Sunday, June 15, 2008

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்
























'கெடக்கெறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மடியில வச்சிக்க'ன்னு ஒரு பேச்சு உண்டு நம்மூர்களில.

இப்ப பெட்ரோலியப் பொருட்கள் முதல் உணவுதானியங்கள் வரை விலையேற்றம். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல கோடி மக்களை, அந்த ஒருவேளைச் சோற்றையும் மறுத்து நெறிக்கிறது இந்த உலகமயமும் அதன் பழைய ப்ராடக்ட்டான விலைவாசி உயர்வும். சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை இப்படி சீரழிந்து நிற்கிறது.

ஆனால், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள் முதலான அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் "நாங்க வந்தாத் திருந்திடும்"ன்னு தெருவுக்குத் தெரு கொடியப் புடிச்சிக்கிட்டு கூவிக்கிட்டு நிற்கிறார்கள்.

விலை வாசி உயர்வு பற்றி மற்ற கட்சிக்காரன் பேசுவதெல்லாம் கெடக்கட்டும். நம்ம காமரேடு கம்பெனி இருக்குதே, அதான் நம்ம சிபிஎம் இருக்குதே அவியளக் கேட்டா என்ன சொல்றாங்க தெரியுமா? "இடது சாரிகளின் அறிவுரைகளை மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ம்க்ம், இவனுகளப் பத்தி எழுதினா பதில் சொல்ல ஒருத்தனும் வரப் போவதில்ல. இவனுக நம்மளப்பத்தி எழுதினா, நம்மள பதில் சொல்ல அனுமதிக்கறதில்ல. இப்படிப்பட்ட 'ஜனநாயக'த்த தனக்குள் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுதிக் கிழித்தது போதும் என்றுதான் இருந்தேன். ஆனா திரும்புற பக்கமெல்லாம் இவனுக ஓலம் தான் பெரும் ஓலமா இருக்குது. தொலைக்காட்சியைத் தொறந்தா டி.ராஜாவும் யெச்சூரி அய்யாவும் கொந்தளிக்கிறாங்க.

விலைவாசி உயர்வப் பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு கவனிச்சாத்தான் தெரியுது மேற்சொன்ன காம்ரேடுகளின் வசனத்த அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க இந்த மாபெரும்!!! கம்யூனிச!!!த் தலைவர்கள்.

இது என்னாடா இது ஐபிஎல் சூதாட்டத்த விட கேவலமா இருக்குதேன்னு தோனுச்சி. அந்தக் கோவத்துலேயே இணையத்துல வந்து அமர்ந்தேன். தோழர் ஸ்பார்ட்டகஸ் அவர்கள் சில அறிவிப்புகளை போஸ்டருடன் வெளியிட்டிருந்தார். அதுதான் மேற்கண்ட இரண்டு போஸ்டர்களும்.

இதனைக் குறித்துக் கொண்டு நண்பர்கள் அனைவரும் அவரவர் பகுதிக்கு அருகில் நடக்கவிருக்கும் தெருமுனைக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

ஏகலைவன்.




5 comments:

Anonymous said...

ஏகலைவன் அவர்களின் கவனத்திற்கு:

http://mrcritic.wordpress.com/2008/06/16/%e0%ae%b5%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9f/

இவரை தக்க முறையில் கவனித்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைக்கவும்.

said...

///இது "புது விசை" வாசகர்களுக்கானது. உங்களுக்கு இதை படிப்பது சோதனையாகத்தான் இருக்கும்.////

அப்படியென்ன புதுவிசை வாசகர்கள் என்றால் தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. அவர்களெல்லாம் தில்லை தீட்சிதர்களைப்போல் வானத்திலிருந்து இறக்குமதியானவர்களா மேடம்?

நாங்களெல்லாம் புதுவிசைக் கட்டுரையினைப் படித்தால் அது தீட்டுப்பட்டுவிடுமா?

என்னுடைய குற்றச்சாட்டு, உங்களுடைய நடைமுறைச் செயல்பாடுகளைக் கொண்டு இக்கட்டுரையினைப் படித்தால் ஏற்படும் சோதனையைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

சந்திரமோகனுக்காக இவ்வளவு அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், அதனையடுத்து சுடச்சுட நமக்குக் கிடைத்த தெகல்காவின் புலனாய்வுகள் பற்றி கண்டுகொள்ளாததும், அதனை அடியோடு இருட்டடிப்பு செய்ததும் ஏன்?

தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த விசயத்தை நீங்கள் கட்டுரையாகத் தந்ததாக நீங்கள் பீற்றிக் கொள்வது எல்லாம் கெடக்கட்டும், ஏன் தெகல்கா பற்றி எதையும் பேசவில்லை?

123 நாடகத்தைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பதற்கு முன், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட, தெகல்காவின் புலனாய்வு உடனடியாக விசாரனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று பேசாதது ஏன்?

ஆஷிஷ்கேதான் என்கிற தெகல்காவின் இளம் புலனாய்வுச் செய்தியாளர், தன் உயிரைப் பனயம் வைத்து வெளிக்கொண்டுவந்த, கொலையாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய அனைத்து ஆதாரங்களையும்; இருட்டடிப்பு செய்த காங்கிரசு, பாஜகவோடு கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் கட்சியினரும் அமைதிகாத்தது ஏன்?

குஜராதில் நடந்த அக்கிரமங்களை விட அதற்கான எதிர்விணைகளை மூடிமறைக்கும் இதுமாதிரியான இருட்டடிப்புகள் எவ்வளவு இழிவான, கேடுகெட்ட செயல் என்பது இதைப் படிக்கின்ற அனைவருக்கும் புரியும்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

////சிபிஎம்-மை திட்டுவதை மட்டுமே தொழிலாக கொண்டிராமல் உருப்படியாக ஏதாவது யோசியுங்கள்.////

விமர்சனம் என்றாலே இப்படி விழிபிதுங்கி அழுதுவடிவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்கொள்வது பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பதெல்லாம் நாங்க பாத்துக்கொள்கிறோம். நீங்க ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கைகளான காலச்சுவடு, உயிர்மை போன்ற கழிசடைப் பத்திரிக்கைகளில் வெற்று புகழ்ச்சிக்காகச் சென்று எழுதிக் கொண்டிருங்கள்.

இந்த அற்பத்தனமான பிழைப்புவாதத்தை, "அப்பத்திரிக்கைகளின் வாசகர்களுக்கும் நமது கருத்துக்கள் சென்று சேரத்தான் எழுதிவருகிறோம்" என்று வேறு சப்பைக்கட்டுக்களோடு பதில் சொல்வீர்கள் போலும்.....

said...

ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக....

அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே...

நிஜத்துலக்கூட ஒருத்தனுக்கு மூனு பேரை வெச்சிக்கிட்டு சுத்துறீங்கள்... தமிழ்நாடு முழுக்க எல்லாம் ஒண்ணா சேந்து கும்பமேளா நடத்துறதுதானே உங்க பொழப்பு....

அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....

பாவம்... ம.க.,.க. சரணம்............... இப்படியே கூவிக்குனு இருங்க!

said...

/////விடுதலை said...
ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக..../////

ஏம்பா விஜி த‌.நா.மா.லெ.க‌.ன்னு நீயும் ஒங்க‌ த‌லிவ‌ன் 'புஸ்வான‌ம்' ர‌மேசுபாபுவும் பொல‌ம்பிக்கிட்டே இருக்கீங்க‌ளே!, அப்ப‌டீன்னா என்னாங்க‌ தோல‌ர். ஒருவேளை நீங்க‌ளே அந்த‌ பெய‌ரிலே ஏதாவ‌து க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ப் போறீக‌ளா? சும்மா வெள‌ம்ப‌ர‌த்துக்காக‌ அந்த‌ பெய‌ரைத் திரும்ப‌த்திரும்ப‌ நீங்க‌ளே சொல்லிக்கிறீங்க‌ளா? என்ன‌ எழ‌வுன்னே புரிய‌ல்ல‌. இதெல்லாம் ஒரு பொழ‌ப்பா தோல‌ர்.

நான் சார்ந்திருக்கின்ற‌ அமைப்பின் பெய‌ர் 'ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம் (ம‌.க‌.இ.க‌.)' முடிஞ்சா நினைவில் வைத்துக் கொள்ள‌வும். சும்மா இந்த த‌.நா.மா.லெ.க‌.ன்னு ஒரே ரெக்கார்டையே எத்த‌ன‌ நாளைக்குத்தான் ஓட்டிக்கிட்டு இருப்பீங்க‌.


/////அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே.../////

நீங்க‌ எங்க‌ள‌ப்ப‌த்தி அவ‌தூறு எழுதினா, அதுக்கு நாங்க‌ள் வ‌ந்து ம‌றுமொழியிட்டா முறையா ப‌திப்பிக்காம‌ இருட்ட‌டிப்பு செய்வ‌து; நான் ப‌திவெழுதி விவாதிக்க‌ அழைச்சாக்கா இந்த‌ ப‌க்க‌மே த‌லைவைத்துக்கூட‌ ப‌டுப்ப‌தில்லை. இதுதான் உங்க‌ள‌து விவாத‌ ல‌ட்ச‌ன‌ம். மாறாக‌ மேற்க‌ண்ட‌ உம‌து ப‌தில்க‌ளைப் போன்ற‌ 'த‌த்துவ‌ச் செறிவுள்ள!!!', 'ஆழ்ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை!!!!' எடுத்துக் கொண்டு வ‌ந்துவிடுகிறீர்க‌ள்.

கேள்விக‌ளுக்கு முறையா ப‌தில் சொல்லாம‌ த‌லைதெறிக்க‌ ஓடுற‌ கேவ‌ல‌த்துல‌ இருந்து முத‌ல்ல வெளிய‌ வ‌ந்து ஏதாவ‌து ப‌தில‌ச் சொல்லுங்க‌, சும்மா 'முக‌த்தைக் காட்டுங்க‌'ன்னு அப்ளிக்கேஷ‌ன் போடுற‌த‌ விட்டுட்டு. உங்க‌ளுக்குத்தான் முக‌த்தைக் காட்டிக் கொண்டு அற்ப‌ விள‌ம்ப‌ர‌ம் தேட‌வேண்டிய‌ தேவை இருக்கின்ற‌து. என‌க்கு அத்த‌கைய‌ தேவை எதுவும் இல்லை.

/////அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....//////

இப்ப‌டியான‌ அவ‌தூறெல்லாம் கெட‌க்க‌ட்டும், தில்லைப் போராட்ட‌த்தைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ற்கு உங்க‌ளுக்கு ஏதாவ‌து த‌குதி இருக்குதா முத‌லில்? தேழ‌ர்க‌ள் கைதான‌ பிற‌கு என‌க்கு வெளியில் ஆத‌ர‌வாக‌ யாருமில்லை என்று சிவ‌ன‌டியார் ஆறுமுக‌சாமி த‌ன்னையும் கைது செய்ய‌ச்சொல்லி காவ‌ல்நிலைய‌த்தின் முன் ம‌றிய‌ல் செய்தாரே, அப்போது 'மாபெரும்' க‌ட்சியான‌ உங்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர்கூட‌ அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌ர‌வில்லையே ஏன்?

க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு கைதான‌ எம‌து தோழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பினைவேண்டும் என்று கோரவில்லை முதலில். "'பிணை தாக்க‌ல்'செய்ய‌மாட்டோம், எங்க‌ள் குற்ற‌த்தை நிரூபிக்க‌ முடிந்தால் ந‌ட‌வ‌டிக்கையைத் தொட‌ருங்க‌ள்" என்று வெளிப்ப‌டையாக‌ அறிவித்தார்கள்.

இவ்வ‌ள‌வு போராட்ட‌ க‌ளேப‌ர‌ங்க‌ளும் முடிந்த‌ பிற‌கு, போராட்ட‌த்தில் சிறித‌ள‌வும் ப‌ங்கேற்காமல், "நீங்க‌ள் தீட்சித‌ர்க‌ளை 'பார்ப்ப‌ன‌ர்க‌ள்' என்று விம‌ர்சிப்பீர்க‌ள், அது எங்க‌ளுக்கு ஒத்துவ‌ராது" என்று தொட‌க்க‌த்திலேயே போராட்ட‌க் குழுவிலிருந்து வெளியேறிய‌ கூட்ட‌ம்தான் உங்க‌ள‌து போலிபாசிச‌ கும்ப‌ல். இப்ப‌டி இருக்கையில் "DYFI போராட்ட‌த்துக்குக் கிடைத்த‌ வெற்றி!" என்று சிறிதும் வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ர் ஒட்டி சித‌ம்ப‌ர‌ம் ம‌க்க‌ளால் காறி உமிழ‌ப்ப‌ட்டீர்க‌ள் தோல‌ர்க‌ளே நினைவிலில்லையா?

இதுப‌ற்றி ஒரு த‌னிப்ப‌திவே நான் ப‌திப்பித்திருக்கிறேன். அதில் விவாதிக்க‌ அழைத்து ச‌ந்திப்புக்கும் ர‌மேசுபாபுவுக்கும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் அவ‌ர‌வ‌ர் த‌ள‌ங்க‌ளில் சென்று அழைப்பு விடுத்திருந்தேன். நீங்க‌ள் அங்கேயே வ‌ந்து விவாதித்திருக்க‌லாமே தோல‌ரே! உங்க‌ளைத்த‌டுத்த‌து யார்?


ஏக‌லைவ‌ன்.