சிபிஎம் என்கிற போலி கம்யூனிச கட்சியின் இணைய பிரதிநிதியாக இருந்த கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளைத் தொடர்ந்து, இப்போதுதான் அக்கட்சியின் வேறு சிலரும் வெகுவாக வலையுலகில் காணக் கிடைக்கிறார்கள். அப்படி ஆர்குட் வாயிலாக நம்கண்ணில் பட்டது ஒரு வலைதளம். அத்தளத்திற்குச் சொந்தமானவர் 'தோலர்' கவின்மலர் அவர்கள்.
புதிய தோழராச்சே இவராவது சந்திப்புக்கு மாற்றாக விவாதகளத்தில் இருப்பாரா பார்க்கலாம் என்று முயலும் விதமாகப் பதிவிட்ட எனது பின்னூட்டங்கள் பலவற்றை, சந்திப்பை விஞ்சும் வகையில் இருட்டடிப்பு செய்து தானும் அதே போலி முகாமின் பிரதிநிதிதான் என்பதை வெளிப்படையாக நிரூபித்திருக்கிறார். (அவர் இருட்டடிப்பு செய்த ஒருசில பின்னூட்டங்களை எனது தளத்தில் முந்தைய பதிவுகளில் பதிவிட்டுள்ளேன்) எனவே, எத்தனையெத்தனை வலைதளங்கள் போலிகளின் சார்பாக நடத்தப்பட்டாலும், அவையனைத்தும் விவாதங்களை இருட்டடிப்பு செய்தல் என்கிற பழைய மொந்தையிலேயே வழங்கப் படும் புதிய கள்தான் என்பது திண்ணமாகிறது.
அவருடனான எனது விவாதத்தில் கீழ்கண்ட பதிலை அவர் தெரிவித்ததோடு "இதற்கு தெளிவான பதில் வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையினை ஏற்று, தோழர் கோபா அவர்களின் தளத்திலிருந்து கீழ்கண்ட பதிவினை மீள்பதிவிடுகிறேன்.
இதனைத் தொடர்ந்து அவரோ அவர் சார்பாக வேறு எவர் வேண்டுமானாலும் எம்முடன் விவாதிக்க வந்தால் அனைத்து பின்னூட்டங்களையும் பதிப்பித்து விவாதம் தொடர்ந்து நடத்தப்படும் என்கிற உத்திரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.
////ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. ////
123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !
பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்...
"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.
"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.
"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை...
"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்...இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.
அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.
"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.
இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.
இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.
தோழர் சந்திப்பு அவர்களே!
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?
இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?
கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?
நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!
10 Comments:
சந்திப்பு said...கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.
LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................
3:57 PM
சின்ன கட்டபொம்மன் said...
..சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
################################
தோழர் சந்திப்பு அவர்களே!
..
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!###################################
..4:29 PM கோபா said...
சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?
4:59 PM
..கோபா said...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?
5:05 PM சந்திப்பு said...
..கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.
5:33 PM
..கோபா said...
சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.
..
நேற்று நிலவரம் தெரியுமா !!
..
காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.
..
அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?
..
பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.
..
உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.
9:14 AM
பாவெல் said...தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?
சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !
..
ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?
9 comments:
தோழர் ஏகலைவன்,
மிகத்தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி விவாதித்த அனைத்தையும் ஒரு கோர்வையாக வைத்துள்ளீர்கள். எல்லாவற்றிற்க்கும் சரியானதொரு பதிலை கோமாளி.சந்திப்பும் அவருடைய கூட்டாளிகளும் சொல்லியே தீர வேண்டும். கேவலமான ஒரு பிழைப்புவாத வேலையை செய்வதல்லாமல் அதற்கு வக்காலத்து வாங்கும் வேலையை செய்யும் இவர்களை ஒழித்துக்கட்டாமல் விடக்கூடாது.
தோழமையுடன்,
வாஸ்கோவ்.
வர்க்கப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தோழர்.இராசேந்திரனின் படுகொலைக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவுசெய்கிறேன் தோழர்.
தோழர்கள் வாஸ்கோவ், செங்கதிர் இருவரது வருகைக்கும் நன்றி!
தோழர் செங்கதிர் அவர்களின் தளம் சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அதுபற்றி நான் அறிந்தேன். தொடர்ந்து எழுதுங்கள் தோழர். வாழ்த்துக்கள்!
தொடர்ந்து பேசுவோம்.
எதிர்வரும் விமர்சனங்களைப் பதிப்பிக்க வக்கற்ற இருட்டடிப்புக் கும்பலில் உள்ள கோமாளிகளின் வரிசையில் முளைத்துள்ள புது கோமாளி கவின்மலர் அவர்களே!
உங்கள் அவதூறுகளை மட்டும் போகிறபோக்கில் எடுத்தியம்பிவிட்டு, எதிர்கருதுக்களை இருட்டடிப்பு செய்துவிடுவதுதான் உங்களின் விவாத யோக்கியதையா?
கேட்டால் நாகரீகமாம். உங்கள் கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் கூட கடைசிவரை எதிர்கருத்துக்களைப் பரிசீலித்து விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். ஆனால், தலைமைப் பொறுப்பிலும், உங்களைப் போன்ற அற்ப புகழ்ச்சிக்கு ஏங்கும் 'படைப்பாளி'களும் தான் விவாதிக்கத் திராணியற்று இப்படி கேவலமாகப் பல்லிளிக்கிறார்கள்.
இதுவரை எண்ணற்ற பின்னூட்டங்களை உங்கள் தளத்தில் பதிந்திருக்கிறேன். என்னுடைய பதிவுகளில் சிலவற்றைக் குறிப்பிட்டு சுட்டியிருக்கிறேன் எனது பின்னூட்டங்களில். விவாதிக்க பகிரங்கமாக அழைத்திருக்கிறேன். இவ்வாறிருக்கையில் இதுபற்றி மூச்சே விடாமல் கமுக்கமாக இருந்துவருவதிலிருந்தே உங்களது கேவலமான கயமைத்தனம் தெளிவாகத் தெரிகிறது.
சி.பி.எம் குரூப்ஸ் ஆஃப் பிரைவேட் கம்பெனியில நிர்வாகக்கோளாறும் கொள்கை கோளாறும் ஏகத்துக்கும் அதிகமாகி அதன் இத்துப்போன இதயம் வெடித்துச்சிதறும் முன் உண்மை தோழர்கள் விழிப்புடன் வெளியேறி புரட்சிகர அமைப்போடு கைகோர்த்து போராட வரவேண்டும் தோழர்களே.
- சூரியன்.
ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக....
அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே...
நிஜத்துலக்கூட ஒருத்தனுக்கு மூனு பேரை வெச்சிக்கிட்டு சுத்துறீங்கள்... தமிழ்நாடு முழுக்க எல்லாம் ஒண்ணா சேந்து கும்பமேளா நடத்துறதுதானே உங்க பொழப்பு....
அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....
பாவம்... ம.க.,.க. சரணம்............... இப்படியே கூவிக்குனு இருங்க!
/////விடுதலை said...
ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக..../////
ஏம்பா விஜி த.நா.மா.லெ.க.ன்னு நீயும் ஒங்க தலிவன் 'புஸ்வானம்' ரமேசுபாபுவும் பொலம்பிக்கிட்டே இருக்கீங்களே!, அப்படீன்னா என்னாங்க தோலர். ஒருவேளை நீங்களே அந்த பெயரிலே ஏதாவது கட்சி ஆரம்பிக்கப் போறீகளா? சும்மா வெளம்பரத்துக்காக அந்த பெயரைத் திரும்பத்திரும்ப நீங்களே சொல்லிக்கிறீங்களா? என்ன எழவுன்னே புரியல்ல. இதெல்லாம் ஒரு பொழப்பா தோலர்.
நான் சார்ந்திருக்கின்ற அமைப்பின் பெயர் 'மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க.)' முடிஞ்சா நினைவில் வைத்துக் கொள்ளவும். சும்மா இந்த த.நா.மா.லெ.க.ன்னு ஒரே ரெக்கார்டையே எத்தன நாளைக்குத்தான் ஓட்டிக்கிட்டு இருப்பீங்க.
/////அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே.../////
நீங்க எங்களப்பத்தி அவதூறு எழுதினா, அதுக்கு நாங்கள் வந்து மறுமொழியிட்டா முறையா பதிப்பிக்காம இருட்டடிப்பு செய்வது; நான் பதிவெழுதி விவாதிக்க அழைச்சாக்கா இந்த பக்கமே தலைவைத்துக்கூட படுப்பதில்லை. இதுதான் உங்களது விவாத லட்சனம். மாறாக மேற்கண்ட உமது பதில்களைப் போன்ற 'தத்துவச் செறிவுள்ள!!!', 'ஆழ்ந்த விமர்சனங்களை!!!!' எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறீர்கள்.
கேள்விகளுக்கு முறையா பதில் சொல்லாம தலைதெறிக்க ஓடுற கேவலத்துல இருந்து முதல்ல வெளிய வந்து ஏதாவது பதிலச் சொல்லுங்க, சும்மா 'முகத்தைக் காட்டுங்க'ன்னு அப்ளிக்கேஷன் போடுறத விட்டுட்டு. உங்களுக்குத்தான் முகத்தைக் காட்டிக் கொண்டு அற்ப விளம்பரம் தேடவேண்டிய தேவை இருக்கின்றது. எனக்கு அத்தகைய தேவை எதுவும் இல்லை.
/////அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....//////
இப்படியான அவதூறெல்லாம் கெடக்கட்டும், தில்லைப் போராட்டத்தைப் பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்குதா முதலில்? தேழர்கள் கைதான பிறகு எனக்கு வெளியில் ஆதரவாக யாருமில்லை என்று சிவனடியார் ஆறுமுகசாமி தன்னையும் கைது செய்யச்சொல்லி காவல்நிலையத்தின் முன் மறியல் செய்தாரே, அப்போது 'மாபெரும்' கட்சியான உங்கள் கூட்டத்திலிருந்து ஒருவர்கூட அவருக்கு ஆதரவாக வரவில்லையே ஏன்?
கடுமையாகத் தாக்கப்பட்டு கைதான எமது தோழர்கள் தங்களுக்கு பினைவேண்டும் என்று கோரவில்லை முதலில். "'பிணை தாக்கல்'செய்யமாட்டோம், எங்கள் குற்றத்தை நிரூபிக்க முடிந்தால் நடவடிக்கையைத் தொடருங்கள்" என்று வெளிப்படையாக அறிவித்தார்கள்.
இவ்வளவு போராட்ட களேபரங்களும் முடிந்த பிறகு, போராட்டத்தில் சிறிதளவும் பங்கேற்காமல், "நீங்கள் தீட்சிதர்களை 'பார்ப்பனர்கள்' என்று விமர்சிப்பீர்கள், அது எங்களுக்கு ஒத்துவராது" என்று தொடக்கத்திலேயே போராட்டக் குழுவிலிருந்து வெளியேறிய கூட்டம்தான் உங்களது போலிபாசிச கும்பல். இப்படி இருக்கையில் "DYFI போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!" என்று சிறிதும் வெட்கமில்லாமல் போஸ்டர் ஒட்டி சிதம்பரம் மக்களால் காறி உமிழப்பட்டீர்கள் தோலர்களே நினைவிலில்லையா?
இதுபற்றி ஒரு தனிப்பதிவே நான் பதிப்பித்திருக்கிறேன். அதில் விவாதிக்க அழைத்து சந்திப்புக்கும் ரமேசுபாபுவுக்கும் தனிப்பட்ட முறையில் அவரவர் தளங்களில் சென்று அழைப்பு விடுத்திருந்தேன். நீங்கள் அங்கேயே வந்து விவாதித்திருக்கலாமே தோலரே! உங்களைத்தடுத்தது யார்?
ஏகலைவன்.
இணைப்புகள்
ஏகலைவன் said...
தோழர்களுக்கு ஒரு சின்ன செய்தி!!
இங்கே விடுதலை எனும் பெயரில் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ள சிபிஎம் கட்சியைச் சார்ந்த விஜி எனும் நபர் பாண்டிச்சேரியில் இருக்கிறார். இவர் அக்கட்சியின் அல்லக்கை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமை அல்லக்கையான எஸ்.ஜி.ரமேஷ்பாபு என்பவனுக்கு அல்லக்கையாக இருந்து செயல்படுகிறார்.
ரமேஷ்பாபு எனும் நபர் இந்த விஜி மூலமாகவோ அல்லது அவர் பெயரில் தாமே சில அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.
இங்கு பதியப்பட்டிருக்கின்ற விமர்சனங்கள் உள்பட நமது எந்த ஒரு விமர்சனத்திற்கும் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் இவர்கள் கைக்கொண்டிருக்கும் ஆயுதம்தான் இத்தகைய அவதூறுகள்.
இதன் உச்சத்தில் எமது அமைப்பின் பெயரிலேயே முறைகேடாக ஒரு வலைதளத்தை உருவாக்கி அதில் தமது அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். வழக்கம்போல நமது எதிர்விணைகளையும் அங்கே நேர்மையாக பதிப்பிப்பதில்லை.
தமது அரசியல் எதிரி என்று போலித்தனமாகச் சொல்லிக் கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பலுட்டன் கூடிக் குலாவிக் கொண்டு இவர்கள் கட்சியின் கீழ்மட்டத் தோழர்களை அடியாளாகப் பயன் படுத்தி அவர்களுடன் போலியாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
தமது தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து இந்தூவெறி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டு பேடித்தனமாக அரசியல் செய்துவரும் இவர்கள், அதைக் கண்டித்து ஒரு வரி கூட இங்கே இணையத்தில் பதியாத இவர்கள், நமக்கு எதிராக ஒரு வலைதளத்தையே தொடங்கி அவதூறு எழுதும் நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் யோக்கியதை எப்படிப்பட்டது என்று நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இதற்கு தோழர்கள் கடுமையான எதிர்விணையாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுள்ள,
ஏகலைவன்.
Post a Comment