Monday, December 29, 2008

”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியைவிட சரத்குமாரின் ‘சமத்துவ...’கட்சியும் எவ்வளவோ மேல்” - ‘தோலர்’ கனகசாமி

அன்பார்ந்த தோழர்களே!

ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொக்கரிக்கும், சர்வ வல்லமையும் பொருந்திய சர்வதேச பயங்கரவாத முதலாளித்துவம், மோசடியையும் சூதாட்டத்தையும் ‘வளர்ச்சி’ என்று சொல்லி உலகை வளைத்த முதலாளித்துவம், அதன் அகில உலகத் தலைமையகமான அமெரிக்க தெருக்களில் இன்று ஊதி அனைத்து வீசப்பட்ட துண்டு பீடியைப் போன்று நைந்து கிடக்கிறது. இதனைக் கொண்டாடும் பொருட்டும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மேன்மேலும் எதிர்த்து வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் ”முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!” என்கிற முழக்கத்தோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, வருகிற ஜனவரி’25/2009 அன்று சென்னை-அம்பத்தூரில் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தவிருக்கிறது.

இதற்கான வேலைகளில் வீச்சாக ஈடுபட்டிருக்கும் எமது தோழர்களை வழிமறித்து தாக்குவதும், துண்டுப்பிரசுரங்களைப் பிடுங்கிக் கொளுத்துவதையும் “நக்சலைட்டுகள்....” பீதியூட்டியும் கேவலமாகக் கூப்பாடு போட்டு ஆட்காட்டி வேலை செய்து கொண்டிருக்கிறது போலிகம்யூனிச சி.பி.எம்.மும் அதன் பத்திரிக்கையுமான தீக்கதிரும்.

இந்த யோக்கியவான்களின் அரசியலை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் புகுந்து கொண்டு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ‘புரட்சி’ செய்யவிருக்கும் கேவலத்தை அவர்களது கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் கேட்டாலே பாய்ந்து பிடுங்குவது போன்ற ‘ஜனநாயக’த்தைக் கடைபிடித்துவரும் அக்கும்பல் எமது தோழர்களை கொலைவெறியோடு தாக்குவதும், “ஆயுதப்பயிற்சி செய்கிறார்கள்....” என்று பிதற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது, ஒன்றும் ஆச்சர்யமானதல்ல.இந்தியாவின் போலிஜனநாயகத்தையே உச்சிமுகர்ந்து பாராட்டிப் போற்றி வழிபடும் ‘காமரேடுகள்’ அவர்களது கட்சிக்குள் மட்டும் என்ன உண்மையான ஜனநாயகத்தையா வைத்திருக்க முடியும்?

அவர்களின் கேவலமான பிழைப்புவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நபர் யாராக இருந்தாலும் ‘நக்சலைட்’ பட்டம் வழங்கி கவுரவிக்கும் காமரேடுகள், நம்மை விடக் கூர்மையாக, நம்மைவிட நேரடியாக அப்பிழைப்புவாத முகாமைப் பார்த்து “கம்யூனிஸ்ட் கட்சியல்ல அது(சி.பி.எம்.) கந்துவட்டிக் கூடாரம் மட்டுமே” என்று அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய, திருநெல்வேலி மாநகரக் கட்சியின் செயலாளராக இருந்த கனகசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரையும் ’நக்சலைட்’ என்று தமது வழக்கமான முத்திரையைக் குத்தமுடியாது? ஏனென்றால் அவர் சிபிஎம் என்கிற கழிசடையின் மீது மேற்கண்டபடி விமர்சனம் வைத்துவிட்டு சரத்குமார் என்கிற கூவத்தோடு சங்கமித்திருக்கிறார்.



திருநெல்வேலி கனகசாமி முதல் சென்னை கே.கே.நகர் கட்டைப்பஞ்சாயத்து புகழ் காமராசு வரை சரத்குமாரிடமும் விஜய்காந்திடமும் சென்றடைவதற்கான காரணத்தை நாம் ஆராயவேண்டிய அவசியமில்லை, போலிகம்யூனிசக் கட்சியின் அடிப்படை எதார்த்தமே அதில்தான் இருக்கிறது. ஆனால், கனகசாமி அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஒருவரின் மீது வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் 1.1.2009 இதழில் வெளியாகியுள்ளதை நாம் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது. சிபிஎம் என்கிற ‘புனிதமான’ சாக்கடையின் குமட்டலெடுக்கும் கேவலங்களை இதனைப் படிக்கின்ற தோழர்கள் சகித்துக் கொண்டு தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



திருநெல்வேலி கனகசாமி வைக்கின்ற குற்றச்சாடு பலவாக இருந்தாலும் அதில் மையமான, சாரமான, கவனிக்க வேண்டிய குற்றச்சாட்டு மூன்று. அக்கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் பலர் வெளிப்படையாகவே கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற ரத்தம்குடிக்கும் தொழிலைச் செய்துவருவதையும் அதன் பொருட்டு நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு மையமாக அக்கட்சியின் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுவதையும் முதலாவதாகக் கொள்வோம். இரண்டாவதாக, அக்கட்சியில் சாதிப் பாகுபாடு, தேவர் ஆதிக்க சாதிவெறியும் வெளிப்படையாக இருப்பதாகவும் சொல்கிறார். மூன்றாவது குற்றச் சாட்டுதான் மேற்கண்ட இரண்டையும் விட அதிகம் குமட்டலெடுக்கும் வகையில் இருக்கிறது. அது, மாநில அளவிலான தலைவர்கள் அதே கட்சியினைச் சேர்ந்த மாதர் சங்கத்தைச் சார்ந்த பெண்களுடன் கட்சி அலுவலகத்தையே லாட்ஜாக மாற்றிக் கொண்டு பாலியல் உறவுகொள்வதாகவும் சொல்லியிருப்பது.

இதனை அவரது வார்த்தையிலேயே கேட்போம். “பொதுவாக சமூக விரோதிகள், பெருநிலக் கிழார்கள், குடிகாரர்கள், கந்துவட்டிக் காரர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது விதி. ‘நாளை எண்ணி வட்டி சேர்க்கும் நாய்களுக்கு இங்கு இடமில்லை’ என்று நாங்கள் பாட்டுப்பாடியே கட்சி வளர்த்தோம். ஆனால், நெல்லையிலோ நிலைமை தலைகீழ். கட்சியின் உயர்பதவியான மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான் தலைமையில் ஒரு கந்துவட்டிக் குழுவே இருக்கிறது. இவர்களுக்கென உள்ள ஓர் ஏஜெண்ட் இவர்களது பணத்தை பத்து சதவிகிதத்திற்கு வட்டிக்கு விட்டு ஐந்து சதவிகிதத்தை இவர்களுக்குக் கொடுக்கிறார். குழந்தைவேலு என்கிற தீக்கதிர் ஏஜெண்ட், பல லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தைக் காப்பாற்றவே கட்சிக்கு வந்தவர். இதெல்லாம் பற்றி மாவட்டச் செயலாளர் பழநியிடம் சொன்னால் ‘அது மாற்றுப் பொருளாதார ஏற்பாடுதானே?’ என்று அவர் அலட்சியமாகச் சொல்லி வந்தார்....”

”இந்த கனகசாமி, சிபிஎம் கட்சியை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்துவதற்காகவே இப்படி இட்டுக்கட்டி சொல்லியிருக்கிறார்”, என்று கூட இப்பதிவினைப் படித்தபிறகு வெட்கம் சிறிதுமின்றி அவர்களது தீக்கதிர் எழுத வாய்ப்பிருக்கிறது. ஆனால், கருணாநிதியிடமிருந்து வெளியேறி ஜெயாமாமியின் முந்தானைக்குள் தமது அரசியலை முடிந்து வைப்பதற்காக இவர்கள் பேசியும், எழுதியும் வரும் காரணங்களில் இருக்கின்ற வெளிப்படையான போலித்தனம் எதுவும் திருநெல்வேலி கனகசாமியின் வார்த்தைகளில் இல்லை. இதனை நான் சொல்ல வில்லை, கனகசாமி யார்மீது குற்றச்சாட்டு வைத்தாரோ அந்த கருமலையானின் பதிலைப் படித்தாலே அந்த குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மை தெரிகிறது.

“கனகசாமி ஒரு அப்பாவி. சூதுவாது தெரியாதவர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், கட்சியிலுள்ள பெண்களைப்பற்றி அவர் தவறான சில கருத்துக்களைச் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது. சில தோழர்கள் சில பெண்களைக் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். வரம்பு மீறக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அவர்கள் வீடுகளில் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறோம். அதைத்தான் கனகசாமி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.



கந்து வட்டியைப் பொறுத்தவரை அது மாவட்ட மாநாடுகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைதான். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தக்கம். பணத்தை வட்டிக்கு விடுவதை எப்படி மறைக்க முடியும்? பூனைக்குட்டி வெளியே வந்துவிடாதா? கட்சியில் சாதியிசம் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள நாடார் மற்றும் தலித்துகளின் பட்டியலை உங்களுக்கு நான் தரத் தயார். தோழர் கனகசாமி ஏன் இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை” என்று கருமலையான் சோகமே உருவாகச் சொல்லி முடித்திருக்கிறார். இந்த மானங்கெட்ட பதில்கள் மேற்கண்ட கனகசாமியின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இல்லாமல் அதனை மேன்மேலும் வலுப்படுத்துவதாகத்தானே இருக்கிறது?

பிழைப்புவாதத்திலிருந்து பாசிசத்திற்கு சீரழிந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியில் இன்னும் கொள்கை என்று ஏதாவது மிச்சமிருக்கமுடியுமா? சக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைவிடக் கேவலமாக மக்கள் மத்தியில் அவமானப்பட்டு வரும் அக்கட்சியினை ”உட்கட்சி போராட்டம் நடத்தி மீட்டெடுத்து விடுவேன்” என்று உறுதியாக நம்பும் தோழர்கள், தாம் இவ்வாறு நம்புவதற்கான நேர்மையான காரணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அக்கட்சியில் உங்களை ஒட்டிக் கொண்டிருக்க வைத்திருக்கும் அவலம் என்னவாக இருக்கலாம், அது வேறொன்றுமில்லை தமது கட்சியின் நேர்மையான அணிகளை அரசியல் படுத்தாமல் ‘பாதுகாப்பாக’ வைத்திருப்பதில்தான் சிபிஎம் கட்சியின் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமாக இருக்கிறது.


தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

படங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் 01.01.2009 இதழிலிருந்து பதியப்பட்டது.

7 comments:

Anonymous said...

செய்தியைப் படித்த உடன் மனதில் எழுந்த வாசகம் இந்த பதிவின் தலைப்பு...

என்ன ஆச்சர்யம்.. இனையத்தில் தமிழ்மணத்தை திறந்த உடன் அதே தலைப்பில் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்..

said...

// ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் புதிய காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.
//

மக இக குறித்த புரளி கட்டுரையில் சந்திப்பு விட்டுள்ள சமீபத்திய ரீல் மேலே உள்ளது. உண்மையை பேசுவதே இல்லை என்று CPM பாசிஸ்டுகள் முடிவு செய்துவிட்டார்கள் போல உள்ளது. புதிய காற்று என்று ம க இகவிற்கு எதுவும் புத்தக கம்பேனி இருக்கிறதா என்று தெரியவில்லை.

இது தவிர்த்து பல்வேறு புரளிகள். படித்தால் அவர்களது வயிற்றெரிச்சல் நன்கு தெரிகிறது. ஒரு சாம்பிளுக்குத்தான் மேலே உள்ளதை கொடுத்துள்ளேன். இது போன்றவர்களை கண்டு கொள்ளாமல் கடமையாற்றுவதே சரி என்பது எனது கருத்து. காலம் இவர்களை உதிர்த்து அழித்து விடும்….

முக்காலமும் உணர்ந்த முனிவன்

Anonymous said...

Comrades...

the below mentioned comment is being sent to Santhipu's blogspot. He used to avoid publishing our comments if it opposes their politics. So, I ve sent such comment to your blog too.

Comradely,
Kalai.


தோழர் சந்திப்பு அவர்களுக்கும் மற்ற சிபிஎம் கட்சியினைச் சார்ந்து இங்கு கருத்து பதிந்துள்ள தோழர்களுக்கும்.....

சமீபகாலமாக மகஇக தோழர்கள் சிபிஎம் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களை முறையாக, தெளிவாக, அழுத்தமாக பதிந்து வருகின்றனர். அவர்கள் வைக்கின்ற விமர்சனங்கள் யாவும் சரியானவையாகத்தான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை உங்களுடைய எதிர்வினைகளே நிரூபிக்கின்றன.

குறிப்பாக மகஇக வை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உங்களுக்கு போதுமான அறிவு இல்லை என்பதே எனது கருத்து. சும்மா போகிற போக்கில் வசைபாடுவது, புழுதிவாறித் தூற்றுவது போன்ற செயல்களையும் அடக்கவொன்னா ஆத்திரத்தையும் தவிர உங்களது எதிர்செயல்களில் எதுவுமில்லை.

உதாரணமாக இங்கே நீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் வினவு வலைதளத்தின் கட்டுரையிலும் அதன் பின்னூட்டங்களிலும் முன்னிறுத்தப்பட்டுள்ள சிபிஎம் மீதான விமர்சனங்களுக்கு உங்களுடைய இந்த பதில் எதிர்வினையேதும் புரியவில்லை.

”கீரிப்பட்டி முதல் உத்தபுரம்வரை” ‘தலித்’ மக்களுக்காகப் போராடுவதாக சிபிஎம் பற்றி நீங்கள் சொல்லியுள்ளீர்கள். அதே பாப்பாபட்டிக்கு ‘உண்மை கண்டறியும் குழுவில் சென்று வந்த’ தமுஎசவின் முக்கியத் தலைவர் மேலாண்மை பொண்ணுச்சாமி என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றை அதே வினவு தளத்தின் பின்னூட்டமொன்றில் ஏகலைவன் என்பவர் பதிந்திருக்கிறார். அதற்கான உங்களது எதிர்வினை எங்கே? மேலாண்மை பொண்ணுச்சாமி சொன்னது உண்மைதானே?

அடுத்து அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் கவனிக்க வேண்டியது சிபிஎம் கட்சியின் தேவர் அரசியல் தான்.

முத்துராமலிங்கம் என்கிற சாதிவெறியை ஊட்டி வளர்த்த ஒரு சமூகவிரோதியின் நினைவுநாளுக்கு எல்லா ஓட்டுக்கட்சிகளுடன் நீங்களும் போயி மலர்வளையம் வைத்து வழிபடுவது எந்த வகையிலான அரசியல்? முத்துராமலிங்கத்தை சிபிஎம் எந்த அளவு கோலில் அளந்து நியாயப்படுத்துகிறது?

சாதிவெறியன் முத்துராமலிங்கத்துக்கு மலர் வளையம் வைத்துவிட்டு சாதியை ஒழிக்கப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்வது எத்தனை கேவலமானது?

வினவு தளத்தில் பதியப்பட்டுள்ள, நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த பின்னூட்டத்தில் உள்ள கேள்விக்கு ஏன் உங்க்ளால் பதில்களைத் தரமுடியவில்லை, மாறாக ஆத்திரத்தையும் அவதூறுகளையும் பதில்களாகத் தெரிவிப்பது நேர்மையான அரசியல் அல்லவே!

///////வர்க்கப் போராட்டத்தைச் சிதைத்து வருவது பற்றி எந்த ஒருவிமர்சனமும் இல்லாமல், தலித்தியமா அதையும் சேர்த்துக்குவோம்; பெண் உடலை, காமத்தை வெளிப்படையாகப் பேசுவதும், ஓரினப்புணர்ச்சி மூலம் பெண்விடுதலை என்றும் பேசும் கழிசடை பெண்ணியவாதம் மேலெழுந்து வந்தால் அதையும் சேர்த்துக்குவோம்; இதுதான் த.மு.எ.ச.வின் கொள்கையாக உள்ளது ./////////

இவ்வரிகளும் அதே வினவு வலைதளத்தின் பதிவிலிருந்ததுதான். இதற்கு மறுப்பு சொல்லும் விதமாக உங்களது பதில் இருக்கிறதா என்பதை மறுபடியும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்.

கடுமையாக வசைபாடிக்கொள்வதில் எனக்கு விருப்பமேதுமில்லை. இதில் இருதரப்பினரின் மீதும் எனக்கு அதிருப்தி உண்டு. அதே வேளையில் என்னுடைய இந்த பின்னூட்டத்தை முறையாகப் பதிப்பித்து நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் தோழர்களே திருத்திக் கொண்டு விவாதிக்கலாம்.

- கலைவேந்தன்.
elamperiyar@gmail.com

Anonymous said...

முதலில் ஒரு விசயம், மகஇக ஒரு அரசியல் கட்சியும் அல்ல - புரட்சிகர அமைப்பும் அல்ல. அது நேரடி அரசியலிலும் ஈடுபடும் அமைப்பும் அல்ல. அது ஒரு கலை - இலக்கிய அமைப்பு அவ்வளவுதான்.

இப்படி ஒரு பிதற்றலை நான் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலிருந்தும் இதுவரை கேட்டதில்லை. பொதுபுத்தியிலுள்ள சாதாரண, கடைநிலை மனிதன்கூட இத்தனை அறிவிலித்தனமாக (மன்னிக்கவும் வேறு வழியில்லை) எழுதமுடியாது.

அரசியலும் கலை இலக்கியமும் வேறு வேறானவையா? தமுஎச வைத்திருக்கும் கலை இலக்கியத்திற்கு எந்த அரசியலும் இல்லை என்பதுதான் இங்கு பதியப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டு. அதன் பொருட்டான உங்களது பதில் தெளிவாக இல்லையே.

மகஇகவை புரட்சிகர அமைப்பு இல்லை என்று வரையறுப்பதற்கு முதலில் சிபிஎம் கட்சிக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறுவதும், சமூகவிரோத ஓட்டுப் பொறுக்கிக் கும்பலுடன் வெட்கமின்றி கூட்டனிகளைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைமுறையாகக் கொண்டுள்ள கட்சியில் இருந்து கொண்டு வேறொரு அமைப்பை “புரட்சிகர கட்சி இல்லை” என்று நீங்கள் விமர்சித்து வருவது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் வகையிலேயே இருக்கிறது.


ஆனால், இது தொடைநடுங்கி நக்சலிச அமைப்பின் வாலாக செயல்படுகிறது என்பதுதான் என்னுடைய விமர்சனம். இதுவரை இந்த தொடைநடுங்கிகள் தங்களது கட்சி பெயர் இதுதான் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு முன்வரவில்லை. மேலும், அவர்களது அன்றாட அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் மகஇக பெயரிலேயே நடைபெறுகிறது. தங்களது அரசியல் கட்சியை வெளியே சொல்லுவதே கிடையாது. அதனால்தான் சொல்கிறோம் இது புரட்சிகர அமைப்பு அல்ல சீர்குலைவு அமைப்பு என்று. இதனை அரசியல் ரீதியாக இப்படித்தான் விமர்சிக்க முடியும். அடுத்து, இது ஒரு என்.ஜீ.ஓ. அமைப்பு என்பதே என்னுடைய விமர்சனம். இதற்கான நிதியுதவி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? கிடையாது!

இது முழுக்க முழுக்க முதலாளித்துவ கைக்கூலிகளின் மொழியாகும்.

வீழ்த்தப்பட வேண்டிய எதிரியைக் கொண்டு அரசியல் நடைமுறையை நேக்குகின்ற புத்தியினை உங்கள் கட்சி கொண்டிருக்க வில்லை என்பதனை இந்த பதில் தெளிவாகத் தோலுறிக்கிறது.

காந்தி வெள்ளையனின் கையிலிருந்த ஆயுதத்தைக் கண்டிக்காமல், எதிர்த்துப் போராடும் குழுக்கள் வைத்திருந்த ஆயுதத்தை மட்டும் கண்டித்த அசிங்கத்தைப் போன்றது இது. உங்கள் கட்சியினைச் சார்ந்த உறுப்பினர்கள் நந்திகிராம மக்களுக்கு எதிராக கடுமையான ஆயுதங்களுடன் பொறுக்கித்தனம் செய்யவில்லையா?

நந்திகிராம போராட்டம் வர்க்கப் போராட்டம் என்றால், சிபிஎம் எந்த வர்க்கத்துக்காக அன்று களத்தில் நின்றது. அது எதிர்த்து நின்ற வர்க்கம் எது?

நக்சல்பரி புரட்சியாளர்களை ஒழிப்பதற்காக அரசும் முதலாளீகளும் ஸ்பான்சர் செய்து நடத்தும் சல்வாஜூதும் என்கிற குண்டர்படையினை ஆதரித்து பேசும் உங்களுக்கு எந்த ஒரு நக்சல்பரி அமைப்பையும் விமர்சிக்கும் தகுதி இல்லை.

இதற்கெல்லாம் மேலாக,
மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் தலைமறைவு அமைப்பு இல்லை என்று சொல்லி முகவரியினையும் தொடர்புகொள்ள வேண்டிய நபரையும் அவரது தொலைபேசி எண்களையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செயல்பட்டுவருவது அனைவருக்கும் தெரியும்.

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்கள் காடுகளிலிருந்து வெளியிடப்படுவது கிடையாது. அவை தகுந்த முகவரியிலிருந்துதான் வெளியிடப்படுகிறது.

இங்கு பிரச்சினை வெளிப்படையாக இயங்குவதா அல்லது மறைமுகமாக இயங்குவதா என்பது அல்ல.
ஜெயலலிதாவின் பாதணிகளையும் கருணாநிதியின் பாதணிகளையும் கம்யூனிசத்தின் பெயரில் தாங்குவதா என்பதுதான் பிரச்சினை.

இத்தகைய அரசியல் அசிங்கத்தைக் கண்டிப்பவரை, தக்க பதில்களால் எதிர்கொள்ளாமல் அவர் தலைமறைவானவரா வெளிப்படையானவரா என்று நீங்கள் வைக்கும் பதில்கள் மிகவும் மலிவாக இருக்கிறது. உங்களது அறிவு நாணயத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது தோழரே!

Anonymous said...

தமுஎச குறித்து அவர்களது கருத்து முற்றிலும் தவறானது. தமுஎச என்பது முற்போக்கு கலை - இலக்கிய கருத்துக்ளை தமிழகத்தில் பரவலான பாமர மற்றும் படித்த மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அது வருடத்திற்கு ஒரு பஜனை கச்சேரி நடத்தும் ம.க.இ.க. போல் செயல்படுவதில்லை. மாறாக தமுஎச மக்கள் மத்தியில் ஆழமாக வேறுன்றியுள்ளது. இது ஒரு வெகுஜ மேடை. இந்த வெகுஜன மேடையை கட்சி மேடையாக மாற்ற வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ளது ம.க.இ.க கும்பல். அதாவது. அதைதான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமுஎசவை “மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது” என்றும் மகஇக நடத்துகின்ற தமிழ் மக்கள் இசைவிழாவை பஜனைக் கச்சேரி என்று மதிப்பிடுகின்ற அளவுக்கு உங்களது காழ்புணர்ச்சி மேலோங்கியிருக்கிறது. இதைத்தான் வெறும் வசைகள் என்றும், புழுதிவாரித்தூற்றுவது என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் அரசியலில் உள்ள தொய்வையே அது காட்டுகிறது. தமிழ் மக்கள் இசைவிழாவை நீங்கள் வழக்கமாக “கும்பமேளா” என்று குறிப்பிட்டு இழிவுபடுத்துவது வழக்கம். அதன் பிறகு அந்த ‘கும்பமெளா’வைப் பார்க்க வேண்டும் என்று எண்ணித்தான் மகஇக தோழர்களை நான் முதன் முதலில் அனுகினேன்.

அவர்கள் தமிழ் மக்கள் இசை விழாவின் நேரடி வீடியோவை எனக்குக் கொடுத்தார்கள். அதைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது தமுஎச நடத்துகின்ற கலை இரவுக் கூத்துக்கள், சினிமாக் கேவலங்கள் நிறைந்த மேடைகள் அனைத்தையும் குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வர முடிந்தது. இப்போது கலை (இழந்த) இரவு விளம்பரங்களைக் கண்டாலே குமட்டலெடுக்கிறது.

வெகுஜென இயக்கங்களுக்கு அரசியல் ஏதும் இருக்கக் கூடாது என்று நீங்கள் இங்கு புலம்புவதிலிருந்து தமுஎச குறித்த எனது மதிப்பீடு மேலும் உறுதியடைந்துள்ளது. இத்தகைய கேவலங்களைத்தான் தோழர் மதிமாறன் ஏற்கெனவே “தமுஎச லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற மனமகிழ் மன்றம்தான்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விவரத்தையறிய கீழ் கண்ட லிங்க்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

தமுஎச தொடர்பான எனது கேள்விக்கு சிபிஎம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘திருவாளர்’டி.கே.ரெங்கராசன் அவர்கள் அளித்த பதிலைக் கீழ்கண்ட லிங்கில் சென்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
http://mathimaran.wordpress.com/2008/10/09/article-127/

தோழர் சந்திப்பு அவர்களின் பதில்களைத் தொடர்ந்து பிற விடயங்களையும் குடைய வருகிறேன்.

எங்களது தோழர்கள் சந்திப்பின் மீது வைக்க்கின்ற முதன்மையான குற்றச்சாட்டு என்பது பின்னூட்டங்களை நேர்மையாகப் பதிப்பிப்பதில்லை என்பதுதான். ஆனால், எனது பின்னூட்டத்தை நேர்மையாக பதிப்பித்து விவாதித்துக் கொண்டிருக்கும் தோழர் சந்திப்பிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...

- கலைவேந்தன்.

Anonymous said...

இறுதியாக நன்பர் கலைவேந்தர் அவர்களே! முடிந்தால் நீங்களே அவர்களது அரசியல் திட்டம் என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக - பகிரங்கமாக விமர்சிக்க முடியுமா என்று கேளுங்கள். உங்களையும் போலீசு உளவாளியாக மாற்றி விடுவார்கள்.

தோழர் சந்திப்பு அவர்களே,

அவர்களது கட்சித்திட்டத்தை நான் எளிமையாகப் புரிந்து கொள்ளவும், அதற்கெதிரான சிபிஎம் கட்சியின் (காங்கிரசுத்தனமான) அரசியலைப் புரிந்து கொள்ளவும் மிகவும் உதவியாக இருந்தது நீங்கள்தான். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.

திருமாவளவனையும் மாயாவதியையும் “வர்க்கப் போராளிகள்” என்று நீங்கள் வரையறுத்திருப்பதிலிருந்து உங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளைத் தெளிவாக புரிந்து கொண்டேன். ’தலித்’ அரசியல் பேசுபவர்கள் எல்லோரும் பாட்டாளி வர்க்கத்தவர் என்று நீங்கள் குருட்டுத் தனமாக வரையறுப்பீர்களானால், பாஜக முதல் காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ்., என்று இந்தியாவில் இயங்குகின்ற அனைத்து அமைப்புகளுமே (நமது ஊத்தவாயன் சங்கராச்சாரி வரை) பாட்டாளி வர்க்கக் கட்சிகள்தான் தோழரே!

இக்கட்சிகளில் ‘தலித்’ அரசியலுக்கு ஆதரவாகப் பேசாத கட்சிகளைக் காட்டுங்கள் நாங்கள் தேரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

************

தன் சொந்த சமூகத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை வெறும் வாக்குவங்கிகளாக மட்டுமே கருதி அரசியல் நடத்துகின்ற ‘தலித்’ அமைப்புகள், எப்போதும் தன் சொந்த சமூகத்துக்கு எதிராகவே இயங்கிவருகின்றன. இதற்கான ஆதாரங்களை நாம் அன்றாட செய்திகளிலேயே தெரிந்து கொள்ளலாம்.

தான் சார்ந்த சமூகத்துக்கு எதிராக இயங்கிவருகின்ற இத்தகைய பிழைப்புவாதிகளை அச்சமூக மக்களிடத்தில் அம்பலப்படுத்தி அக்கட்சிகளை மக்கள் மத்தியிலிருந்து தனிமைப் படுத்துவதே புரட்சிகர அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருகிறது தோழரே!

இதெல்லாம் தேர்தலுக்குத் தேர்தல் அணிகள் மாறி சமரசம் செய்து கொள்ளத் துடிக்கும் உங்கள் கட்சிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எனவே, கட்சித் திட்டம் குறித்த ஒரு தெளிவான புரிதலை எனக்குத் தந்த உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன்.

கட்சித்திட்டம் சரியா, தவறா என்பதற்கு பிறகு வருவோம். தான் திட்டமிட்ட செயல் திட்டத்தை இலக்காகக் கொண்டு நேர்மையாக இயங்கிவரும் எமது அமைப்பைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால், திட்டத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு நடவடிக்கைகளில் அதற்கு எதிராக இயங்குகின்ற சிபிஎம் செயல்பாடுகள் குறித்து என்ன சொல்வீர்கள்?

டாட்டாவையும் டவ் கெமிக்கல்ஸ் (யூனியன் கார்பைடு) கம்பெனியும் சலீம் குழுமமும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல் திட்டத்தில் எந்தப் பத்தியில் இடம் பிடித்திருக்கின்றன?

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் விஜயகாந்துக்கும் உங்களது கட்சித் திட்டத்தில் எத்தனைப் பக்கம் இடம் ஒதுக்கியுள்ளீர்கள்? இவர்களுக்கும் தீக்கதிர் பத்திரிக்கையில் முதல் பக்கத்தை ஒதுக்கித் தருவது போல கட்சித் திட்டத்திலும் இடம் ஒதுக்கியுள்ளீர்களா?

“நான் முதலில் பார்ப்பான்....” என்று சட்ட மன்றத்திலேயே அறிவிக்கும் அமைச்சரைக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, அவருக்கு அக்கருத்தை எந்த திட்டத்தின் மூலமாகச் சொல்லிக் கொடுத்தது?

தொழிலாளர்களுக்கு எதிராக அரசானையைப் பெறுவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொடுத்து அம்பலப்பட்ட சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களின் தலைவரும், இந்நாள் வரை சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பவருமான ‘திருவாளர்’ திருப்பூர் கோவிந்தசாமி, கட்சியின் எந்த திட்டத்தின் படி இவ்வாறு நடந்து கொண்டார்?

என்பதையும் நீங்கள் சொல்வீர்களானால் நான் அதனைப் புரிந்து கொண்டு மற்ற அமைப்புகளின் திட்டம் குறித்து விவாதிக்க ஏதுவாக இருக்கும்.

எனது சிற்றறிவுக்கு உரைக்கும் படி நீங்கள் தெளிவாக பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் தோழரே! அதற்கு எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் முன்கூட்டியே தெறிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

- கலைவேந்தன்.


இறுதியாக ஒரு குறிப்பு:

உங்களின் எழுத்துக்களில் சித்தாந்தத் தெளிவும் அரசியல் நேர்மையும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. உங்கள் கட்சியின் அரசியல் குறித்து நான் ஏற்கெனவே மதிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தும் வகையிலும் அதைவிடக் கீழான கட்சியாக சிபிஎம் கட்சியை (அதாவது நான் மதிப்பிட்டிருந்ததைவிட) அடையாளப்படுத்தும் வகையிலும் உங்களது எழுத்துக்களே அமைந்திருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் நீங்கள் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தொடர்பாளரா இல்லையா என்பதையும் கொஞ்சம் உறுதிப் படுத்திவிடுங்கள். இல்லையென்றால் நீங்கள் எழுதியவற்றுக்கே உங்கள் கட்சியினைச் சார்ந்த வேறு யாராவது மறுப்பு எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்கள் பாவம்!

வாசகர்கள் குழம்பிவிடாமல் இருப்பதற்காகத்தான் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் தோழரே! தவறிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

Anonymous said...

At 4:25 PM, விடுதலை said...
அன்ணே கார்வேந்தன் நீ என்னமோ யோக்கியன் மாதிரி பதில் சொல்ற மொதல்ல மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் என்ன?
உண்மையா உங்க கட்சி பெயர் என்ன?
கட்சி பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை


நண்பர் விடுதலை,

எங்களுடைய கட்சியின் பெயர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) - மாநில அமைப்புக் கமிட்டி.

உங்களுக்குப் பிரச்சினை கட்சியின் பெயர் என்ன, என்பதல்ல. ஏனெனில் எமது கட்சியின் பெயரில் மோசடியாக நீங்கள் ஒரு போலி வளைதளத்தைத் தொடங்கி அதில் விவாதிக்கத் திராணியில்லாத பல்வேறு அவதூறுகளைப் பதிந்து வருவதும் அனைவருக்கும் தெரியும்.

உங்களுடைய பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும் உங்களுடைய அரசியல் நேர்மையினையும் அறிவு நாணயத்தினையும் பற்றி. அது உங்களுடைய தனிப்பட்ட வெளிப்பாடு அல்ல. அதுதான் உங்கள் கட்சிக்கே உரிய பிழைப்புவாத மொழி. இத்தனைத் தகவல்களை நான் இங்கே பதிந்தபிறகும் உங்களுக்குள் இருக்கும் அற்பவாதம் உங்களை மீண்டும் மீண்டும் ஆட்காட்டி வேலை செய்யவே தூண்டுகின்றது என்றால், உங்களுடன் விவாதிப்பதற்கே அருவெறுப்பாக இருக்கிறது.

கேள்விகளுக்கு பதிலளிக்கச் சொல்லி நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் நீங்கள் அதனை உங்களுக்குள் முதலில் பொருத்திப் பாருங்கள். இதுவரை எந்த விமர்சனத்திற்காவது நாணயமாக பதில் சொல்லியுள்ளீர்களா விடுதலை? உங்களுடைய இயலாமையினை எண்ணி வெட்கப்படுங்கள்.

தோழர் சந்திப்பு,

என்னுடைய கடைசி பின்னூட்டம் ஒன்றை நீங்கள் இங்கே ‘எப்போதும் போல்’ பதிவிடாமல் மறைத்திருக்கிறீர்கள். அது மிகவும் அவமானகரமான விசயம். நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்திச் சொல்லிக் கொள்கிறேன், அதனையும் தயவுசெய்து பதிந்துவிடுங்கள்.

அது என்னிடம் சேமிப்பில் உள்ளது. உங்களுடனான எனது இவ்விவாதங்களோடு அப்பின்னூட்டத்தையும் சேர்த்து தனிப்பதிவாக எழுத வேண்டிய நிலையை எனக்கு உருவாக்கிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுடைய ஆள், விடுதலை எனும் நபரின் பிதற்றலைவிட மோசமான சொற்கள் எதுவும் எனது பின்னூட்டங்களில் இருக்கவே இருக்காது.

நாளைக்குள் உங்களுடைய நேர்மையினை மீண்டும் நான் சரியாக மதிப்பிட முடியும் என்று நம்புகிறேன்.

- கலைவேந்தன்