Sunday, January 18, 2009

பாசிச ஹிட்லரின் கோயபல்ஸும்.... சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாளும்......

பாசிச ஹிட்லரின் அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறையில் கம்யூனிச எதிர்ப்பையும் சோஷலிச ரஷ்யா குறித்த அவதூறுகளையும் பரப்பிவிடுவதற்காக கோயபல்ஸ் என்பவனை நியமித்தான் ஹிட்லர். கோயபல்சும் ஹிட்லரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொண்டு, தனது பொய்களையும் புரட்டுக்களையும் கடைவிரித்துவந்தான். கம்யூனிச ஆசான்களான தோழர்கள் லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் மீது கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தி முதலாளித்துவ சேவையாற்றியதில் டிராட்ஸ்கி போன்றவர்கள் போல கோயபல்சுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. பொய்கள், புரட்டுக்கள் என்றாலே கோயபல்ஸ்தான் என்பது வரலாறு.

அதேபோன்று....
பாசிச பொறுக்கிக் கும்பலாகச் சீரழிந்த போலி கம்யூனிச கம்பேனியான சிபிஎம், தம்மை நோக்கி வருகின்ற அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்க கையாலாகாத நிலையில், இணையத்தில் தமது புரட்டுக்களைப் பதிவதற்கு ஒரு கோயபல்சை சம்பளத்திற்கு நியமித்து, தமது மாநில தலைமை அலுவலமான சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெருவிலுள்ள (பஜக அலுவலகத்திற்கு அடுத்த கட்டிடத்தில்...) நிரந்தரமாக இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த நவீன கோயபல்ஸின் பெயர் செல்வப் பெருமாள். அவர் தமது அவதூறுகளைப் பதிந்துவரும் தளம் சந்திப்பு.

பொதுவாக கோமாளித்தனமாகவும் தமது கட்சிக்காரர்களே காறி உமிழும் வண்ணமும் எதையாவது பிதற்றலாக எழுதிவரும் அந்த மாபெரும் ‘ஞாநி’ செல்வப்பெருமாள், மகஇகவை விமர்சித்து எழுதுவதற்கு என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அது, மாதக் கடைசியில் (ஒழுங்காச் சம்பளம் கிடைக்க வேண்டாமா??)”பார்ப்பனத் தலைமை...”, “தொடைநடுங்கி நக்சலிசம்...”, “மறைமுகத் தலைமை....” என்கிற தலைப்பில் நாற்பது வருடங்களாக தமது கட்சியின் முந்தைய கோயபல்ஸுகள் கழிந்துவைத்தவற்றை அப்படியே உல்டா செய்து பதிவது வழக்கம்.

அப்படி எந்த விதமான அலைக்கழிப்புமில்லாமல் ஒழுங்காக சம்பளம் கிடைத்துவிட்டால், வேறு எதையாவது (சுஜாதா... ஜெயமோகன்...பற்றி) எழுத ஆரம்பித்துவிடுவார். சம்பளம் கிடைக்க வில்லையென்றால் பாவம், மீண்டும் மகஇகவைப் பற்றி எழுதி தமது ஆண்டைகளுக்கு நினைவுபடுத்தியாக வேண்டிய நிலைமை வேறு. அவருக்காக நாம் பரிதாப்படலாம்.

புரட்சிகர அரசியலுக்குத் தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த விதமான சமரசமுமின்றி விமர்சித்து அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்கிருப்பதைப் போல செல்வப் பெருமாளுக்கு எந்த விதமான சமூக நோக்கும் அரசியல் அடிப்படையும் தேவைப்படுவதில்லை.மாறாக தமது கட்சிக்கேயுரிய இழிவான அறிவு நாணயத்தோடு தமது சுய தேவைக்காக இயங்கிவருகிறார். அவரது கட்சியின் தலைமைக்கும் அதே நிலைதான். தமது மானத்தை மறைக்கின்ற சிறிய கோவனமாகவாவது செல்வப் பெருமாள் பயன்படுவாரா என்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

எதிரிகளையும் துரோகிகளையும் விமர்சிப்பதனைக் காட்டிலும் எமது அமைப்பின் மீது பதியப்படுகின்ற விமர்சனங்களுக்கு நோர்மையாக பதிலளிப்பதையே முக்கியக் கடமையாக நினைத்து இயங்கி வருகிறார்கள் எமது தோழர்கள். இதே கோயபல்ஸ் செல்வப்பெருமாள் பதிகின்ற பதிவுகளை அவதூறுகள் என்று நிறுவும் வண்ணம் அரசியல் ரீதியிலான எதிர்விணைகளை எமது தோழர்கள் பதிந்து வருகிறார்கள். அவற்றை நேர்மையாகப் பதிப்பித்துவிடாமல் இருட்டடிப்பு செய்துகொண்டு, தமது கோயபல்ஸ் வாதங்களையே மீண்டும் மீண்டும் பதிந்துவருகிறார் செல்வப்பெருமாள். தாம் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு சொல்ல வாய்ப்பளிக்காமல் மிகவும் ‘கவனமாக’ இருட்டடிப்பு செய்து பிழைத்துவரும் இவரை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை தோழர்களே.

மகஇக நடத்திவருகின்ற தமிழ் மக்கள் இசைவிழாவை, கும்பமேளா என்றும் பஜனைக் கச்சேரி என்றும் வசைபாடிவரும் இந்த கோயபல்ஸுக்கு உரைக்கும் விதமாக தோழர் அருள் எழிலன் பதிவு ஒன்றை நான் இங்கே பதிகிறேன். இது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் எழுதியது. தோழர் கோபா அவர்களின் கரும்பலகை வலைதளத்திலிருந்து.....

ம.க.இ.க கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சி

விடுதலைப் பாட்டு...

இது விடியல் பாட்டு !

"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."
- காட்டுச் சுனையாக, புரட்சிக் கனலாகப் பொங்கிப் பரவுகிறது.
அந்தக் கலகக்காரன் குரல் !













Related article:
1) தமிழ் மக்கள் இசை விழா - பதினான்காம் ஆண்டு

2 comments:

Anonymous said...

அன்பார்ந்த தோழருக்கு

சி.பி.எம் கட்சியில் ஏதோ ஒரு வகையில் வர்க்க உணர்வு கொண்டிருக்கும் ஓரிரு தோழர்களாவது உங்கள் கட்டுரைகளைப் பார்த்து வெளியேறி புரட்சிகர அமைப்புக்களில் சேரட்டும். வாழ்த்துக்கள்

வினவு

Anonymous said...

ம.க.இ.க.வுக்கு எதிராக பேசினால் கோயபல்ஸ் என்று முத்திரை குத்தும் நீங்கள். ஓயாமல் சி.பி.எம்.க்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரம் செய்வதை என்னவென்று சொல்லலாம்? சி.ஐ.ஏ. ஏஜன்ட் வேலை என்று எடுத்துக் கொள்ளலாமா?