அய்யரைக் கொலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டபோது, ஜெயேந்திரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பலர் வெட்கித் தலைகுணிந்தனர். ஆனால், பெரும்பாலான பார்ப்பனர்கள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாகத்தான் தம்மைக் காட்டிக் கொண்டார்களே தவிர, அதே பார்ப்பன சமூமத்தைச் சார்ந்த, கொல்லப்பட்ட சங்கர்ராமனுக்கு ஆதரவாக இல்லை. இதற்கான நோக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து கவலைப்படாத அக்கட்சியினர் பலர், கொலையானாலும் தற்கொலையானாலும் அதனுடன் நேரடியான தொடர்புடைய அக்கட்சியின் தலைமை குற்றமற்றது என்று அட்டியின்றி ஏற்றுக் கொள்கின்றனர் என்றால் இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.

உ.ரா.வரதராசன், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை கிட்டதட்ட எல்லா வாரப்பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கின்றன. அதில், “ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டு. ஆனால், பல பெண்களுடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்ட மாநிலத் தலைவர்களுக்கும், மத்தியக் குழு உறுப்பினர்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, என்னை மட்டும் தண்டித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அக்கட்சியின் தலைமை வெட்கித் தலைகுணிந்த்தாகவோ பதில் சொன்னதாகவோ தகவலில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அக்கட்சியின் அணிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மாநில அளவிலான தலைவர்களில் சிலர் பெண்பித்தர்களாகவும் பொறுக்கிகளாகவும் நடந்து கொண்டிருப்பது மீண்டுமொருமுறை அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரின் மூலமாகவே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதைத்தான். கட்சியின் தலைமை இப்படி அழுகி நாறிக்கொண்டிருக்கும் போது கீழ்மட்ட அணிகளில் நேர்மையானவர்களின் நிலைமை பரிதாபகரமானது. இத்தகைய அயோக்கியர்களால் நிர்வகிக்கப்படும், சீரழிந்த தலைமைதான் கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையையும், நெறிப்படுத்தும் இயக்கத்தையும் நட்த்த்தவிருப்பதாக்க் கதையளக்கிறார், த.மு.எ.க.ச. தமிழ்ச்செலவன். யார், யாரை நெறிப்படுத்துவது?!

கேவலம் மாநிலச் செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கோஷ்டி சண்டையின் பின்புலத்தில் உ.ரா.வரதராசன் ’நெறிப்படுத்த’ப்பட்ட்தைப் போல, (அதே நேரத்தில் அப்பதவிக்கு போட்டியிடாத ஏனைய தலைவர்களின் அயோக்கியத்தன்ங்களைப் பொறுத்துக்கொண்ட்தையும் போல...) ஆங்காங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், இன்னும் வட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளுக்குமான கோஷ்டிகள் இல்லாமலா இருப்பார்கள்? அத்தகைய கோஷ்டிகளைக் கொண்டுதான் தமது கட்சி நெறிப்படுத்தப்ப்ட விருப்பதாக ச.தமிழ்ச்செல்வன் வெட்கமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ’ஒழுங்கு நடவடிக்கை’யின் மூலம்தான் ஏராளமான நேர்மையான அணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் கட்சியின் மானம் இப்படி காற்றில் பறப்பது குறித்த கையறுநிலையில், தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பதவி நாற்காலியை மையப்படுத்தி வெளிப்படையாக மோதிக்கொள்ளும் இந்த எச்சில் இலை நாய்களின் ஓலத்தைவிட, பெரும்பாலான உழைக்கும் மக்களின் அன்றாட அவலக்குரல்தான் நம்மை பிடித்தாட்டுகிறது. அவர்களை இந்த மோசடியான சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டம்தான் நமக்கு முன் நிற்கும் முக்கியக் கடமையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போலி ஜனநாயக சமூகத்தை முற்றாகத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை ஒரு புரட்சியின்மூலம் நிறுவுகின்ற நமது நெடிய போராட்ட்த்தில், நம்மை முன்னேற விடாமலும், எதிரிகளின் இலக்குகளை நெருங்க விடாமலும் இடையூறாக இருந்துவரும் எதிர்ப்புரட்சி-சீர்குலைவுக் கும்பலான போலிகளை அம்பலப்படுத்தி வீழ்த்த வேண்டியதும் அவசியமல்லவா? நிச்சயமாக வீழ்த்துவோம்!

பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத பிழைப்புவாத-பினந்தின்னிக் கூட்டத்துடன் இருக்கும் அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாகத் துண்டித்துவிட்டு, உண்மையான விடியலுக்காக, நியாயமான போராட்ட்த்தை நோக்கி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துப் போராட வாருங்கள் என்று, எஞ்சியிருக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை அழைக்கிறேன்!

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.