Wednesday, April 2, 2008

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

பார்ப்பனக்கூலி 'சுக்ரீவன்'எஸ்.வி.ராஜதுரையும் 'புதுவிசை'யும்........

வாழ்ந்த காலம் முழுவதிலும் தான் சார்ந்த பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கியாடிய பாரதி. இடையிடையே 'இடம், பொருள், ஏவல்' ஆகிய மூன்று சந்தர்ப்பவாத முறைகளையும் தவறாது பயன்படுத்தி அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப‌ சாதிய, பெண்ணீய கருத்துக்களையும் தேசவிடுதலைப் புராணங்களையும் பாடினான். அவ்வளவேதான், இதனைக்கொண்டே அவனை தேசிய‌க்கவியாகவும், மகாகவியாகவும் வானுயர உருவகப்படுத்தியதோடு, அவனை இலாவகமாக நம் அனைவரின் தலையிலும் ஏற்றிவைத்தது பார்ப்பனக்கூட்டம்.

பாரதி செத்தபிறகு, அவனை தம் அக்கிரகாரத்திற்கே உரிய நேர்த்தியுடன் மிகப்பிரமான்டமாக ஜோடித்து நம்ம 'காம்ரேடு'களின் தோள்களில் ஏற்றித் தெருத்தெருவாக ஊர்வலம் விட்டது குடுமி கம்பெனி. அந்த காலகட்டங்களில் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளோடு ஊடல் கொண்டிருந்த, அப்போதைய, 'சர்வகட்சி உறுப்பினர்' என்ற உயர்ந்த! அந்தஸ்த்தில் இருந்த 'மூத்த காம்ரேடு' ஜீவாவின் வாயாலேயே பாரதி புகழ் பாடவைப்பதன் மூலம், தந்தை. பெரியாரை அவதூறு செய்யமுடியும் என்று தீர்க்கமாக நம்பியது பார்ப்பனக் கூடாரம். ஜீவாவும் அந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார்.

'எதிரிக்கு எதிரி, நண்பன்' என்ற மாபெரும் கொள்கையினை மனதில் தாங்கியபடியே ஜீவா பார்ப்பனர்களின் கைப்பாவையாக மாறிப்போனார். வர்ணாசிரம குற்றவாளி் இராமனைப் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய‌போது ஜீவா இராமனுக்கு துதிபாடுகின்ற இயக்கங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதன் நீட்சியாகத்தான் ஜீவா பாடிய பாரதிபுராணமும்.

அதன் விளைவாகத்தான் இன்று வரை போலிகம்யூனிஸ்டுகள் பாரதியைப் போற்றி பாடித்திரிகின்றனர். ஜீவாவைப்பற்றியே சரியான மதிப்பீடு செய்துகொள்ள விரும்பாத இந்த பிழைப்புவாதிகள், ஜீவாவால் கொண்டாடப்பட்ட பாரதியைப் பற்றியா பரிசீலிக்கப்போகிறார்கள்?!.

தொடர்ந்து பெரியாரிய கருத்துக்களை புறந்தள்ளிவந்த இந்த போலிக்கூட்டம், இப்போது தங்கள் இயக்கத்துக்குள்ளிருக்கும் சிலரது வாயாலேயே பெரியாரியக் கருத்துக்களை ஆதரித்துப்பேச அரிதாரம் பூசி இறக்கிவிட்டிருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவர்தான் 'தத்துவப்புலி' எஸ்.வி.ராஜதுரையும், 'தலித்படைப்பாளி' ஆதவன் தீட்சன்யாவும்.

நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவிலேயே குறிப்பிட்டிருந்த, ஆதவன் தீட்சன்யாவின் அதே (நான் ஒரு மநு விரோதன்) புத்தக வெளியீட்டுவிழாவில், அவருக்கு ஒரு கேள்வி வைக்கப்பட்டிருந்தது. கீற்று டாட் காம்(http://www.keetru.com/) என்ற இணைய தளத்தைச் சார்ந்த மிணர்வா, "எங்களுடைய இணையதளத்தின் சார்பில் நாங்கள் ஆதவனை நேர்கானல் செய்த போது பலவிதமான கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலலித்த அவர் (ஆதவன் தீட்சன்யா) பாரதி குறித்த அவரது மதிப்பீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலலிக்க மறுத்துவிட்டார், அதுதான் ஏனென்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அதற்கு பதிலலிக்க வந்த ஆதவன் தீட்சன்யா, " பாரதி எந்தகாலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாது. எனவே அவருக்கு வக்காலத்து வாங்கிப் பேசவேண்டிய அவசியம் இடது சாரிகளுக்கோ, த.மு.எ.ச.விற்கோ கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பாரதிதாசனைப்பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய மிகக் கடுமையான விமர்சனக்கட்டுரையை எங்கள் 'புது விசை'யில் பதிவு செய்திருக்கிறோம். பாரதியைப் பற்றி மிகப் பிரமாண்டமான பிம்பம் ஒன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மதிமாறன் போன்றவர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சனம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் பாரதியைப்பற்றிய விமர்சனத்தை வைத்துவிடமுடியாது. அதை நான் முழுமையாக வாசித்த பிறகுதான் இதுபற்றிய கருத்தினை தெரிவிக்க முடியும்" என்று மழுப்பலாக பதிலலித்து அனைவருக்கும் நல்லபிள்ளையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.

தோழர். வே.மதிமாறன், ஆதவன் சொன்ன 'பாரதி என்ற மிகப்பிரமான்டமான பிம்பத்தை' தனது ஆய்வுகளின் மூலம் தகர்த்து எழுதிய "பாரதி'ய ஜனதா பார்ட்டி' என்ற தலைப்பிட்ட கட்டுரைகள் கடந்த ஏப்ரல்'2000 முதல் ஜனவரி'2001 வரை 'தலித்முரசு' இதழில் வெளிவந்திருக்கிறது. வேறெந்த பத்திரிக்கையும் இத்தகைய செய்திகளை வெளியிடத் தயங்கியபோது 'தலித்முரசு' செய்த இத்தகைய பணி மிகவும் பாராட்டுக்குரியது. அது நூல் வடிவிலும் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டு, பலவிதமான (நேர்மறையான/எதிர்மறையான) விமர்சனங்களையும் கடந்திருக்கிறது. பொங்கியெழுந்து ஆர்ப்பரித்துவந்த முற்போக்கு வேடமனிந்த பலவிதமான பாரதி அபிமானிகளின் கேள்விகளும் மதிமாறனின் ஆதாரப்பூர்வமான வாதத்தை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒளிந்து கொண்டன.


மாபெரும் கம்யூனிஸ தலைவர்கள் முதற்கொண்டு அம்பேத்கர், பெரியார் வரை அனைவரும் பலமுறை இழிவுபடுத்தப்பட்ட போதும் உணர்ச்சியற்றுக்கிடந்த, த.மு.எ.ச.வின் முற்போக்கு வேடதாரிகள், பாரதியைப் பற்றிய விமர்சனத்தை பொறுக்கமாட்டாமல், உடனடியாக‌ மதிமாறனுடைய இந்த நூலுக்கு கண்டனக்கூட்டம் ஒன்றை திருவல்லிக்கேனி பாரதி இல்லத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதோ இத்தனையாண்டுகள் கழிந்த பின்னரும் ஆதவன் போன்ற முற்போக்கு(!)வாதிகள் 'முழுமையாக வாசித்துவிட்டு சொல்கிறேன்.....' என்று பசப்பிவருவது இவர்களது இயலாமையையே காட்டுகிறது. ஆனால் பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், பார்ப்பன இந்துமத எதிர்ப்பையும், வீரிய வித்துக்களாய் இம்மண்ணில் தனது கவிதைகளின் மூலம் விதைத்திட்ட புரட்சிக்கவி.பாரதிதாசனைப் பற்றி மட்டும் கடுமையாக‌ விமர்சிப்பதற்கு இவர்களால் முடிவது நமக்கு ஏளனத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

பொதுவுடைமை வாதிகளாக தங்களைக்காட்டிக் கொள்ளும் இவர்கள், பாரதி ரஷ்யாவைப்பாடியதாலேயே அவனை நேசிப்பதாகக் கூறும் இவர்கள், பொதுவுடைமையைப் பாடியபடி களத்தில் நின்ற‌ பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்தவனாக உருவகப்படுத்துகிறார்கள். இதிலிருந்தே இவர்களின் வேசைத்தனத்தை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

//////‘மங்கை ஒருத்தி தரும் சுகமும்,
எங்கள் மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’
தமிழை ஒப்பிடுவதற்குக் கவிஞரால் அதிகபட்சம் பார்க்க முடிந்தது ‘மங்கை ஒருத்தி தரும் சுகம்’ தான்!//////

என்று புதுவிசையில் எழுதுகிறார் ஒரு மாமாமாமாமாமா.....பெரும் எழுத்தாளப்புலி எஸ்.வி.ராஜதுரை. பாரதியின் பார்ப்பனச் சார்புநிலை அம்பலப்பட்டுக்கிடப்பதை, பாரதிதாசனை இழிவுபடுத்ததுவதன் மூலமாகஇவர் மறைத்துவிடத் துடிக்கிறார். அதற்கு பாரதிதாசனை பாலியல் வக்கிரம் பிடித்த எழுத்தாளர் என்ற அளவிற்கு கீழ்மைப்படுத்த முயற்சிக்கிறார்.

பார்ப்பனீய இந்து மதக் கருத்துக்களுக்கு எதிராக‌ இருந்திட்ட சித்தர்களைக்கூட பார்ப்பனர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்;
'இந்த‌ சித்தர்கள் பெண்களைப்பற்றி எப்படி தவறாகப் பாடியிருக்கின்றனர் பாருங்கள்' என்றுதான் அங்கலாய்த்தார்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வருகின்ற ஒரு பாடல் வரியில்கூட‌,
"பெண்கள் கூட்டம் பேய்களென்று பாடற்சொன்ன சித்தர்களும்,
ஈன்றதாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே!"
என்று எழுதியவர் யார் தெரியுமா?
போகிற வருகிற இடங்களிலெல்லாம் பெண்களால் 'காலி' என்று அவமானப்படுத்தப்பட்ட 'வாலி'தான் வேறு யாருமல்ல‌. வாலியுடைய பெண்கள் மீதான அக்கரையைப் பற்றி நாம் புதிதாக எதுவும் கண்டுபிடித்துச் சொல்லத்தேவையில்லை. அது ஏற்கெனவே சந்திசிரிச்ச விஷயம் தான்.

பாரதியைக் காப்பாற்ற பார்ப்பனக்கூலி எஸ்.வி.ராஜதுரையும், சித்தர்களை இகழ்ந்த அதே பார்ப்பன வசனங்களை இப்போது பாரதிதாசன் மீது வாரியிறைக்கிறார். இவரும் அந்த வாலிக்கு சற்றும் சளைக்காத 'சுக்ரீவனின்' வேலையை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது தான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கின்ற செய்தியாக இருக்கும்.

பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரு விஷயத்தைத் தவிர மற்ற எல்லா இந்துமத‌ விஷயங்களையும் ஏற்று செயல்பட்டுவந்த நீதிக்கட்சித் தலைவர்களைப்பற்றி மட்டும் சரியக பார்க்கத்தெரிந்த இந்த 'அறிவாளி' ராஜதுரை பாரதிதாசனை விமர்சிப்பதற்கு மட்டும் பார்ப்பனக்கண்களை இரவல் வாங்கிக்கொள்கிறார்.

'சரி பாரதிதாசன் மட்டும் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?' என்று கூட இவர்கள் திருப்பிக்கேட்கலாம். பாரதிதாசனைக் குறித்து இவர்களைவிட ஆழமான அழுத்தமான விமர்சனங்கள் எமக்கும் உண்டு. அவரைப் பற்றிய மிகச் சரியான விமர்சனம் என்று சொன்னால், பெரியாரின் சுயமரியாதைப் பாசறையில் இருந்துகொண்டே பார்ப்பனவெறி பிடித்த பாரதியை ஏற்றுச் செயல்பட்டதைச் சொல்லமுடியும். பாரதிதாசனின் இத்தகைய துரோகம் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் செயல்களுக்கு பெருந்தடையாகவும் இருந்தது என்பதுகூட, அப்போதைய இயக்கத் தோழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும் பாரதிதாசனுடைய பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களும் இந்துமத எதிர்ப்புச் செயல்களும்தான் அவரை ஏற்றுக்கொள்ளத் தூண்டுபவையாக இருக்கின்றன. பாரதியின் மொழிநடையினை மட்டும் வியந்து போற்றிட்ட பாரதிதாசன், தனது கவிதைகளில் பாரதியின் பார்ப்பனீயக் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடாமல், அதற்கு எதிரான‌ பெரியாரின் சிந்தனைகளைத்தான் வெளிப்படுத்தினார் என்பதுவும் பாரதிதாசனுடைய சிறப்பல்லவா?

"சீரங்க நாதனையும் தில்லைநடராசனையும்
பீரங்கி வைத்துப் பிளக்கும் நன்நாள் எந்நாளோ!"

என்ற இந்துமத எதிர்ப்புப் பாடல் வரிகளும்,

பார்ப்பான் பால் படியாதீர்; - சொற்குக் கீழ்ப் படியாதீர்;

பார்பபான்; தீதுறப் பார்ப்பான் கெடுத்துவிடப் பார்ப்பான் -
எப்போதும் பார்ப்பான் ஆர்ப்பான் நம் நன்மையிலே

ஆர்வம் மிக உள்ளவன்போல்! நம்ப வேண்டாம்
பார்ப்பானின் கையை எதிர் பார்ப்பானையே பார்ப்பான்

தின்னப் பார்ப்பான் தமிழன் பேர் சொல்லி மிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மைத் தலை தூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான் அமுதாகப் பேசிடுவான்

அத்தனையும் நஞ்சென்க நம்ப வேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத் தரை மட்டம்

ஆக்குவதேஎன்றுணர்வீர்!

போன்ற பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்களை வலியுறுத்தும் கவிஞரின் வீரிய வரிகளைப் போல் தமிழில் இதுவரை வேறெந்தக் கவிஞனும் பாடியதில்லை, என்பதை மறுக்கமுடியுமா?

"சித்திரச் சோலைகளே!
உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே .... முன்னர்
எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே!"

என்ற வரிகளில் பொதிந்திருக்கும்
உழைப்பாளிவர்க்கச் சிந்தனையைப் போல பாரதி எங்காவது பாடியிருக்கிறானா?

இந்து வெறியை தனது கவிதைகளின் மூலம் ஊட்டிவளர்த்திட்ட பாரதி விமர்சிக்கப்பட வேண்டியவரா?, அல்லது அதற்கும் அப்பாற்பட்டு கொண்டாடப்படவேண்டியவரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக‌ பதிலலிக்காமல் ''நாங்கள் பாரதிதாசனை விமர்சித்திருக்கிறோம்'' என்று சொல்லும் பித்தலாட்டத்தைத்தான் அறிவுஜீவித்தனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள் இவர்கள்.

தலித் எழுத்தாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற ஆதவன் தீட்சன்யாவோ, 'ஈன பறையர்கள்' என்று தலித் மக்களைத் தூற்றிட்ட பார்ப்பனவெறியன் பாரதியைப் பற்றி விமர்சிக்கப் பம்முகிறார். இதுதான் இவரின் தலித்பார்வையோ?

இன்றைக்கு பார்ப்பன பயங்கரவாதம் கொலைவெறியோடு அலைகின்ற சூழலில்கூட நமது மதிப்பிற்குரிய‌ முற்போக்கு(!)வாதிகளின் இத்தகைய பிற்போக்கு வாதங்கள், பார்ப்பனியத்துக்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே அமைகின்றன. சிறிதும் வெட்கமின்றி, பாரதியைப்பற்றிய விமர்சனங்களுக்கு பதிலலிக்க வக்கற்ற இவர்கள், பாரதிதாசனை இகழ்வதன் மூலமாக சரிசெய்துவிடமுடியும் என்று பிறருக்குப் போதித்தும் வருகின்றனர். பாரதிதாசனை கடுமையாக விமர்சிப்பதைக் காட்டிலும், தங்களுடைய பாரதி ஆதரவு நிலைதான் பெரியாருக்கு இவர்கள் செய்யும் முழுத் துரோகமாகும். அறிவுலக நண்பர்கள் இதனைச் சரியாக அடையாளம் கண்டு உடனடியாக இந்த விமர்சனத்தைத் துவக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
.......................................................................
தோழமையுடன்,
ஏகலைவன்.

குறிப்பு: இது குறித்த தனது கருத்துக்களை, சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நேர்கானல் அளித்த தோழர்.வே.மதிமாறன் அவர்களுடைய, அந்த வீடியோ பதிவு இப்போது அவருடைய வலைதளத்தில்(http://mathimaran.wordpress.com/) வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள், இதற்காக ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமாவது செலவிட முடிந்தவர்கள், இதனை எந்த இன்டெர்நெட் சென்டரிலும் சென்று பார்க்க முடியும்.

10 comments:

said...

தோழர்.ஏகலைவன்,
இந்தப் பதிவோடு தொடர்புடைய ஒரு கட்டுரையை தோழர்.ஸ்டாலின் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனையும் இங்கே பதிப்பித்திருக்கிறேன்.

////////////////////////////////
பாரதிக்கு நிகரானவர் சுஜாதா!!

சுஜாதா இறந்த பொழுது எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுக‌ளுக்கு பிற‌கு புதியன‌ ஏதும் ப‌திவிட‌ இய‌லாத அளவுக்கு ப‌ணி நெருக்க‌டியில் சிக்கிக் கொண்டிருக்கிறேன், அத‌ன் கார‌ண‌மாக‌வே சுஜாதா ப‌திவுக‌ளுக்கு வ‌ந்த‌ பல‌ பின்னூட்ட‌ங்க‌ளுக்கு என்னால் ப‌தில‌ளிக்க‌வும் இய‌ல‌வில்லை, இருப்பினும் அவ‌ற்றில் பெரும்பாலானவற்றுக்கு தோழ‌ர்.அசுர‌ன், ம‌ருது, க‌ட்ட‌பொம்மு ஆகியோர் சிற‌ப்பான‌ பதிலும் விளக்கமும் அளித்திருந்த‌னர்., அப்பதிவின் பின்னூட்டத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்திலும் பல‌ நாட்க‌ளுக்கு த‌மிழ்ம‌ண‌த்தில் சுஜாதா புராண‌ம் ஒலித்துக் கொண்டிருந்த‌தையும் நாம் இங்கு ம‌றுப்ப‌த‌ற்கில்லை, அவ‌ற்றில் சில‌ சுஜாதாவை பார‌தியோடு ஒப்பிட்டும் ‌ எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து, சுஜாதாவை குத்த‌கைக்கு எடுத்திருந்த‌ ம‌னுஷ்ய‌புத்திர‌னின் உயிர்மை இல‌க்கிய‌ க‌ம்பெனி கூட‌ சுஜாத‌வை பாரதிக்கு நிகராகவே இன்று உயர்த்திப் பிடிக்கிறது, இது ந‌ம‌க்கு மிகையான‌தாக‌ தோன்றினாலும் கூட அது உண்மைதான் "பாரதியும், சுஜாதாவும் நிகரானவர்தான்" என்று சொல்கிறது கீழ்கண்ட பின்னூட்டம், அத‌னை சுஜாதா ம‌கிழ்ந்த த‌ருண‌த்தையும், பார‌தி சின‌ந்த‌ த‌ருண‌த்தையும் எடுத்துக்காட்டி ருசுப்ப‌டுத்தி இருவரும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாத பார்ப்பன குடுமிகளே என்கிறார் இந்த‌ பின்னூட்ட‌த்தை ப‌திந்திருக்கும் தோழ‌ர்.ம‌ருது., அவ‌ருக்கு ந‌ம‌து நன்றிக‌ள், ம‌ருது எழுதுகிறார்....

ஸ்டாலின்,

சுஜாதாவின் மரணத்தை வியாபாரமாக்கிய எழுத்து விபச்சார "மாமா மனுஷ்யபுத்திரன்" உட்பட பல மாமாக்களும் 'பாரதிக்கு நிகராக சுஜாதாவை' உயர்த்திப் பிடிக்கின்றனர். இது கொஞ்சம் அதிகமோ என்று முதலில் தோன்றியது எனக்கு. ஆனால் சுஜாதாவால் ப‌ரிச‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ நாவ‌ல் ஒன்று சுஜாதா பார‌திக்கு நிக‌ரான‌வரே என்று நமக்கு க‌ட்டிய‌ங்கூறுகிற‌து.

அந்த நாவலின் கதைக்களம்..கிட்டத்தட்ட கோபல்லகிராமம் மாதிரிதான்.. இக்கதையில் புலம் பெயர்கிறவர்கள் 'கன்னடர்கள்'.. காரணம் கி.ராஜநாராயணன் எனும் போலி கம்யூனிஸ்ட் இலக்கியவாதி கோ.கிராமத்தில் சொல்லியது போலவே முசுலீம் படை எடுப்பு..

திப்பு சுல்தானின் படை எடுப்பு நடக்கிறது. அவனின் படைகள் பொதுச் சொத்தை அழிக்கின்றன.. ஊரெங்கும் தீயிடல்..கொள்ளை..பெண்களை சூறையாடுகின்றன முசுலிம் படை..இந்துப் பெண்கள் தற்கொலை செய்கின்றனர்.. பலர் மானத்தைக் காக்க ஊரைக் காலி செய்து தென் திசை நோக்கி ஓடுகின்றனர்..முசுலிம்கள் மீது கடும் வெறுப்பை உமிழும் நாட்டார் பாடல்களை கன்னட மொழியில் பாடிக் கொண்டு பெரியகுளம் பகுதியில்..நீலகிரி மலைப் பகுதியில் அகதிகளாய் வந்தமர்ந்து நாட்டார் தொன்மங்கள் வழியே இக்கதையைச் சொல்லிக் கொண்டு நாவல் நகர்கிறது..

அப்படியே கதைக்களம் 1920கள் நோக்கி நகர்கிறது..

பிராமண வேடம் பூண்ட ஒருவனை மேடை ஏற்றிக் காசுக்காக நடிக்க வைக்கின்றனர்..அது அரசியல் மேடை..பிராமண வேடமிட்டவனை கறுப்பு நிறத்தவன் மேடையிலே செருப்பால் அடிக்கிறான்..கூட்டம் ஆவேசக் கூச்சல் எழுப்பி மகிழ்கிறது..

இதற்குப் பின்னால் கலாச்சாரம் சரிந்து போய் ஒழுக்க நெறி வீழ்வது போல் நாவல் போய்க்கொண்டிருக்கின்றது..

1995இல் குமுதம் இதழும், சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றது இந்த நாவலின் பெயர் "நுண்வெளிக்கிரணங்கள்". எழுதியவர் சு.வேணுகோபால்.


இந்த நாவலுக்கு 1 லட்சம் பரிசும் சிங்கப்பூர் செல்ல ஏர் டிக்கெட்டும் கொடுக்கப்பட்டது. இந்த நாவலை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்து மகிழ்ந்தவர் வேறு யாருமல்ல, சிறுபான்மை வெறுப்பும், பார்ப்பனரல்லாதார் அரசியலின் மீது அருவெறுப்பும் கொண்ட சாட்சாத் சுஜாதாவேதான், அவ‌ர் அப்பொழுது குமுத‌த்தின் ஆசிரிய‌ராக‌ வீற்றிருந்தார்.

இம்மாதிரி முசுலிம் வெறுப்பையும், பார்ப்பனர் அல்லாதோர் அரசியலில் நுழைந்ததை வெறுத்து இழிவுபடுத்துவதையும் சித்தரிக்கும் இலக்கியத்தை ஆதரிக்கும் சுஜாதாவும் பாரதியும் ஒன்றிணையும் புள்ளியை கீழ்க்கண்ட பாரதி எழுத்துக்களில் இருந்தும் நாம் கண்டறியலாம்.


1)பாரதி எழுதுகிறார்,


'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான் '.


(*ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.)


2)பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனப் பாரதி எழுதி இருக்கிறார்.


பாரதியைப் போன்றே விசம் கக்கிய இலக்கியத்தைக் கண்டறிந்து முதல் பரிசு கொடுத்த சுஜாதா ரங்கராஜனைப் பாரதியுடன் இணைத்து இந்த மாமாக்கள் பேசுவது சாலப் பொருத்தம்தான் என்பது இப்போது நமக்கு தெளிவாய்த் தெரிகிறது..

சிறுபான்மையின‌ர் மீதும் பார்ப்ப‌ன‌ர‌ல்லாதார் இய‌க்க‌த்தின் மீதும் வெறுப்பை உமிழ்ந்து சு.வேணுகோபால் எழுதிய‌ இந்து வெறி இல‌க்கிய‌த்தை ஆத‌ரித்து எழுதும் இன்னொரு ஆசாமியின் வ‌ரிக‌ளை பாருங்க‌ள்.

"இளைய தலைமுறைப்படைப்பாளிகளில் சிறுகதையில் சாதனைசெய்தவர் சு.வேணுகோபால்தான். ‘கூந்தப்பனை’ ‘களவுபோகும்புரவிகள்’ ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ ‘வெண்ணிலை’ ஆகிய தொகுதிகளில் சு.வேணுகோபாலின் தலைசிறந்த பல கதைகள் உள்ளன. ‘நுண்வெளிக்கிரணங்கள்’ என்ற நாவலையும் எழுதியிருக்கிறார்."

இப்ப‌டி இல‌க்கிய‌ ம‌திப்பீடுக‌ளை அள்ளிவிடும் ஆதீனம் வேறு யாராய் இருக்க‌முடியும் திருவாள‌ர் ஜெய‌மோக‌னை த‌விர‌....


(நுண்வெளிக்கிரணங்கள் போன்றே மறுவாசிப்பு செய்யப்பட்டு முசுலீம் வெறுப்பு கொண்ட‌ கி.ராவின் கோப‌ல்ல‌புர‌ம் கிராம‌மும் தோலுரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.)

ம‌ருது

/////////////////////////////////

said...

முண்டம் ஏகலைவன் அய்யா,

ஒரு கேள்வி:

ஏகலைவன்,அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் பொறிக்கி மணி,மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம் என்ன?
1) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா?

அல்லது,

2)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடி துடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா?

முண்டம் ஏகலைவனோஅல்லது அதன் அடிவருடியோ,வழக்கம் போல் பார்ப்பனீயம் என்று உளறாமல்,விளக்கமா பதில் சொல்லுமா?

பாலா

said...

பாப்பன்னாலே கேனயனுங்கதான்னு எனக்குத் தெரியும், அதிலும் இந்த பாலா கடைஞ்செடுத்த கேனையனாயிருக்கானே.

ஏன்டா டும்மி, இந்தப் பதிவுக்கும் நீ போட்டிருக்கிற கமென்டிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்காடா அம்பி? ஒம்பார்ப்பன புத்தியத்தான் ஒன்னோட ஒவ்வொருவரியும் இங்க எடுத்துக்காட்டுது. ரெண்டாயிரத்து ஐநூறு அப்பாவி மக்களை பச்சைப்படுகொலை செஞ்ச குஜராத் இந்துவெறிக் கிரிமினல் மோடியைத் தலைவராகத் தொழுகிற ஒம்பார்ப்பன புத்திக்கு மக்கள் போராளிகளின் வாழ்க்கை எப்படிடா புரியும்?

ராமனுக்குக் கோயில் கட்டுரேன், மாமனுக்கு கோவனம் கட்டுறேன்னு இந்த அப்பாவி மக்களை ஏமாத்தி, அந்நிய செலாவனி மோசடி செஞ்சி மாட்டிக்கிட்ட கொள்ளைக்கூட்டத்துக் கைக்கூலி நீ, ஒனக்கென்ன திடீருன்னு மக்கள் மேல அக்கறை?

குறிப்பு: போலிக்கூட்டத்த சேர்ந்த சந்திப்பு வலைதளத்தில் பார்ப்பன பொறுக்கி செயராமனும், இந்த பாலாவும் பதிப்பித்திருந்த பின்னூட்டங்களுக்கு பதிலலிக்கும் விதமாக நானும் ஒரு பின்னூட்டத்தைப் பதிப்பித்திருந்தேன். நம்ம கேனை சந்திப்பு வழக்கம்போல பின்னூட்டங்களைப் பதிப்பிக்காமல் இருந்துவிடவேதான், இந்தப் பதிவுக்கு சிறிதும் பொருந்தாத விசயத்தை இங்கே பதிப்பித்திருக்கிறான். பதிவிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் உடனடியாக தவிர்க்கப்படுதல் அவசியமானதாகிறது. தவிர்க்கப்படும்.


தோழமையுடன்,
ஏகலைவன்.

Anonymous said...

ஏண்டா பற நாய் ஏகலைவா,
உனக்கு எல்லாத்திலேயும் பாப்பான் தான் கிடைத்தானா திட்டுவதற்க்கு.பொறிக்கி தெ மவனே.

Anonymous said...

Hello Ekalaivan,

Everyone knows that you are naxalite terrorist killing innocent people;are you also a caste fanataic and a paraiah bastard.please tell me.

said...

பாலா என்கிற பூணூல் மாமா நன்னாத் திட்டுங்கோ,

நீங்க திட்றத்துக்காகத்தான் நாங்கள் இவ்வளவு பாடுபடுகிறோம்.
நீங்க எங்களை திட்டாம இருந்தாத்தான், நாங்க சரியில்லன்னு அர்த்தம். நீ எஞ்சாதியச்சொல்லி திட்டத் திட்டத்தான் பார்ப்பன இந்துமதம் என்பதே சாதிவெறியை உள்ளடக்கியதுதான்னு அனைவருக்கும் தெரியவரும். பேஷாத் திட்டிக்கிங்கோகோகோகோஓஓஓ................

Anonymous said...

Akalivan

You seem to be a dangerous naxal terrorist with a intention to murder 1000s of people?What is the sadistic pleasure you get out of this?Why this insane perverted desire to harm people?You might have neen born as a son of a bitch and a mean paraiah bastard.You may want to continue to be so but other innocent people have a right to get educated and get rid of their poverty no.Why are you upset when poor people see some development?
Grow up swine.

Anonymous said...

Hello naxal terrorist and son of a bitch Ekalaivan?Are you a coward, you swine?You are not able to answer my questions and hence gone underground or what you bastard?

Anonymous said...

தோழரே,

எஸ்.வி.ராஜதுரை மட்டுமல்ல தமிழகத்தில் பாரதி பார்ப்பானைப் பற்றி வாயே திறக்காத மண்டை வீங்கிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

உதாரணத்திற்கு - அ.மார்க்ஸ்,கோவை ஞானி,தமிழவன்,வீ.அரசு...

உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் அணைத்து நிகழ்ச்சிப்போக்குகளையும் விளக்கி விரித்துரைத்து தெளிவுபடுத்தவே தாம் அவதரித்துள்ளதாக கருதிக்கொள்ளும் இந்த மண்டை வீங்கி அற்பர்கள்,
உலகில் அனுகி ஆராயாத ஒரே ஒரு பொருள் பாரதி மட்டும் தான் என்று கருதுகிறேன்.

இப்பேர்பட்டவர்களுக்கு பாரதி தாசன் எம்மாத்திரம் ?
லெனினை எடை போட்டு அடுக்கி வைத்தவர்கள்,
மார்க்சுக்கு திருத்தம் சொல்லி தமது வீக்கத்தை மேலும் கொஞ்சம் கூட்டிக்கொன்டவர்கள்,
R.S.S காரன் பாரதியை பற்றி மட்டும் தூக்கத்தில் கூட உளரியதில்லையே ஏன் ?
இது தான் முக்கிய கேள்வி.

ஏனெனில்
உலகமகா பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கூறும் இவர்கள் அக்கிரகாரத்து அற்பனிடம் தான் தம்மை கண்டு கொண்டார்கள்.

அவனுடைய கவிதைகளின் அற்ப உள்ளடக்கத்தை அழகியல் வடிவம் விழுங்கியது,
இந்த இடம் தான் இவர்கள் பாரதியோடு கலந்து கரைந்து போகும், எளிதில் கண்னுக்கு புலப்படாத அந்த புள்ளி.

பாரதி அவலம் என்கிற கட்டுரையில் தோழர் மருதையன் இதை இவ்வாறு குறிப்பிடுகிறார்

"பாரதியை விமர்சித்தால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்றால் பாரதியை விமர்சிப்பது நமது அறிஞர்களையும் விமர்சிப்பது தான்,ஏனெனில் இவர்கள்
தம்மை பாரதியிடம் காண்கிறார்கள்."

இந்த அழகியல் மயக்கத்தில் கிறங்கிப்போனதால் தான் நமது அறிஞர்களுக்கு பாரதியின் அற்பவாத கவிதைக்கும் ஆபத்தான பார்ப்பனிய கவிதைக்கும் வேறு பாடு தெரிவதில்லை.
இது வெளியிலிருந்து விமர்சனமாக முன் வைக்கப்பட்டு இவர்களை கேள்விக்குள்ளாக்கும் போது இவர்கள் பாரதியின் பார்ப்பன சார்பை ஏற்காததோடு அதை மூடி மறைப்பதற்கு புது புது விளக்கமெல்லாம் தருகிறார்கள்.பாரதியின் அற்பத்தனத்தோடு இவர்களுக்கு இலவச இணைப்பாக கூடவே ஒட்டிக்கொண்டு வரும் பார்ப்பனச் சார்பு இவர்களுடைய கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் பங்காற்றுகிறது. நாம் அவிழ்த்தெறிந்த பாரதியின் கோவனத்தை மீண்டும் எடுத்து கட்டி விட பாரதி தாசனை நிர்வாணமாக்கப்பார்க்கிறார்கள் இந்த கோமாளிகள்.

இந்த குட்டி முதலாளித்துவ அற்பர்கள் இன்னொரு பிரம்மாண்டமான அற்பனிடம் ஒன்று கலப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயம் அல்ல,இவர்களின் எல்லை அவ்வளவு தான்.

இவர்கள் லெனினிடமோ,மார்க்சிடமோ என்றுமே தம்மை கான முடியாது. அதற்கு ஈவிரக்கமற்ற முறையில் தன்னைத்தானே அறுத்துப்ப்பார்த்து சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும், மார்க்ஸ் இரக்கமற்ற முறையில் முதலில் தன்னைத்தான் விமர்சணம் செய்து கொண்டார்,
லெனின் ஒரு நொடி கூட இந்த முதலாளித்துவ சமூகத்தில் மக்களை வாழ பழக்கப்படுத்தக்கூடாது என்றார். இந்த சமூக அமைப்பை அவர் அந்த அளவிற்கு வெறுத்து ஒதுக்கினார்.அனுவளவிற்கு கூட அவர் போலித்தனமற்ற எதார்த்தவாதியாக வாழ்ந்தார்.

அணைத்தைப்பற்றியும் வியாக்கியானம் செய்யப் பிறப்பெடுத்த தமிழகத்தின் மண்டைவீங்கிகள் இது போன்ற மாபெரும் தலைவர்களில் தம்மை காண வேண்டுமானால் குறைந்தப்பட்சம் அவர்களைப்போல பத்து சதவீதமாவது வாழ முயல வேண்டும் அதெல்லாம் அவர்களால் முடியாது என்பதால் ஒரே போடாக மார்க்சுக்கும்,லெனினுக்கும் ஒரு திருத்தத்தை போட்டு விட்டு ஒரே ஜம்பில் அவர்களையும் தாண்டி விட்டதாக பூனையைப் போல கண்களை மூடிக்கொண்டு எங்கும் ஒரெ இருட்டு என்கிறார்கள்

மாறாக இவர்களின் வாழ்க்கை முறை தான் என்ன ? கிசு கிசு அரசியல் பேசுவது, மற்றவரை மட்டம் தட்டி எழுதுவது, தன்னியடிப்பதை கலகம் என்று அறிவிப்பது அதையே ஒரு கட்டுரையாக எழுதி தன்னி அடித்துக்கொண்டே விவாதிப்பது,உண்மையாக மக்கள் பிரச்சணகளுக்காக போராடும் அமைப்புகளை தினமலர் காரனைப்போல இருட்டடிப்பு செய்வது, யாரவது பெண் கவிஞர் எழுதினால் ஒன்றுமே இல்லாத அதை சிறந்த பெண் எழுத்து என்று கூறி தான் ஆணாதிக்கவாதியல்ல என்று காட்டிக்கொள்வது, இலக்கியச் சண்டைகள்,மேலும் அக்கப்போர் அக்கப்போர் அக்கப்போர் வாழ்க்கை முழுக்க இதே அக்கப்போரில் கழித்து கடைசியில் இது நாள் வரை வீனாக வளர்த்த மண்டையை போட்டு விடுவது.

எனவே தான் இவர்களுக்கு ஏற்ற அற்பன் பாரதியிடம் தம்மைக் கண்டு அவனுடைய கஞ்சா புகையில் கரைந்து போகிறார்கள்.

மார்க்சிடம் அவருடைய பிள்ளைகள்

நீங்கள் மிகவும் வெறுப்பது ?
என்று கேட்ட போது அவர்

எஸ்.வி.ராஜதுரை,
அ.மார்க்ஸ்,கோவை ஞானி
இன்னும் இது போல மண்னில் வாழும் பிறவும் என்று கூறினார்.

ஆதார நூல்
மார்க்ஸ் பிறந்தார்.


இப்படிக்கு
அக்காக்கிஅக்காக்கியேவிச்

said...

முண்டம் ஏகலைவன் அய்யா,

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதாளத்தில் பதுங்கும் நக்சல் தீவிரவாதியே,பதில் சொல்லிவிட்டு தான் ஒழிந்து போயேன்.
முண்டம் முண்டம்.

பாலா