Wednesday, April 16, 2008

இணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க நோட்டீஸ்.......


இணையக் கோமாளி சி.பி.எம். சந்திப்புக்கு ஒரு பகிரங்க நோட்டீஸ்.......



இதுவரை ம.க.இ.க. காட்டிலிருந்து வேலைசெய்வதாகவும், மக்களோடு அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை என்பதாகவும் பேசிவந்த சி.பி.எம்.மின் இணைய வடிவமான கோமாளி சந்திப்பு, அந்த புளுகு மூட்டைகள் எமது புரட்சிகர செயல்பாடுகளினால் மக்கள் மத்தியிலும் வலையுலகிலும் அடித்து துவைக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன.

இப்போது அதே அழுகி நாறிய பிற்போக்கு வாதங்களை வேறொருவடிவத்தில், மெருகேற்றிக் கொண்டு கொள்கை முழக்கமிட இங்கே வந்து பல்லிலிக்கிறார் இந்த சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள். கொள்கைகளையும் சித்தாந்த விசயங்களையும் விவாதிக்கத் திராணியற்று பலமுறை எம்மிடம் தோற்று விலகி ஓடி ஒளிந்துகொண்ட இந்த விவாதப் புலி, எமது தோழர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் இன்று வரை பதிலலிக்காமல் அம்மனமாக நின்று கொண்டிருக்கிற இந்த கிணற்றுத் தவளை, சிறிதும் வெட்கமின்றி யோக்கிய வேடம் பூண்டு இப்போது மறுபடியும் வந்திருக்கிறது.

இப்போது எம்முடைய வேண்டுகோளெலாம் என்னவென்றால், வழக்கம்போலல்லாமல் இந்த முறையாவது யோக்கியமாக வாதிடவேண்டுமென்று சந்திப்பு அவர்களை சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்வதுதான். எமது அடுத்தடுத்த சிறப்புப் பதிவுகள் இவ்விவாதங்களின் தொடர்ச்சியாக இங்கே வலையுலகில் மீண்டும் வலம் வரவிருக்கின்றன. அனைத்தும் சந்திப்புக்காவவும் அவர் சார்ந்திருக்கிற பாசிச போலி கம்யூனிஸ்டு கட்சிக்காகவும்தான் என்பதை இங்கே தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன்.
இதன் துவக்கமாக தமிழரங்கம் வலைதளம் வெளியிட்டிருந்த ஒரு சிறிய பதிவை இங்கே பதிப்பித்திருக்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

//////ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.

1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.
2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும் இழிதனத்தைக் கொண்டவர்கள்.
3. சாதியை பிறப்பில் வைத்தே சூதாடும் பார்ப்பனியத்துக்கு பாய் விரிப்பவர்கள்.
4. நிறம் குறித்த ஓடுக்குமுறையை செய்யும் ஓட்டுண்ணிகள்.
5. விபச்சாரியின் குழந்தையை பிறப்பு சார்ந்து விபச்சாரம் செய்ய தூண்டும் பொறுக்கிகளின் அற்பத்தனத்தை செய்பவர்கள்.

இப்படி அநேக ஒடுக்குமுறையை பிறப்பால் அடையாளப்படுத்தி, செழிப்பவர்கள் இவர்கள். மக்களின் அப்பட்டமான விரோதிகள் இவர்கள்.

இப்படி மக்களைப் பிளந்து, அவர்களை குழிதோண்டி புதைக்க வெளிக்கிடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். ஒரு விவாதத்தில் அப்படியும் இப்படியுமாக புணர்ந்து, அவர்களே அறியாது பாசிசத்தை புலம்புபவர்கள். இப்படி பிறப்பு குறித்து ம.க.இ.க. வை தமது சொந்த முகாந்திரத்துடன் புணர முனைகின்றனர். இப்படிக் காட்டுகின்ற பாசிச வன்மம் எனன்வென்றால், அவர்களின் போராட்டத்தைக் கண்டு அஞ்சும், மக்களை ஓடுக்குகின்ற வர்க்க பிரதிநிதிகளின் நடத்தையாக வெளிப்படுகின்றது.

இவர்கள் ம.க.இ.க வின் கொள்கையை விவாதிக்க முடியாதவர்கள். அதில் உள்ள தனிநபர்களின் பிறப்பு குறித்து புலம்புகின்றனர். இதுவும் ஒரு அரசியலோ.

பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகள், மனித இனத்தில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை.

1. ஆண் பெண் பாகுபாடு பார்ப்பதில்லை.
2. சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை.
3. நிறப் பாகுபாடு பார்ப்பதில்லை.
4. இனப் பாகுபாடு பார்ப்பதில்லை.
5. மதப் பாகுபாடு பார்ப்பதில்லை.

இப்படி எந்தப் பாகுபாடும் மனிதர்களுக்கு இடையில் பார்ப்பதில்லை. இதனால் தான் இது சர்வதேசியமாக இருக்கின்றது. உலகெங்கும் அதனிடம் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. மக்கள் நலன் சார்ந்த கொள்கையுடன், மனிதர்களை அணுகுகின்றது. அது பிறப்பில் பார்ப்பானையும், பிறப்பில் முதலாளியையும், பிறப்பில் சக்கிலியனையும், பிறப்பில் பெண்ணையும், பிறப்பில் எதுவாக இருந்தாலும், மனிதர்களுக்கு இடையில் வேறுபாடு காட்டுவதில்லை. அது கொள்கை ரீதியாக மட்டும் தன்னை ஒழுங்கமைக்கின்றது. அதாவது மனிதத் தன்மையை மட்டும் அளவுகோலாக கொள்கின்றது. வேறுபாடு காட்டாத மனிதத்தன்மையை மட்டும் அது கோருகின்றது. வேறுபாடு காட்டும் அனைத்து ஒடுக்குமுறையையும் அது எதிர்க்கின்றது. நீ யார்? நான் யார் என்று பிறப்பில் அது பிரிவனை காட்டுவது கிடையாது.

இதற்கு மாறாக உண்மையில் பிறப்பு குறித்து அணுகுகின்ற கோட்பாடு பார்ப்பனியமாக இருக்கின்றது. அதாவது சாதியக் கோட்பாடாக உள்ளது. ம.க.இ.க வில் உள்ள நபரின் பிறப்பு குறித்து ஆராய்வதே கடைந்தெடுத்த பார்ப்பனியம் தான். அதை காவடியாக தூக்கும் மனித விரோதிகளையே இது அம்பலமாக்குகின்றது.

இப்படி பிறப்பில் இருந்து ஆராய்கின்ற மனிதம் எப்படிப்பட்டது என்றால், உள்ளடக்க ரீதியாக பாசிசமே. ஜெர்மனிய நாசிகளின் பிறப்பு குறித்த ஆரியக் கோட்பாடு, யூதர்களின் பிறப்பு குறித்த அடையாளம் ஊடாகவே கொன்றது. இந்தியாவில் அதுவே பார்ப்பனியமாகி சாதியமாக உள்ளது. இதை தூக்கும் தமிழினவாதிகள் பிறப்பில் இருந்து காண்பது மனிதவிரோதமேயன்றி அது வேறு எதுவுமல்ல. இதுவே இலங்கையில் புலிப் பாசிசப் படுகொலையாக நடக்கின்றது. மனிதத் தன்மையற்ற கண்ணோட்டம் இதன் மூலவேராக உள்ளது.

பி.இரயாகரன்13.07.2007Friday, 13 July 2007 22:08
மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு தமிழரங்கம் இணையத்தளம் செல்க////////

2 comments:

Anonymous said...

பார்ப்பனீயத்துக்கு சாவு மணி அடிப்பீங்கன்னு பார்த்தா ,ஒருத்தனுக்கு ஒருத்தன் இப்படி அடிச்சிக்கிறீங்களே

said...

இதுவும் பார்ப்பனியத்துக்கு சாவுமணியடிக்கும் செயல்தான் அனானி நண்பரே!

வேத, புராணங்களை வியந்தோதி மார்க்சிய ததுவத்துடன் புணைந்து எழுதிய சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு இன்றைய சோம்நாத் அய்யர் வரை இவர்களது பார்ப்பன சேவையும், அவர்களுக்கு அடிவருடிவேலை செய்து பிழைத்துவரும் சந்திப்பு என்கிற ஒரு ஈனப்பிறவிக்கும் எதிரான எமது கருத்துக்கள் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையே.