tag:blogger.com,1999:blog-6469981259119709842.post347442641342899308..comments2023-10-26T17:22:27.157+05:30Comments on "ஏகலைவன்": தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!ஏகலைவன்http://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6469981259119709842.post-70242738566274770052010-04-19T09:52:03.462+05:302010-04-19T09:52:03.462+05:30நண்பர் மாதவராஜ் அவர்களே!
ஒருவழியாக நான் எதிர்பார்...நண்பர் மாதவராஜ் அவர்களே!<br /><br />ஒருவழியாக நான் எதிர்பார்த்த இடத்திற்கு நீங்கள் வந்து சேர்ந்தமைக்கு நன்றி!<br /><br />////எதை எழுதினாலும், எதைப் பேசினாலும் தொடர்ந்து இடதுசாரிக் கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சியோடு சொன்னதையே சொல்லிக்கொண்டு பின்னூட்டமிடுகிறார். //////<br /><br />உங்கள் வலைப்பக்கத்தில் “இது இடதுசாரிகளை விமர்சிப்பதற்கான தளம் அல்ல, பாராட்டுபவர்களுக்கு மட்டுமே இங்கு விவாதிக்க அனுமதியளிக்கப்படும்” என்று என்போன்ற அறிவீலிகளுக்கு உரைப்பது போல் அறிவித்திருக்கலாம், ஐயா!<br /><br />லீனா குறித்த உமது முந்தைய பதிவில் நீங்கள் ஏதோ நேர்மையாகவே அனைத்தையும் பரிசீலிப்பவர் என்று தோன்றும் அளவுக்கு எழுதியிருந்தீர்கள். அதனால் எனது நேரத்தை விரயமாக்கி சில கருத்துக்களைப் பதிந்தேன். ஆனால் இத்தகைய பரிதாபமான நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. <br /><br />எனது பின்னூட்டத்தை மற்றவர்கள் படித்து அதன் உண்மைகளைத் தெரிந்து கொண்டுவிடக்கூடாது என்கிற துடிப்போடுதான் நீங்கள் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.<br /><br />அஹோரி said... <br />//“ஏழைகளுக்கு தொண்டாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே”//<br /><br />அநாகரிகமாக இருந்தாலும் இதுதான் உண்மை, இதை படித்தவுடம் , வாயை தவிர மற்ற ஒரு உறுப்பும் சிரிக்கிறது. ஆனால் இதுக்கெல்லாம் அவர்கள் வெக்கபடவே மாட்டார்கள்.<br /><br />April 18, 2010 11:00 AM<br /><br />இதுபோன்ற ‘தத்துவச் செறிவுள்ள’ பின்னூட்டங்களை நீங்கள் உவந்து பதியும் போது, எனது கருத்துக்களைப் புறந்தள்ளாமல் என்ன செய்வீர்கள். பதிலளிக்க முடியாத கேள்விகள் கேட்கப்பட்டால் அக்கேள்வியில் உள்ள வார்த்தைகளின் தரம் குறித்து அங்கலாய்க்க கிளம்பிவிடுவீர்கள். மேற்குறிப்பிட்டுள்ள நண்பரின் பின்னூட்டத்தில் உள்ள வரிகள் எல்லாம் பொண்ணெழுத்தில் பொறிக்க வேண்டியவை போலும்!<br /><br />பரவாயில்லை யாருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நீங்கள் மறைக்கிறீர்களோ அவர்கள் மத்தியிலேயே நீங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுவீர்கள். <br /><br />தொடர்ந்து சந்திப்போம்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-39935460558920538552010-04-18T22:37:48.994+05:302010-04-18T22:37:48.994+05:30நண்பர் மாதவராஜ் அவர்களுக்கு!
நான் எதிர்பார்த்ததைப...நண்பர் மாதவராஜ் அவர்களுக்கு!<br /><br />நான் எதிர்பார்த்ததைப் போன்று நீங்கள் எனது பின்னூட்டங்களை சந்தடியில்லாமல் இருட்டடிப்பு செய்துள்ளீர்கள்.<br /><br />அதில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இலக்கியத் தரம் இல்லாமல் இருக்கலாம், உண்மைகள் சுடுவதனால்தான் அவற்றை பதிப்பிக்காமல் கமுக்கமாக வைத்துக்கொண்டீர்களா? <br /><br />அவற்றைப் பதிப்பிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவற்றுக்கான உங்களது பதில் என்று ஒற்றை வரியில் எதையாவது சொல்லியிருக்கலாம், ஐயா!<br /><br />பதில் சொல்லத் திராணியற்ற நிலையை உங்களுக்கு ஏற்படுத்தியது எது? பொதுத்தளத்தில் விவாதிக்க முடியாத அளவுக்கு தரம் தாழ்ந்த அரசியல் நடைமுறைக்கு நீங்கள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும் இறுதியில் இதுதான் முடிவாக இருக்கும். அதாவது, சந்தடியில்லாமல் எதிர்க்கேள்விகளை ஆழக்குழிதோண்டி புதைத்துவிட்டு, அதன்மேல் நின்று வழக்கம்போல ‘புரட்சி’ பேசலாம் போலும்!<br /><br />இப்பின்னூட்டம் உள்ளிட்ட நான் உமக்கு அனுப்பிய அனைத்து பின்னூட்டங்களின் சுட்டியினைக் கீழே பதிகிறேன்; இங்கு மட்டுமல்ல இந்த இழைகளில் பின்னூட்டமிட்டுள்ள அனைத்து நண்பர்களின் பக்கங்களிலும் சென்று பதிவிடுகிறேன். எனது கேள்வியின் நியாயத்தை அவர்களே புரிந்து கொள்ளட்டும். <br /><br />மன்னிக்கவேண்டும் ஐயா, இது நானாக ஏற்படுத்திக் கொண்ட நிலைப்பாடு அல்ல, நீங்கள் எனது கருத்துக்களை மூடிமறைத்ததன் மூலமாக, இந்நிலைக்கு என்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருக்கிறீர்கள்.<br /><br />குறிப்பு: சிபிஎம் கட்சியின் சூரர்கள் பொதுத்தளத்தில் விவாதிக்க வரமாட்டார்கள் என்பதை உணர்ந்துதான் மாதவராஜுக்கு நான் அனுப்பிய பின்னூட்டங்களை எனது கீழ்கண்ட சுட்டியில் பதிப்பித்திருந்தேன். நண்பர்கள் அச்சுட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கருத்துக்கள் குறித்து தத்தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தோழமையுடன் வேண்டுகிறேன்.<br /><br />தோழமையுடன்,<br />ஏகலைவன்.<br />yekalaivan@gmail.com<br /><br />https://www.blogger.com/comment.g?blogID=6469981259119709842&postID=347442641342899308ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-16155972079314289682010-04-18T17:40:36.178+05:302010-04-18T17:40:36.178+05:30கருணாநிதி விமர்சிக்கப்படுவது சரியானதுதான். ஈழத்துர...கருணாநிதி விமர்சிக்கப்படுவது சரியானதுதான். ஈழத்துரோகம், தொழிலாளர் வர்க்கத்துக்கு அவர் பச்சையாக இழைத்து வரும் துரோகம், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராக அவர் நடத்திவரும் மோசடிகள் குறித்தெல்லாம், இதனினும் கடுமையாகக் கூட அவரை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் ஜெயாமாமியின் மனத்தைக் குளிர்விக்க ‘காம்ரேடு’கள் நடத்தும் அரசியல் நாடக வசனங்களை நேர்மையான எதிர்ப்பாகக் கருதி கோரஸ் குரல் கொடுக்க நம்மால் முடியாது.<br /><br />எந்த ஒரு ஓட்டுக் கட்சியையும் தனியாகக் கட்டம் கட்டி விமர்சிப்பது தேர்தல் ஸ்டண்ட் மட்டும்தான். கருணாநிதியை ஜெயாமாமி விமர்சிப்பதும், ஜெயாமாமியை ராமதாஸ் விமர்சிப்பதும், நேரத்திற்குத் தகுந்தமாதிரி இடத்திற்குத் தகுந்தமாதி, கூட்டணிக்குத் தகுந்தமாதிரி இலாவகமாகப் பேசும் வைகோ மற்றும் அக்மார்க் கம்யூனிஸ்டுகளான சிபிஎம் / சிபிஐ என்று ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்வதற்கு எந்த எல்லையுமில்லை.<br /><br />மக்களின் பிரச்சினைகளுக்கும் இவர்கள் நடத்திக் கொள்ளும் குழாயடி மோதல்களுக்கும் எள்முணையளவும் சப்பந்தம் கிடையாது. எச்சில் இலைகளின் மீது கடித்துக் குதறிக்கொள்ளும் தெருநாய்களின் சண்டைக்கும் நமக்கும் எத்தனை சம்பந்தம் உண்டோ அதைவிடக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்த மோதல்கள்தான் இவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்வது.<br /><br />திருவண்ணாமலையை அடுத்த செங்கம் என்கிற ஊரில் உள்ள வேடியப்பர் மலையில் பொதிந்திருக்கும் சுமார் என்பது இலட்சம் டன் இரும்புத்தாதுவை ஜிண்டாலுக்கு சந்தடியில்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டபோது இந்தத் தெருநாய்கள் மூச்சுகூட விட்டதுகிடையாது. “கருணாநிதி நம்ம நாட்டு வளங்களை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தது மோசடி” என்றோ “அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்றோ யோக்கியமாக அறிக்கை விடுவதற்கு சி.பி.எம்.கட்சியால் முடியுமா!<br /><br />அதே ஜிண்டாலுக்குத்தானே லால்காரின் 5000த்திற்கும் மேற்பட்ட விளைநிலைங்களை நம்ம ’காம்ரேடு’கள் ’தொழில் வளர்ச்சிக்காக’ தாரை வார்த்திருக்கிறார்கள். “நீங்கள் விற்றால் தொழில்வளர்ச்சி, நான் விற்றால் தாரை வார்ப்பதா...” என்று சுவற்றிலடித்த பந்து போல கருணாநிதியிடமிருந்து கேள்விகள் வருமல்லவா?!<br /><br />நண்பர் மாதவராஜ் கோபித்துக்கொள்ளக்கூடாது. சிபிஎம் கட்சியிலிருந்தாலும் சில அடிப்படையான நேர்மை உங்களுக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். எனவேதான் இதனை இங்குப் பதிவிடுகிறேன். மற்றபடி பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று இப்பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்துவிடாதீர்கள், ஐயா!<br /><br />தோழமையுடன்,<br />ஏகலைவன்<br />http://yekalaivan.blogspot.comஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-1242259885275073802010-04-18T17:40:09.339+05:302010-04-18T17:40:09.339+05:30நண்பர்களே!
ஏழை என்றால் ஹூண்டாய், ஃபோர்டு, நோக்கிய...நண்பர்களே!<br /><br /><b>ஏழை என்றால்</b> ஹூண்டாய், ஃபோர்டு, நோக்கியா, இன்னும் பல சிறப்புப் பொருளாதார மண்டல முதலாளிகள், அப்புறம் நம்ம கலைஞரும் அவருடைய ஃபேமிலியும் கூட பரம ஏழைகள்தான். <br /><br /><b>தொண்டு என்றால்</b> மேற்கண்ட ஏழைகள் சமூகத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக வேறு வழியின்றி ஆலைகள் தொடங்கியிருக்கிறார்கள் அல்லவா, அவ்வாலைகளை முட்டுக்கொடுத்து உயர்த்திபிடிப்பதற்காக நமது மத்திய-மாநில அரசுகள் வழங்கும் i. தடையற்ற இலவச மின்சாரம், ii.ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு வரிச்சலுகை, iii.பத்துமணி நேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறுமணி நேரமென்று தமது சுய இலாபத்திற்காக ‘கோடீசுவர’ தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிக் கொள்வதற்கு சட்டரீதியான பாதுகாப்பு, iv.தாம் திவாலானதாகக் கதையளந்துவிட்டு நமது நாட்டைத் திவாலாக்கிவிட்டு செல்லும்போது (மகாராஷ்டிராவில் என்றான் நிறுவனம் திவாலாக்கியது போல) நீதிமன்றங்களில் ப.சிதம்பரம் போன்ற வக்கீல்களின் மூலமாக வழங்கப்படும் நீதிச்சலுகைகள் என்று நமது பெருமதிப்பிற்குரிய (சிபிஎம் உள்ளிட்ட) மத்திய-மாநில அரசுகள், அந்த மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஏழைகளுக்கு ஆற்றிவரும் தொண்டு சொல்லி மாளாதது.<br /><br /><b>இயக்கம் என்பது</b> தேசவிடுதலை பெற்றுத்தந்ததாகவும் இந்திய ‘சுதந்திர’த்திற்கு ஏகபோக அத்தாரிட்டியாக அறிவித்துக் கொண்டிருக்கும் கட்சியுமான காங்கிரசு, இந்துக்களின் நலன்களைக் கட்டிக்காப்பதற்காக அரசியலுக்கு வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து, அங்கே வாய்திறப்பதற்கே தொகுதி மக்களிடம் காசு வாங்கிய யோக்கிய சிகாமணிகள் அடங்கிய பா.ஜ.க., கம்யூனிசத்தின் பெயரால் கட்சி நடத்திக்கொண்டு, உலகத் தொழிலாளத் தோழர்களின் உதிரத்தால் சிவந்த செங்கொடியை முதலாளிகளின் பாதணிகளுக்குக் கீழ் விரித்து ‘தொழில் வளர்க்க’ப் பாடுபடும் போலிகம்யூனிஸ்டு கட்சிகள். <br /><br />இப்படியே மேம்போக்காக சில வேற்றுமைகளை வைத்துக் கொண்டு, அடிப்படையில் இந்த சுரண்டல்வாத சமூகத்தைக் காத்து நிற்பதில் ஒத்தகருத்துடன் செயல்படும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும்தான் <b>இயக்கம்</b> என்று வரையறுக்கப்படுகிறது போலும்!ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-54535271373790643302010-04-18T12:01:12.168+05:302010-04-18T12:01:12.168+05:30///////மாதவராஜ் said...
நண்பர் ஏகலைவன்!
லீனா மணி...///////மாதவராஜ் said... <br />நண்பர் ஏகலைவன்!<br /><br />லீனா மணிமேகலை கவிதை குறித்த உரையாடலிலிருந்து, இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்கிறீர்கள்./////<br /><br />நீங்களும் லீனா விவகாரத்திலிருந்து சற்று விலகி, போலி கம்யூனிஸ்டு என்று குறிப்பிடுவதற்கு எதிராகச் சில கருத்துக்களை நீங்கள் பதிந்தமையால்தான் இவற்றை நான் குறிப்பிட்டு எழுத நேர்ந்தது.<br /><br />சரோஜாதேவி புத்தகத்தின் தரத்திற்கும் கீழான தரத்தோடு, படுக்கையறைக் காட்சிகளை வார்த்தைகளாக்கி, அவ்வார்த்தைகளுக்குள் கம்யூனிசத்தையும் கம்யூனிச ஆசான்களையும் செருகிக் கொச்சைப்படுத்தி ‘கவிதை’ வெளியிட்ட லீனாவுக்கு எதிராக வினையாற்றினார்கள் எமது தோழர்கள். <br /><br />உலகை விடியலுக்குள் அழைத்துச் செல்லக்கூடிய ஒரே தத்துவம் கம்யூனிசம்தான் என்கிற தெளிவான கொள்கை உறுதியோடு போராடிவருகிற எமக்கு அக்கவிதை ஏற்படுத்திய கோபம் ஏனைய அக்மார்க் ‘கம்யூனிஸ்டு’களுக்கு ஏற்படாமல் போனதற்கு நாங்கள் என்ன செய்ய?<br /><br />லீனாவைத் திட்டுவதற்குப் பதிலாக எமது அமைப்பை எதிர்ப்பதற்கான சரியான வாய்ப்பாகக் கருதி, ’போர்தந்திரம்’ வகுத்து அறிக்கை விட்ட தமிழ்ச்செல்வன் தான், ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற ஒரிஜினல் ‘கம்யூனிஸ்டு’. அவ்வறிக்கையையும், அந்த மாபெரும் கண்டனக் கூட்டத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்ட தீக்கதிர்தான் தமிழின் ஒரே ‘புரட்சிகர ஏடு’. <br /><br />இவற்றை உங்களிடம் சொல்வது பொருத்தமானதல்லதான். ஏனெனில், தமுஎகசவின் இந்நிலைப்பாட்டையும் லீனாவையும் கேள்விக்குட்படுத்தி இப்பதிவை நேர்மையாக எழுதிய உங்களைப் பார்த்து நான் கேட்கக் கூடாத கேள்விதான் இது. <br /><br />இருப்பினும், சி.பிஎம்.ஐ கம்யூனிச போலிகள் என்று சுட்டிக் காட்டுவதற்கு மே.வங்கத்தை விட்டால் எமக்கு வேறு வழியில்லை என்பது போலவும், மே.வங்கத்தைத் தவிர இதர மாநிலங்களில் அக்கட்சியின் செயல்பாடு வெகுவாக பாராட்டப்பபடுகிறது என்பது போலவும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள். <br /><br />சி.பிஎம்.ஐ போலிகள் என்று அடையாளப்படுத்துவதற்கு மே.வங்கத்திற்கெல்லாம் போகத்தேவையில்லை. அதற்காக வரலாற்றையெல்லாம் புரட்டத் தேவையில்லை. இது நமது கண்முன், சமகாலத்தில், நேற்றைக்கும் இன்றும் காணப்படும் நடைமுறை உதாரணங்களைச் சொல்லியே அக்கட்சியைப் போலிகம்யூனிஸ்டு என்று அம்பலப்படுத்த முடியும், என்பதற்காகத்தான் இப்பின்னூட்டத்தைப் பதிகிறேன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-43619905629927047212010-04-18T11:44:12.193+05:302010-04-18T11:44:12.193+05:30/////இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேய.../////இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஆற்றியிருக்கும் நல்ல காரியங்கள் ஒன்றுகூட உங்கள் கண்ணில் படவில்லையா?//// <br /><br />இந்திய உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, அவர்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற சுரண்டலுக்கு எதிராக உமது கட்சி ஒரு சிறு துரும்பைக் கூட இதுவரை அசைக்கவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து, ஐயா!<br /><br />மாறாக, சுரண்டிக் கொழுக்கும் வர்க்கங்களுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களின் உரிமையை அன்றாடம் பலியிட்டுக் கொண்டிருப்பதுவும் உமது கட்சிதான், ஐயா. <br /><br />நாடாளுமன்றப் பாதையின் மூலம் நீங்கள் சாதித்திருப்பதாகக் கருதுபவற்றை இங்கே பட்டியலிடுங்கள், பரிசீலிப்போம். நீங்கள் ‘சாதனைகள்’ என்று சொல்லிக் கொள்பவற்றை எடுத்து அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுக்கும் பொருத்தமுடியும். நீங்கள் குறிப்பிடுகின்ற சாதனைதான் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குரிய அளவுகோல்கள் என்றால், எம்.ஜி.யார் கூட சிறந்த கம்யூனிஸ்டாகத்தான் தெரிவார். அத்தனை சலுகைகளை அரசுத் திட்டங்கள் என்று காட்டி மக்களைத் திசைதிருப்பிவிட்டு, முதலாளித்துவ சேவையாற்றினார் அவர். ஆனால், மக்களைப் பொருத்தவரை அவர்தான் பாட்டாளி மக்களுக்கான சிறந்த தலைவராகத் தெரிகிறார். <br /><br />எம்.ஜி.ஆரின் மீதான அப்பாவி மக்களின் இத்தகைய மதிப்பீடு தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிபிஎம் கட்சியின் சாதனைகளை அளப்பதற்கு நீங்கள் கொடுக்கும் அளவுகோலால் மக்கள் எம்.ஜி.ஆரையும் அளப்பதால் ஏற்பட்ட விளைவே அது. அதிகமான பொருளாதார ரீதியிலான சலுகைகளையும் ஒரு சில சீர்திருத்தங்களையும் காட்டி “சமூகத்தை மாற்றி விட்டோம் பாருங்கள்.” என்று சொன்னால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-18906327776201743312010-04-18T11:43:49.898+05:302010-04-18T11:43:49.898+05:30நண்பர் மாதவராஜ் அவர்களே!
இங்கு விவாதிக்க எனக்கு வ...நண்பர் மாதவராஜ் அவர்களே!<br /><br />இங்கு விவாதிக்க எனக்கு விருப்பமில்லை, என்றாலும் உங்களால் பதியப்பட்ட கருத்தின் மீது சில கருத்துக்களை நான் பதியவேண்டியது அவசியமாகிவிடுகிறது. அதனால்தான் இத்தனை பின்னூட்டங்களை வரிசையாகப் பதிந்துவருகிறேன். உங்களது பதில் கருத்தை இங்கு பதிவதை நீங்கள் தவிர்ப்பீர்கள் என்றால், வேறு எங்கு எப்போது நாம் விவாதிக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள். கருத்துப் பரிமாற்றமாகவே இவ்விவாதத்தை நான் எடுத்துச் செல்ல முயல்கிறேன். எனது எழுத்து நடையில் காணப்படும் குறைகளைப் பெரிதாக்காமல், பெருந்தன்மையோடு பொறுத்து(!) அதன் கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று பணிவுடன் வேண்டுகிறேன். இனி தொடர்ந்து......<br /><br />/////இந்த முதலாளித்துவ அமைப்பில், இருக்கும் குறைந்தபட்ச அதிகாரத்தோடு, ஒரு மாநில அரசாக, மே.வங்கத்தில் முறையாக நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்திய ஒரு இயக்கத்தை எப்போதேனும், எங்கேனும் ஒரு வார்த்தை நீங்கள் பாராட்டியதுண்டா.//////<br /><br />மே.வங்கத்தில் உமது கட்சி முதலாளித்துவத்திற்கு ஆதரவாகச் செயல்படுவது சுட்டிக் காட்டப்படும்போதெல்லாம், உமது தலைமை அங்கு நடைபெற்றதாகச் சொல்லப்படும் நிலச்சீர்திருத்தத்தைப் பற்றித்தான் அங்கலாய்த்துக் கொள்ளும். விமர்சனத்திற்கு பதில் சொல்லாமல் தப்பித்துக் கொள்வதற்காக நடத்தப்படும் ‘மான்கராத்தே’ வரிகள்தான் இவை.<br /><br />முதலில் மே.வங்கத்தில் நடத்தப்பட்ட நிலச் சீர்திருத்தம் என்பது பிற மாநிலங்களை விட சற்றுக் கூடுதலாக செய்யப்பட்டிருக்கலாம். அதனைக் கொண்டு பிற மாநில அரசுகளை விட மே.வங்க சிபிஎம் அரசு சாதித்துவிட்டதாகவும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அங்குள்ள புறம்போக்கு, உபரி நிலங்கள்தான் நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டனவே தவிர, மே.வங்கத்தை ஆதிக்கம் செலுத்தும் ஜமீர்தார்களான ஜோத்திதார்களுக்கு எதிராக அவர்களிடமிருந்து பிடுங்கி கொடுக்கப்பட்ட சீர்திருத்தமல்ல. <br /><br />நிலச் சீர்திருத்தம் என்பதன் பெயரிலேயே இது ஒரு சீர்திருத்தம் மட்டும்தான் என்பது புலனாகிறது. நிலவுகின்ற சுரண்டல்வாத சமூகக் கட்டமைப்பின் மீது வினையாற்றுவதைத் தவிர்த்து, ”மக்கள் இன்னும் புரட்சிக்குத் தயாராகவில்லை...” என்று அழுக்கப் புளித்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்து, “ஆகவே வெறும் பொருளாதார, சீர்திருத்த போராட்டங்கள் மட்டும் இப்போதைக்குப் போகும்...” என்று நியாயவாதம் பேசுகிறது உமது கட்சியின் தலைமை.<br /><br />ஆனால், ஜிண்டால் என்கிற பன்னாட்டு பகாசூர நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட பழங்குடியின மக்களின் பூமியும், இப்போதைய போராட்டக் களமுமான லால்கார் பகுதியில் உமது சிபிஎம் அரசால் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் அளவு 4,500 ஏக்கர் மட்டுமே. இவை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் புறம்போக்கு நிலத்திலிருந்து மட்டுமே அம்மக்களுக்கு நிலசீர்திருத்தம் என்கிற பெயரில் வழங்கப்பட்டது. ஆனால், இன்று ஜிண்டாலுக்காக அதே பகுதியிலிருந்து 5,000 ஏக்கர் நிலத்தைப் (அதாவது கூடுதலாக 500 ஏக்கர்) பிடுங்கி அம்மக்களை அங்கிருந்து துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கிறது, இந்த சிபிஎம் அரசு.<br /><br />இவையும் உமது கட்சி நிலச்சீர்திருத்தத்தின் மூலம் சாதித்தவைதான். இப்போது சொல்லுங்கள் இப்படிப்பட்ட ’நிலச் சீர்திருத்தத்தை’ பாராட்ட முடியுமா?ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-45969894067715339752010-04-18T11:18:17.793+05:302010-04-18T11:18:17.793+05:30////சிபி.எம் மீது முதலாளித்துவக் கட்சிகளுக்கு இருக...////சிபி.எம் மீது முதலாளித்துவக் கட்சிகளுக்கு இருக்கும் கோபமும், வன்மமும் , ஒரு இடதுசாரி என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற நக்சல்பாரிக்கும் இருப்பது வினோதமானதாகவும், விசித்திரமாகவும் இல்லையா?////////<br /><br />ஐயா, ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் குறித்து நீங்கள் பேசுவது ஒருபுறமிருக்கட்டும். சிபிஎம் கட்சியின் முதலாளித்துவ சார்புத் தன்மையை நான் இங்கே கேள்விக்குட்படுத்தியிருக்கிறேன். <br /><br />மே.வங்க நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக தமது போலீசு துறையைக் கொண்டு சொந்த கட்சித் தோழர்களையே சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட ஜோதிபாசுவின் வர்க்கத் தன்மையையும் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதைக் கண்டும் காணாதமாதிரி புறம் தள்ளிவிட்டு மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடுவது சரியல்லவே!<br /><br />ஏனைய முதலாளித்துவக் கட்சிகளுக்கும் உமது கட்சிக்கும் உரிய வேறுபாட்டை, வெறும் கட்சியின் பெயர் சார்ந்த அடையாளங்களோடு அல்லாமல் வர்க்கத் தன்மையோடு விளக்குங்கள்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-76752863837974920412010-04-18T11:18:06.539+05:302010-04-18T11:18:06.539+05:30///////உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சுமத்தும் பழ...///////உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து சுமத்தும் பழிகள் (இங்கே நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விஷயங்கள் உட்பட) மே.வங்க அரசை குறிவைத்தே இருக்கின்றன./////<br /><br />இருக்கட்டும்; அதற்கான உங்களது பதில் இவ்வளவுதானா?!<br /><br />சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக, பன்னாட்டு பகாசூர நிறுவனங்களின் கொள்ளைக்காக ஏழைகளை வஞ்சிக்கும், ஒரு ஆளும் வர்க்கச் சேவக அமைப்பினை போலி கம்யூனிஸ்டு என்று அழைப்பதற்கு மாற்றாக வேறு ஏதேனும் ‘நாகரீகமான’ பெயர் இருந்தால் நீங்களே அறிமுகப்படுத்துங்கள், ஐயா!<br /><br />////இந்திய முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் இயங்குகின்றன எனச் சொல்லியபடி, மே.வங்கத்தை நோக்கியே உங்கள் கைகள் நீள்கின்றன./////<br /><br />மேற்குவங்கத்தில் சிபிஎம் நீண்ட நாட்களாக ஆளும் கட்சியாக இருப்பதனால் அதன் செயல்பாடு என்ன புனிதமானதாக ஆகிவிடுமா? இந்த ஒரே காரணத்தைச் சொல்லி “இந்த அளவுக்கு புனிதமான கட்சியைப் போய் விமர்சித்துவிட்டீர்களே...” என்று உடனே ஆத்திரப்படுகிறீர்களே. அவ்விமர்சனங்களுக்கான பதிலைச் சொல்லிவிட்டு கோபப்படுங்கள், ஐயா. <br /><br />சிங்கூர் ஒப்பந்தங்களின் இருட்டுப் பக்கங்களுக்குள் உங்கள் கட்சியால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இரகசியங்களை எமக்கு அறியத்தாருங்கள். (இங்கு வேண்டாம் பிறிதொரு சமயத்திலேனும்)<br /><br />மம்தாவுடன் கூட்டு என்கிற உங்கள் கட்சியின் பம்மாத்து நாடகமெல்லாம் அங்குள்ள பழங்குடியின மக்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. மம்தாவுடன் உமது காம்ரேடுகள் கூட்டணி கட்டிக் கொண்டு ரியல் எஸ்டேட் கொள்ளை நடத்தி ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களை வீடற்றவர்களாக வீதியில் வீசியிருக்கிறார்கள். மே.வங்கத்தின் ராய்காட் பகுதியில் தான் இந்த அக்கிரமங்கள் நடைபெற்று வழக்குகளாகி அம்பலப்பட்டுள்ளது. <br /><br />மாவோயிஸ்டு கட்சியுடன் அந்த பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம் ஏகாதிபத்திய-முதலாளித்துவ சூறையாடலுக்கு எதிரான வர்க்கப்போராட்டம். உங்கள் கட்சிக்கு எதிராக மம்தாவும், அல்லது மம்தா கட்சிக்கு எதிராக உமது கட்சியும் நடத்திக் கொண்டிருக்கும் குழாயடிச் சண்டை ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பு நடத்துவதற்கான வெட்டிப் போராட்டம். வர்க்கப்போராட்டத்தின் சமூக அடித்தளத்தை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் உமது கட்சி அதனையும் ஏதோ ஒரு ஓட்டுக்கட்சியுடன் நடைபெறும் சாதாரண மோதலாகச் சித்தரிக்கிறது.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-80366621227910469992010-04-17T13:51:33.859+05:302010-04-17T13:51:33.859+05:30/////இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்.../////இந்த அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற துடிப்பில், இடதுசாரிச் சிந்தனைகளோடு அளப்பரிய தியாகங்களும், போராட்டங்களுமே வாழ்க்கையாய் அமைத்துக்கொண்ட எத்தனையோ பேரை ஒரு வார்த்தையில் கேலி செய்வது முறையா?/////////<br /><br />அவ்வாறு தியாகம் செய்த தோழர்கள் நினைத்திருப்பார்களா, தாம் தமது உயிரை விட அதிகமாக நேசித்த அரிவால் சுத்தியல் பொதித்த செங்கொடி, கேவலம் ரெண்டு,மூன்று சீட்டுகளுக்காக புரட்சித்தலைவியின் ’ஆசி’பெற்ற சின்னமாக தமது கட்சியால் அறிவிக்கப்படும் என்று!<br /><br />தமது இரத்தமும் சதையுமாகக் கட்டிக் காத்த கட்சி, (உ.ரா.வரதராசன் கடைசியாக பிரகாஷ்காரத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல்) பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் ’யோக்கியர்’களால் தலைமை தாங்கப்படுமென்று!<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தகைய தோழர்களின் தியாகங்களின் மீது சிறுநீர் கழிக்கின்ற அரசியல் நடைமுறையை வைத்திருக்கும் அக்கட்சியினைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது, என்பது எனது தாழ்மையான கருத்து.<br /><br />தோழமையுடன்,<br />ஏகலைவன்.<br />http://yekalaivan.blogspot.comஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-29068832653474617612010-04-17T13:51:03.685+05:302010-04-17T13:51:03.685+05:30////////மாதவராஜ் said...
நொந்தகுமாரன்!
ம.க.இ.க ம...////////மாதவராஜ் said... <br />நொந்தகுமாரன்!<br /><br />ம.க.இ.க மட்டும் வார்த்தைக்கு வார்த்தை, மூச்சுக்கு முன்னூறு தடவை போலிக் கம்யூனிஸ்டுகள் எனச் சொல்வது சரியா?////<br /><br />நண்பர் மாதவராஜ் அவர்களே!<br /><br />சிபிஎம் / சிபிஐ கட்சிகள் மீதான போலி கம்யூனிஸ்டு என்கிற எமது மதிப்பீடு, வெறும் வசைபாடலோ அல்லத் கேலியோ அல்ல. ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குரிய, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சிக்குரிய தன்மைகள் இல்லாத நிலையிலும், அக்கட்சிகளின் பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடிப்பதாக இருக்கின்ற காரணத்தினாலும் மட்டுமே அவர்களை கம்யூனிச போலிகள் என்று மதிப்பிட வேண்டியுள்ளது.<br /><br />1967-ல் நக்சல்பரி எழுச்சி ஏற்பட்ட போது, சிபிஎம் கட்சியின் விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த தோழர்கள் மே.வங்க ‘ஜோத்திதார்கள்’ எனப்படும் நிலவுடைமைக் கொடுங்கோலர்களுக்கு எதிராகப் போராடுகின்றபோது, அதே கட்சியின் தலைமையில் இருந்த ஜோதிபாசு (தன்னுடைய போலீசு துறை மூலம்) சொந்த கட்சியின் அணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி,அந்த நிலவுடைமையாளர் வீட்டு ஏவல் நாயாக நடந்துகொண்டது, எதைக்காட்டுகிறது? அக்கட்சியின் பாட்டாளி வர்க்கத்தன்மையையா?<br /><br />ப.சிதம்பரம் என்கிற ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியுடன் இரண்டற கலந்து கொண்டு ‘பசுமை வேட்டை’ அல்லது ‘காட்டு வேட்டை’ எனப்படும், ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரை நடத்திவருகிற மாநில அரசுகளில், மேற்குவங்க சிபிஎம் அரசும் ஒன்று. ஏழை, எளிய பழங்குடி மக்களை காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கு, தாதுக்களும் கனிம வளங்களும் மண்டிக்கிடக்கும் காடுகளையும் மலைகளையும் சொந்தமாக்குவதற்காக போலீசையும் இராணுவத்தையும் ஏவுகின்ற ஆளும் வர்க்கப் பணியில், ‘கம்யூனிஸ்ட்’ என்று பெயர் மட்டும் வைத்திருக்கும் கட்சி, இன்முகத்துடன் ஈடுபட்டிருக்கும் போது அதனை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள், நண்பரே? <br /><br />காங்கிரசும், பாஜகவும் இதர ஓட்டுக் கட்சிகளும் தத்தமது ஏகாதிபத்திய, முதலாளித்துவ சார்புத்தன்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது போல, இந்தக் கம்யூனிச போலிகள் ஒப்புக்கொள்வதில்லை, மாறாக பாட்டாளிகளைப் பாதுகாக்க வந்த பரமாத்மாவாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, பச்சையாக, சிறிதும் கூச்சமின்றி ஏகாதிபத்திய சேவையாற்றி வருகிறார்கள்.<br /><br />சிங்கூரின் ஆயிரம் ஏக்கர் நிலத்தை டாட்டாவுக்கு வழங்கி, கார் தொழிற்சாலைக்காக சிபிஎம் அரசால் போடப்பட்ட ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’, காலாவதியாகிவிட்ட பிறகும் கூட இன்று வரை அந்த ஒப்பந்தங்களை அக்கட்சியின் அரசு இரகசியமாகவே வைத்திருக்கிறதே இதன் பொருள் என்ன? <br /><br />தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை, குறைந்த பட்ச செயல்திட்டத்தின் மூலமாகவும், தமது கட்சியின் நாடாளு மன்றப் பாதையின் மூலமாகவுமே சாதித்துப் பெற்றதாகப் பெருமை பேசிக்கொண்டார்கள், சிபிஎம் தலைவர்கள். அதே த.அ.உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கூட டாட்டாவுடன் கொல்லைப்புறமாகப் போடப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களைப் பெறமுடியவில்லை. அதற்கும் தடை வாங்கி வைத்திருக்கிறார்கள்.<br /><br />இவர்களால் புனிதம், புனிதம் என்று உயர்த்திப்பிடிக்கப்படும் நாடாளுமன்றத்திலும் அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் கூட விவாதங்களுக்கு அப்பாற்பட்ட இரகசியங்களாகவே அந்த அடிமைச் சாசனங்கள் (புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) பராமரிக்கப்படுகின்றன. <br /><br />காலாவதியாகி, இரத்து செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் விபரங்களையே பரம இரகசியமாக வைத்திருக்கும் இவர்கள், நந்திகிராம், லால்கார் இன்னும் இன்னும் எத்தனையெத்தனையோ ஒப்பந்தங்கள் குறித்து ஏதேனும் வாய்திறப்பார்களா?<br /><br />ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கு விளைநிலங்களைப் பறித்து, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை சி.பொ.ம. என்கிற பெயரிலும், தொழில் வளர்ச்சி என்கிற புனைவின் மூலமாகவும், ஒரே ஒரு முதலாளிக்காக பலியிட்டுக் கொடுக்கின்ற ஒரு ஆளும்வர்க்க கூட்டம், கம்யூனிசத்தின் பெயரால் செயல்படுகிறதென்றால், அக்கூட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும், ஐயா?ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6469981259119709842.post-51456922605741110202010-04-07T20:08:23.979+05:302010-04-07T20:08:23.979+05:30சுயசிந்தனை உள்ளவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள் தோழ...சுயசிந்தனை உள்ளவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள் தோழர்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.com