Showing posts with label நந்திகிராம். Show all posts
Showing posts with label நந்திகிராம். Show all posts

Saturday, March 6, 2010

உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.

சி.பி.எம். என்கிற போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த செய்திகள் பலவற்றை நாம் கடந்த சில நாட்களாக அறிந்தும் பேசியும் வருகிறோம். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்கிற ஐயப்பாடு அவருக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் மற்றும் உ.ரா.வ.வின் சகோதரி மூலமாகவும் சில வார ஏடுகளில் முன்வைக்கப்பட்ட்து. அவரது மரணத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் சி.பி.எம். கட்சியோ அல்லது அவரது மனைவியோ, அவரது மரணம் குறித்து விசாரணை எதுவும் இதுவரை கோரவில்லை. குறைந்தபட்சம் அவரத் மரணத்திற்கு தாங்கள் காரணமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகவேனும் அவர்கள் நியாயமான விசாரணை கோரியிருக்கலாம், அத்தகைய நேர்மையெல்லாம் பிழைப்புக்காக கட்சி நட்த்தும் அந்த்த் தலைமையிடம் இருக்க வாய்ப்பில்லை போலும்!

மாறாக அவரது மரணம் தற்கொலைதான் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியே வருகிறார்கள். ”வேண்டுமானால் அது தற்கொலைதான் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யட்டுமா...” என்று கேட்காத குறைதான். அட போலீசு இதுகுறித்து விசாரிப்பதில் நம்ம காம்ரேடுகளுக்கு என்னய்யா நட்டம் என்று சாதாரண ஆள் கூட கேட்பானா மாட்டானா?! அட, அவரது மரணம் தற்கொலையா கொலையா என்பது தெரிந்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவோம் என்று அன்றைக்கே (இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவரது தோழர்கள்...) கோரியிருந்தால், எண்ணி ஒருமணி நேரத்தில் கொலையாளி அனைவருக்கும் முன்பாக வந்திருப்பான். என்ன செய்வது, ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையதுதானா என்பதுகுறித்து உறுதி செய்துகொள்வதற்காக டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும் என்று ‘வெவரமாக’ கேட்கமுடிந்த சி.பி.எம். கட்சியினருக்கு, அவருடைய மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்ட்து ஏனோ?! இது ஏதோ தற்செயலாக நடந்த்து அல்ல என்பதும் அவரது மரணம் இன்னும் பல்வேறு வண்டவாளங்களை வெளிக்கொண்டுவரவிருக்கிறது என்பதும் இன்று சி.பி.எம். கட்சியினராலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பல பெண்களுடன் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்திருக்கும் பொறுக்கிகளாயிருந்தாலும் (ஆதாரம் உ.ரா.வ.வின் கடிதம்), கேட்கக் கூசுகின்ற அனைத்து வகை மோசடியையும் செய்பவனாயிருந்தாலும் நடவடிக்கை எடுத்திராத அக்கட்சி, இந்த வரதராசனுக்கு எதிராக கடமையாற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னணி குறித்து கேள்வியெழுவது இயல்புதானே? மாநிலச் செயலாளருக்கான போட்டிதான் அந்த கடமையின் பின்னணியாக இருந்திருக்கிறது. மாநிலச் செயலாளர் பதவியைக் குறிவைத்துவிட்ட உ.ரா.வ.வை அமைப்பு ரீதியாக ஓரம்கட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியதால்தான், அவருக்கு எதிராக ‘ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு போட்டியற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு இங்கு புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், போலும்!

வழக்கமாக, காங்கிரசு கட்சியின் கோஷ்டிகள் வெறும் வேஷ்டிகளைக் கிழித்துக் கொள்வதுடன் தங்களது பதவிச் சண்டையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல ஈரக்குலையறுக்கும் செயலை கோஷ்டி மோதலுக்கு பெயர்போன காங்கிரசார்கூட கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இது ஜெயேந்திரன் பாணியிலான செயல்பாடு. இதுதான் பார்ப்பனிய பாணியிலான ‘ஒழுங்கு நடவடிக்கை’யாகும். உ.ரா.வ.வின் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அக்கட்சி அமைத்த கமிட்டி முறையாக நடந்து கொள்ளாத்துதான் தன் மீதான ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர் தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதாக இல்லை.

இச்சம்பவத்தின் பின்னணியில் நேற்றையதினம் (04.03.2010 – வியாழக்கிழமை) அவருடைய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது மரணம் கொலையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவரது கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளமும் அதன் மூலம் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த்தாக தகவல். இந்த அறிக்கையினை மையப்படுத்தி மக்கள் தொலைக்காட்சியின் செய்தியில், உ.ரா.வரதராசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மரணத்திற்கு முன் உ.ரா.வ. சி.பி.எம். கட்சியின் கோஷ்டி சண்டையில் பழிவாங்கப்பட்ட வித்த்தையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான் சி.பி.எம். கட்சியின் குண்டர்கள் சிலர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் தலைமையில், இன்று (05.03.2010) காலை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அதன் ஊழியர்களின் மீதும், மேற்குவங்கத்தை (சிங்கூர், ந்ந்திகிராம், லால்கார்) நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் மக்கள் தொலைக்காட்சியும் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில், “நாங்கள்தான் கொண்றோம் இப்ப என்னான்ற?!...” என்பதுபோன்ற செய்தியை சூசகமாக இந்த கொடூரத் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள், நம்ம காம்ரேடுகள்!

இவ்விடயத்தைக் கேள்விபட்டபிறகு நேர்மையான தோழர்கள் எவரேனும் இன்னும் சி.பி.எம். கட்சியில் நீடித்திருப்பார்களேயானால், அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்கு இருக்கிறது.

சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைமை யோக்கியமானதாகவோ குற்றமற்றதாகவோ இருந்திருந்தால், உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான பிறகாவது, அது எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? மரணத்திற்கு முன் கடைசியாக உ.ரா.வ. தனது கட்சித் தலைமைக்கு எழுதிய கடித்த்தில், அவர் குற்றம் சாட்டியுள்ள உ.வாசுகி, பி.சம்பத், ஜான்சிராணி போன்ற அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் (அதாவது உ.ரா.வ.வைப் பொறுத்தவரை, அவரது துரோகிகள்...) புடைசூழ, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், ”உ.ரா.வ. தற்கொலை செய்து கொண்ட்தற்கான ஆதாரமாக அவர் எழுதிய கடிதங்கள் இருக்கும் போது, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை...” என்று இன்று மாலை (05.03.2010) உறுதியாக அறிவிக்கிறார்.

நீச்சல் தெரிந்த தங்களுடைய தோழர், ஒரு சிறு ஏரி நீரில் எவ்வாறு விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வியோ, ஏரி நீரில் மீட்கப்பட்ட பிணம் உள்ளாடையுடன் எடுக்கப்பட்டிருப்பது குறித்த (தற்கொலை செய்துகொள்பவர் இவ்வளவு தூரம் வெறும் உள்ளாடைகளுடன் வந்தா தற்கொலை செய்துகொண்டிருப்பார்...) கேள்வியோ, அந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவருக்குக் கூட ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அவரது சக தோழர்களான சி.பி.எம். தலைமைக்கு மட்டும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான இந்த தருணம் உள்பட...) இதுவரை தோன்றாத்தன் காரணம்தான் என்ன? இதுகுறித்து அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் யாராவது இருந்தால் யோசித்து விடைதேட வேண்டும்.

மாறாக தனது கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவரின் மரணம் குறித்து சில கேள்விகளை எழுப்பிய ஒரு ஊடகத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்துவதென்பது நேர்மையான செயலா? பொதுவாக இந்த ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்ட்தை நான் இப்பதிவினூடாக கண்டிக்க முயலவில்லை. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் எந்த விசயங்களையும் வெளியிடாமல் மோசடியாக இருட்ட்டிப்பு செய்வதோடு, அரச பயங்கரவாத்த்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்துறை பொறுக்கிகள் தாக்கப்படுவது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், இந்த தாக்குதல்கள், ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பதவிச் சண்டையினால் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் பதவி வெறியானது கொலைவெறியாக ‘மேல்நிலையாக்கம்’ அடைந்திருப்பதுவும், பின்னணியாக அமைந்திருப்பதுதான் இதில் மையப்படுத்தி விவாதிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய விசயமாக நான் கருதுகிறேன். அதேவேளையில், ஊடக ஜனநாயகத்தையும், ’பத்திரிக்கா தர்மத்தை’யும் பாதுகாக்கப் பிறந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிமார்க்சிஸ்டுகள், தங்களை பாதிக்கும் விசயம் எவ்வளவு நேர்மையான, உண்மையான விசயமாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முத்தாய்ப்பாக இருப்பதுதான் நமக்கருகாமையில் நடந்திருக்கும் இக்கொலைவெறி தாக்குதல்.

ஈழப் போராட்ட்த்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனத் திமிருடன் கட்டுரை எழுதிய மாலினி மாமியையும் அதனை வெளியிட்ட இந்து பத்திரிக்கையையும் கண்டித்து கோவையிலும் ஈரோட்டிலும் அப்பத்திரிக்கையினை எரித்து, போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை வன்மையாகக் கண்டிப்பதாக இரண்டு நாட்கள் தமது தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் எழுதிய சி.பி.எம். கட்சி; இதனால் பத்திரிக்கை சுதந்திரமே பாதிக்கப்பட்டுவிட்ட்தாக்க் கூப்பாடு போட்ட இந்த போலிக்கும்பல்; தமது சொந்த தோழரின் மரணம் குறித்து எழுப்ப்ப்படும் நியாயமான கேள்விகளுக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்கள் என்றால், இவர்களது கபடவேட்த்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று.

ஏன், சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க மாமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முட்டையாலடிக்கப்பட்டபோது ஏனைய ஓட்டுப் பொறுக்கிகள் எல்லோரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாக மாநிலக் குழுவைக் கூட்டி, நமது வழக்கறிஞர்களுக்கு எதிராக, “தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்ட்து...” என்று சிறிதும் கூசாமல் அறிக்கை விட்ட இந்த சி.பி.எம். தலைமை, உ.ரா.வ. குறித்து உண்மைச் செய்தியை வெளியிட்ட ஊடகத்தை பாய்ந்து பிடுங்குகிறது என்றால், இதன் பின்னணியில் உள்ள விசயங்கள் வேறு என்னவாக இருக்கமுடியும். ஆம், அது கொலைதான் என்பதுவும் அந்த கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்பதையும் இந்த தாக்குதலின் மூலாமாகவும் நிரூபித்திருக்கிறார்கள், போலிகள்.

ரெண்டு மூனு எம்.பி. சீட்டுக்காக ஜெயல்லிதாவிடமும் கருணாநிதியிடமும் மன்றாடிக்கொண்டிருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழகத்திலேயே இவர்களது நடவடிக்கைகள் இப்படியிருக்கிறதென்றால், முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் இவர்களது நடவடிக்கை எப்படியிருந்திருக்கும், கொஞ்சம் யூகித்துத்தான் பாருங்களேன்!, டாட்டாவுக்கு ஆதரவாக சிங்கூரிலும், சலீம் என்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக ந்ந்திகிராமத்திலும் இன்னும் லால்கார் உள்ளிட்ட மே.வங்கத்தின் பல பகுதிகளிலும் சாதாரண, எளிய, உழைக்கும் மக்களின் மீது கொடூரமான ஆயுதங்களுடன் கொலைவெறித்தாக்குதல் நடத்திவரும் இந்த போலி மார்க்சிஸ்டுகள்; இவர்களது செயலை அம்பலப்படுத்தி கண்டித்த மேதா பட்கர் போன்றவர்களின் மீது, கொலைவெறித்தாக்குதல் நடத்தினார்கள். மேதா பட்கர் சென்ற வாகனம் மே.வங்கத்து சிபிஎம் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி நண்பர்களிடம் கேட்டபோது தமது கட்சி எந்த நிலையிலும் தவறு செய்திருக்காது, என்று ஆழமாக நம்புவதாகத்தான் தெரிவித்தார்களேயொழிய, நியாயமான பரிசீலனைக்கு அவர்கள் வரவில்லை. உ.ரா.வ. விசயத்திலும், பெரும்பாலான சி.பி.எம். அணிகளுடைய மவுனம் கூட அவர்களது அடிமை மனோபாவத்தையும் அப்பாவித்தனத்தையும்தான் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

காஞ்சிக்கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராம் அய்யரைக் கொலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டபோது, ஜெயேந்திரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பலர் வெட்கித் தலைகுணிந்தனர். ஆனால், பெரும்பாலான பார்ப்பனர்கள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாகத்தான் தம்மைக் காட்டிக் கொண்டார்களே தவிர, அதே பார்ப்பன சமூமத்தைச் சார்ந்த, கொல்லப்பட்ட சங்கர்ராமனுக்கு ஆதரவாக இல்லை. இதற்கான நோக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து கவலைப்படாத அக்கட்சியினர் பலர், கொலையானாலும் தற்கொலையானாலும் அதனுடன் நேரடியான தொடர்புடைய அக்கட்சியின் தலைமை குற்றமற்றது என்று அட்டியின்றி ஏற்றுக் கொள்கின்றனர் என்றால் இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.

உ.ரா.வரதராசன், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை கிட்டதட்ட எல்லா வாரப்பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கின்றன. அதில், “ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டு. ஆனால், பல பெண்களுடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்ட மாநிலத் தலைவர்களுக்கும், மத்தியக் குழு உறுப்பினர்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, என்னை மட்டும் தண்டித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அக்கட்சியின் தலைமை வெட்கித் தலைகுணிந்த்தாகவோ பதில் சொன்னதாகவோ தகவலில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அக்கட்சியின் அணிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மாநில அளவிலான தலைவர்களில் சிலர் பெண்பித்தர்களாகவும் பொறுக்கிகளாகவும் நடந்து கொண்டிருப்பது மீண்டுமொருமுறை அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரின் மூலமாகவே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதைத்தான். கட்சியின் தலைமை இப்படி அழுகி நாறிக்கொண்டிருக்கும் போது கீழ்மட்ட அணிகளில் நேர்மையானவர்களின் நிலைமை பரிதாபகரமானது. இத்தகைய அயோக்கியர்களால் நிர்வகிக்கப்படும், சீரழிந்த தலைமைதான் கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையையும், நெறிப்படுத்தும் இயக்கத்தையும் நட்த்த்தவிருப்பதாக்க் கதையளக்கிறார், த.மு.எ.க.ச. தமிழ்ச்செலவன். யார், யாரை நெறிப்படுத்துவது?!

கேவலம் மாநிலச் செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கோஷ்டி சண்டையின் பின்புலத்தில் உ.ரா.வரதராசன் ’நெறிப்படுத்த’ப்பட்ட்தைப் போல, (அதே நேரத்தில் அப்பதவிக்கு போட்டியிடாத ஏனைய தலைவர்களின் அயோக்கியத்தன்ங்களைப் பொறுத்துக்கொண்ட்தையும் போல...) ஆங்காங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், இன்னும் வட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளுக்குமான கோஷ்டிகள் இல்லாமலா இருப்பார்கள்? அத்தகைய கோஷ்டிகளைக் கொண்டுதான் தமது கட்சி நெறிப்படுத்தப்ப்ட விருப்பதாக ச.தமிழ்ச்செல்வன் வெட்கமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ’ஒழுங்கு நடவடிக்கை’யின் மூலம்தான் ஏராளமான நேர்மையான அணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் கட்சியின் மானம் இப்படி காற்றில் பறப்பது குறித்த கையறுநிலையில், தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பதவி நாற்காலியை மையப்படுத்தி வெளிப்படையாக மோதிக்கொள்ளும் இந்த எச்சில் இலை நாய்களின் ஓலத்தைவிட, பெரும்பாலான உழைக்கும் மக்களின் அன்றாட அவலக்குரல்தான் நம்மை பிடித்தாட்டுகிறது. அவர்களை இந்த மோசடியான சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டம்தான் நமக்கு முன் நிற்கும் முக்கியக் கடமையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போலி ஜனநாயக சமூகத்தை முற்றாகத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை ஒரு புரட்சியின்மூலம் நிறுவுகின்ற நமது நெடிய போராட்ட்த்தில், நம்மை முன்னேற விடாமலும், எதிரிகளின் இலக்குகளை நெருங்க விடாமலும் இடையூறாக இருந்துவரும் எதிர்ப்புரட்சி-சீர்குலைவுக் கும்பலான போலிகளை அம்பலப்படுத்தி வீழ்த்த வேண்டியதும் அவசியமல்லவா? நிச்சயமாக வீழ்த்துவோம்!

பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத பிழைப்புவாத-பினந்தின்னிக் கூட்டத்துடன் இருக்கும் அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாகத் துண்டித்துவிட்டு, உண்மையான விடியலுக்காக, நியாயமான போராட்ட்த்தை நோக்கி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துப் போராட வாருங்கள் என்று, எஞ்சியிருக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை அழைக்கிறேன்!

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.

Sunday, July 20, 2008

"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!


"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!

சிபிஎம் / சிபிஐ என்ற இரு போலி கம்யூனிசக் கட்சிகளின் சார்பில் சென்னை அமைந்தகரையில் சென்ற 16/07/08 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நானும் சில தோழர்களும் சென்றிருந்தோம். மேடைக்கு பின்புறம் இருந்த ஒரு டீகடையில் நின்றிருந்த சில மூத்த தோழர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

கடந்த நாற்பது வருடங்களாக சிபிஎம் கட்சியில் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சென்னையை அடுத்த பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) பகுதியிலிருந்து மேற்கண்ட கூட்டத்திற்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் அப்பாவித்தனமாக பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அதில் "வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை ஆதரிக்க வேண்டிய நிலை வந்தால் தயங்காமல் ஆதரிப்போம்" என்று உங்கள் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறாரே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

"இல்லை. அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்கவே மாட்டார்" என்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தனர். "அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறதே, தோழர் நீங்கள் பார்க்கவில்லையா?" என்று நமது தோழர்களும் திருப்பிக் கேட்டனர். உடனே அவர்கள், "இதுபோன்று 'தீக்கதிர்' பத்திரிக்கையில் வந்திருக்கிறதா?" என்றதோடு "எந்த செய்தியாக இருந்தாலும் தீக்கதிரில் வந்தால்தான் நாங்கள் நம்புவோம்" என்றும் அப்பாவித்தனமாகப் பதிலளித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மலைபோல் நம்பியிருக்கும் அந்த 'தீக்கதிர்' நாளேட்டின் யோக்கியதையைக் காட்டும் வகையில், அதன் முக்கியப் பொருப்பாளரான குமரேசன் என்பவர் மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணலின் போது மேற்கண்ட யெச்சூரி சம்பந்தப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
கேள்வி மேற்கண்ட சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கை பற்றியதுதான். "தில்லி அரசியலில் நிலவும் நெருக்கடிகளின் காரணமாக, சும்மா போகிற போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களைச் சொல்லுவார்கள், அதையெல்லாம் பெரிதுபடுத்த் வேண்டியதில்லை. சீத்தாராம் யெச்சூரியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல" என்று தெளிவாகச் சொன்னார்.

'சும்மா போகிற போக்கில்' கருத்து தெரிவிப்பதற்கு சீத்தாராம் யெச்சூரி ஒன்றும் கட்சியோட கடைமட்ட ஊழியன் இல்லை. அவர்தான் அப்போலி கம்யுனிச கட்சியின் மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். சிபிஎம் கட்சியின் அரசியல் 'தரகு'ப் பாரம்பர்யத்தை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருப்பவரும் அவரே. இப்படியிருக்கையில் யெச்சூரியின் கருத்தை கட்சியின் கருத்தாகக் கருதவேண்டியதில்லை என்று குமரேசன் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளுக்கே உரிய பித்தலாட்டப் போக்கு.

அப்பாவி ஊழியர்கள் மலைபோல நம்பிக் கொண்டிருக்கும், அக்கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையான தீக்கதிர், சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கைகளை மாற்றித் திரித்துக் கூறுவது புதியவிசயமல்ல. ஏற்கெனவே, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன் கைது செய்யப் பட்டபோது, அக்கைது நடவடிக்கையைக் கண்டித்து ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார் இதே யெச்சூரி பகவான். அது தினமணி, இந்து உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. ஆனால், இவர்களுடைய தீக்கதிர் நாளேடு சிறிதும் கூசாமல் யெச்சூரி அவ்வாறு சொல்லவேயில்லை என்று அப்போதும் எழுதியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் கொடுமை என்னவென்றால் மேற்கண்ட தினமணி, இந்து நாளேடுகள் சிபிஎம் கட்சியின் ஆதரவுப் பத்திரிக்கைகள். அப்பத்திரிக்கையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அக்கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நந்திகிரமம் உள்ளிட்ட போராட்டங்களில் அம்பலப்பட்டபோது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முறையாக பதிலளிக்கத் திராணியற்ற போலிகள், அவற்றை "ஊடகங்களின் சதி" என்று கூசாமல் சொல்லிக் கொண்டனர். வெற்று அவதூறுகளும் போலிப்புலம்பல்களும் மட்டும் கொண்டிருக்கும் இவர்களது ஏடுகளுக்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Saturday, June 21, 2008

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....



"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அனைத்துமே உலக அளவில் சந்தி சிரித்த விசயம்தான் ஏற்கெனவே.

மேற்குவங்கத்தில் இவர்களது அரசும் கட்சியும், தரகு முதலாளியான டாடாவுக்கும், இந்தோநேசியாவில் சுமார் பதினைந்து இலட்சம் கம்யூனிஸ்டு தோழர்களை நரவேட்டையாடிய சுகர்தோ வுடைய 'சலீம் குழும'த்துக்கும் அடியாளாக மாறி சேவை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இப்படிப்பட்ட ஒரு குண்டர் அமைப்பு முதலாளிகளுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மீது ஏவிய அக்கிரமங்களை இந்த ஒரு பதிவுக்குள் பட்டியலிட்டுவிட முடியாது. குறிப்பாக நந்திகிராம போராட்டங்களின் போது இக்கட்சியைச் சார்ந்த குண்டர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். இக்குண்டர்படை செய்த அட்டூழியங்களில் காணாமல்போன குழைந்தைகள் முதியவர்கள் நூற்றுக் கணக்கான பேர்.

இப்படி சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக, குழந்தைகள், பெண்கள் என்று அனைவரின் மீதும் தனது வக்கிரங்களைக் கட்டவிழ்த்துள்ள அக்கட்சி கையில் உயர்த்திப் பிடித்திருப்பது ஆயுதங்களைத்தான், வேறெதையுமில்லை.

சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தை மறுதளிக்கும் இப்போலிக் கூட்டம்; முதலாளிகளிடம் பெறும் சில தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூலிப்படையாக மாறி ஆயுதங்களோடு கொக்கரிக்கிறது. இவ்வாறு இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களிலெல்லாம் ஆயுதங்களோடு பொறுக்கித்தனம் செய்து வரும் இக்கும்பல், நமது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

மகஇக, மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதுவும் ஆயுதங்களோடு களத்தில் இல்லை. நாங்களும் மக்கள் மத்தியில்தான் இயங்கிவருகிறோம் என்பதை பல்லாயிரம் முறை தெளிவாக நாம் சொல்லியாகிவிட்டது. ஆனால், இன்று வரை நமது தோழமை அமைப்புகளை 'ஆயுதமேந்திய நக்சல் பயங்கரவாதிகள்' என்று அவதூறு செய்வதை அவர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இணையத்திலும் இதற்கெதிரான விவாதங்களை நமது தோழர்கள் விரிவாக நடத்தியிருக்கின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்வதனால் அது உண்மையாக மாறிவிடாதா என்று முயன்று கொண்டிருக்கின்றார்கள் போலிகள்.

இப்போது தமிழகத்திலும் இவர்கள் ஆயுதமேந்திச் சுற்றத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இங்கே உயர்த்திப் பிடித்திருக்கும் ஆயுதம் யாருக்கு எதிராக என்றால்; நமக்கு எதிராகத்தான். விழுப்புரம் அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட அரசியல் மோதலில் எமது தோழர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்ற சிபிஎம் ரவுடிக் கும்பல், சென்றவாரம் ஒரு பொதுக்கூட்டத்திலேயே எமது தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு "வெட்டி வீசுவோம்" என்று கொக்கரித்திருக்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.

எமது தோழர்களோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக சிபிஎம் கட்சியின் இதுபோன்ற வெற்று சவடால்கள் விடுவது ஒன்றும் புதிதல்ல. எனவே, எமது தோழர்களும் சற்று கவனக் குறைவாக தத்தமது பணிகளில் இருந்துவிட்டனர். இதனையறிந்து கொண்ட இந்த போலிகம்யூனிச பாசிசக் கும்பல், முறையாகத் திட்டமிட்டு, நேற்று இரவு எமது தோழர்களின் மீது கொலைவெறி ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னனி (வி.வி.மு) ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட பேடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??


(குறிப்பு: இக்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் குண்டர்களில் சிலர் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். முழுமையான தகவல் கிடைக்கப் பெற்றதும் இப்பதிவின் தொடர்ச்சியினை வெளியிடுவோம்.)